articles

பாடப்புத்தகத்தில் விடுதலை வீரர்களின் வரலாறு

சென்னை,அக்.28- தமிழ்நாடு விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாறுகள் பாடநூல்க ளில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள் ளதாக அண்மையில் நடைபெற்ற மருது சகோதரர்களின் விழாவில்  ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தி ருந்தார்.

ஆளுநரின் இந்த கருத்துக்கு அரசி யல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது தமிழ்நாடு  பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கண்டனம் தெரிவித்துள் ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கை பின்வருமாறு :-

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு பாடநூல்களில் விடுதலைப் போராட்ட தியாகிகள் குறித்து வரலாற்று பாட நூல்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்ற ஒரு அபாண்டமான பழி சுமத்தியிருப்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு, கண்டனத் திற்குரியது. ஆளுநர் அவ்வாறு கூறும் போது குறைந்த பட்சம் தமிழ்நாடு பாட நூல்களை படித்து பார்த்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால்  பாட நூல்களை தினமும் மாணவர்க ளுக்கு போதித்து வரும் ஆசிரியர்களி டம் கேட்டிருக்க வேண்டும்.

இரண்டையும் செய்யாமல் ஏனோ தானோ என்று உயர் பொறுப்பில் இருக்கும் ஆளுநர் பேசியிருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

6 ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்த கத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தி, கர்ம வீரர் காமராஜர், முண்டாசு கவி ஞன் பாரதியார், வீரமிகு வேலு நாச்சியார் ஆகியோர் தியாக வரலாறு கள் இடம் பெற்றுள்ளன.  7 ஆம் வகுப்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பர னார், பசும்பொன் உ. முத்துராம லிங்கனார், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ஆகியோரின் விடு தலைப் போராட்ட தியாகங்களும், 8 ஆம் வகுப்பில் அரசியல் சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கர் பங்க ளிப்பும் இடம்பெற்றுள்ளது.

 9ஆம் வகுப்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், தந்தை பெரியார், மூவலூர் இராமாமிர்தம்  அம்மையார் ஆகியோர் வரலாறுகளும் இடம் பெற்றுள்ளன.

10 ஆம்  வகுப்பு பாடநூலில் திலகர், கோகலே, வ.வே.சு, பிபின் சந்திர பால், மோதிலால் நேரு, விபின் சந்திரர், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் வினோபா பாவே, பட்டாபி சீதாராமையா, அருணா ஆசப் அலி, சத்தியமூர்த்தி, மூதறிஞர் ராஜாஜி, தமிழறிஞர் திரு.வி.க. என எண்ணற்ற தியாக வரலாறு கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், 10 ஆம் வகுப்பு வர லாற்றுப் பாடப் புத்தகத்தில் குயிலி,  தீரன் சின்னமலை, ருக்மிணி லட்சுமி பதி, பூலித்தேவன், ஒண்டிவீரன், வீர பாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் உள்ளிட்ட பல விடுதலைப் போராட்ட தியாகிகள் பங்க ளிப்பும்,  11-ம் வகுப்பில் திப்பு சுல்தான், ஜான்சி ராணி, லட்சுமி பாய் ஆகிய விடு தலை வீரர்கள் பங்களிப்பும், 12-ம் வகுப்பில் வாஞ்சிநாதன், சுப்பிரமணிய  சிவா, மவுலானா அபுல் கலாம் ஆசாத், அலி சகோதரர்கள், ஜவஹர்லால் நேரு, ஆசாத், பகத் சிங், உள்ளிட்ட பலரின் விடுதலைப் போராட்ட வர லாறுகள் மிக அழகாக எடுத்துரைக்கப் பட்டுள்ளன.

ஆனால் இந்த வரலாறு எல்லாம் படித்து பார்க்காமல்- படித்துப் பார்க்கும் ஆர்வம் காட்டாமல் விடு தலைப் போராட்ட வீரர்களை சிறப் பித்து வரும் எங்கள் தமிழ்நாடு  அரசை குறை காண வேண்டும் என்ற குதர்க்க எண்ணத்தோடு தமிழ்நாடு ஆளுநர் ஆற்றியிருப்பது உரை அல்ல. அந்தப் பதவிக்கு பொரு த்தமில்லாத ஆதாரமற்ற அரசியல் பேச்சு. இவ்வாறு அவர் தெரிவித்தி ருக்கிறார்.