உலகளவிலான அறிவியலாளர்களை ஈர்க்கும் வகையில் இந்திய நாடு இல்லை!
நோபல் விருது பெற்ற விஞ்ஞானி வேதனை
அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு அந்நாட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. ஏற்கெனவே தொடர்ந்து வந்த பல அறிவியல் ஆராய்ச்சித் திட்டங்களை நிறுத்துதல், ஆயிரக்கணக்கான அரசுப் பணியில் உள்ள விஞ்ஞானிகளை பணிநீக்கம் செய்தல், அரசு வழங்கி வந்த அறிவியல் ஆராய்ச்சிக்கான மானியங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறது. இதற்கு முன்பு வரை வழங்கி வந்த நிதியிலிருந்து தற்போது 8 பில்லியன் டாலர் அளவிற்கு நிதியை குறைத்துள்ளது. அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத் திற்கு (NIH) அடுத்த ஆண்டு கிட்டத்தட்ட18 பில்லியன் டாலர் அளவில் குறைக்க திட்டமிடப் பட்டுள்ளது, தேசிய அறிவியல் அறக்கட்ட ளைக்கு (NSF) அடுத்த ஆண்டு சுமார் 5 பில்லியன் டாலர் வரையும் நிதி குறைப்புகள் நடைபெறும் என அறிவித்துள்ளது, 2026 ஆம் ஆண்டிற்கான நாசாவின் (NASA-)பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 25% குறைக்கப்போவதாகவும் மற்றும் பல பல்கலைக்கழகங்களுக்கான மானி யங்களில் பில்லியன்கணக்கான டாலர்கள் இனி ஒதுக்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதனால் பல அமெரிக்க விஞ்ஞானிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். பிற நாடுகளுக்கு குடிபெயர திட்டமிட்டுள்ளனர். நேச்சர் கேரியர்ஸ் நடத்திய பகுப்பாய்வின்படி, மார்ச் 2024 ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள காலியிடங்களுக்கான விண்ணப்பங் களில் சுமார் 32% அமெரிக்க விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாம். இந்த நிதி குறைப்பு பற்றி கருத்துச் சொன்ன அமெரிக்கர்களில் 75% பேர் “நாட்டை விட்டு வெளியேற ஆர்வமாக” இருப்பதாக நேச்சர் கருத்துக் கணிப்பு வெளி யிட்டுள்ளது. போட்டி போடும் வகையில் இல்லை அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு பிறகு ஒரு சில ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவி லிருந்து ஆராய்ச்சியாளர்களை ஈர்ப்பதற்காக சிறப்பு நிதியை வழங்குவதாக அறிவித்துள்ளன. ஆனால் அமெரிக்க நிதி குறைப்பின் அளவு ஐரோப்பாவில் வழங்கப்படுவதாக சொல்லப் படும் நிதியை விட குறைவாக இருப்பதாலும், ஐரோப்பாவில் நிதிநிலைமை சீரற்ற நிலையில் இருப்பதாலும், அமெரிக்காவைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானிகள் அதிக எண்ணிக்கையில் ஐரோப்பாவிற்கு செல்ல வாய்ப்புகள் குறைவு தான். எனினும் “சில விஞ்ஞானிகள் இடம்பெயர் வார்கள், ஆனால் பெருமளவில் மக்கள் வெளியேறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. ஐரோப்பாவில் பெறும் சம்பளம் அமெரிக்கா வில் உள்ளவர்களை விட மிகக் குறைவு. இரண்டாவதாக, தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் இடம்பெயர்வது எப்போதும் கடினம். அமெரிக்கா இன்னமும் அறிவியல் வளர்ச்சியில் முன்னணி நாடாக உள்ளது, எனவே உடனடியாக விஞ்ஞானிகள் அதை விட்டு வெளியேறுவது கடினம். 25 ஆண்டு களுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து இங்கி லாந்துக்கு குடிபெயர்ந்த ஒருவராக நான் இதைச் சொல்கிறேன், அங்கு நான் சம்பாதித்த சம்பளத்தில் பாதிக்கு சற்று அதிகமாகத்தான் இங்கிலாந்தில் சம்பளமாக பெற்றேன்,” என்று நோபல் பரிசு பெற்ற இங்கிலாந்தின் கேம்பிரி ட்ஜில் உள்ள எம்ஆர்சி மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தின் பேராசிரியர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தி இந்துவுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறியுள்ளார். ஈர்க்கும் நாடாக இல்லை இந்த வகையில் ஒப்பிடுகையில், இந்தியா வில் IISc, NCBS, TIFR, IISERகள் மற்றும் IITகள் போன்ற ஒரு சில அறிவியல் நிறுவனங்களை மட்டுமே வைத்துள்ளன, அவை அமெரிக்க விஞ்ஞானிகளை ஈர்க்க வாய்ப்புள்ளது. எனினும் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற நிறு வனங்களான இதில் “சில குறிப்பிட்ட பிரிவுகளில் மட்டுமே உலகத் தரம் வாய்ந்தவையாக காணப் படுகின்றன”. மேலும் “சர்வதேச அளவிலான அறிவியல் சார்ந்த பணிகளுக்கு ஏற்ற வகையில் ஈர்க்கும் விதமான அம்சங்கள் கொண்ட நாடாக இந்தியாவை நான் பார்க்கவில்லை,” என்று விஞ்ஞானி ராமகிருஷ்ணன் கூறுகிறார். இந்தியாவில் அறிவியலுக்கான நிதி ஓரளவு அளவில் அதிகரித்திருந்தாலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஒதுக்கப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதம் உண்மையில் குறைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் ஆராய்ச்சி மற்றும் மேமபாட்டிற் கான (RESEARCH&DEVELOPMENT) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6-0.7% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்களை ஈர்ப்பதற்கு முற்றிலும் அவசியமான அடிப்படை ஆராய்ச்சிக்கான நீண்டகால உறுதியான நிதி யுதவியுடன் கூடிய நடவடிக்கைகள் தேவை, ஆனால் தற்போதுள்ள நிதி ஒதுக்கீடு போது மானதாக இல்லை. எனவே அமெரிக்காவின் சூழ்நிலையை இந்தியா பயன்படுத்திக் கொள்ள முடியுமா? என்பது கேள்விக்குறி. “மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு பகுதியாக இந்தியா வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான முதலீடு என்பது சீனாவை விட பல மடங்கு குறைவு, மேலும் பல வளர்ந்த நாடுகள் கொண்டுள்ளதை விட மூன்றில் ஒரு பங்கு அல்லது அதற்கும் குறைவாகத்தான் இந்தியா ஒதுக்கியுள்ளது, தென் கொரியா போன்ற நாடுகளை விட மிகக் குறைவாகவும் உள்ளது. கணிசமான அதிகரிப்பு இல்லாமல் இதில் போட்டி போட முடியாது” என்று விஞ்ஞானி ராம கிருஷ்ணன் கூறுகிறார். நிதி பற்றாக்குறை விஞ்ஞானிகள் அமெரிக்காவை விட்டு இந்தியாவில் பணிபுரியும் அளவிற்கான சூழல் இன்னும் அமையவில்லை. சர்வதேச விஞ்ஞா னிகளுக்கான ஊதியம், உள்கட்டமைப்பு வசதி அல்லது இந்தியாவில் உள்ள பொதுவான சூழல் எதுவுமே கவர்ச்சிகரமானதாக இல்லை. இந்தியாவில் குறிப்பிட்ட பகுதிகள் எ.கா. “வெப்ப மண்டலத்தில் ஏற்படும் நோய்கள், மற்றும் சூழலியல் பிரச்சனைகள் போன்றவை அறி வியல் ஆய்வுக்குரிய பகுதிகளாக இருந்தாலும் மேற்கத்திய நாடுகளில் தான் விஞ்ஞானிகள் களப்பணிகளைச் செய்வதை விருப்பமாக கருது கிறார்கள்.” ஐரோப்பிய நாடுகளா அல்லது இந்தியாவா எதில் பணியாற்ற விருப்பம் என்ற கேள்வியெழுப்புவோமெனில் ஐரோப்பிய நாடுகளைத்தான் விஞ்ஞானிகள் தேர்வு செய்வார்கள். இந்திய அறிவியலில் சில முக்கிய சிக்கல்கள் தொடர்ந்து நீடிக்கிறது, ஒவ்வொரு ஆண்டும் நிதி வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது, ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு வருடம் வரை உதவித்தொகை வழங்கப்படவில்லை மற்றும் விஞ்ஞானிகளுடன் முக்கிய விவாதங்கள் எது வும் இல்லாமல் நாட்டிற்கான அறிவியல் கொள்கைகள் மாற்றப்படும் விசித்திரமான சூழல் இங்கு நிலவுகிறது. குறைந்தது மூன்று ஆண்டு கள் சர்வதேச முதுநிலை பயிற்சியுடன் வெளி நாடுகளில் வாழும் விஞ்ஞானிகளின் வருகை யை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட ராமலிங்கசாமி என்ற பெயரில் அமல்படுத்தப் படும் திட்டமும் கூட திடீர் கொள்கை மாற்றங் களால் தடைபட்டுள்ளது. தற்போது, பிற நாடு களைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானிகளை ஈர்க்க எந்த தேசியக் கொள்கைகளும் இல்லை. “வெளி நாட்டு இந்திய விஞ்ஞானிகளை மீண்டும் இந்தியாவிற்கு ஈர்ப்பதில் இந்தியா ஆர்வமாக இருக்குமென்றால், பல முக்கிய சலுகைகளை வழங்க வேண்டும். போதுமான முதலீடு மற்றும் உறுதியான அர்ப்பணிப்புடன், அதைச் செய்ய முடியும் என்பதை சீனா நமக்கு எடுத்துக் காட்டி யுள்ளது” அவற்றை பின்பற்ற வேண்டுமென்று அவர் கூறுகிறார். எதிர்மாறான நிலை இந்தியாவில் நிதியுதவி முக்கியமாக DBT, ICMR, DST மற்றும் SERB போன்ற அரசு நிறுவனங்களிடமிருந்து கிடைக்கிறது. தனியார் பங்களிப்பு இதில் மிகக் குறைவு. 2021 ஆம் ஆண்டில் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக் கட்டளைக்கு அரசாங்கம் ரூ.50,000 கோடியை அறிவித்தது. டிசம்பர் 2024 இல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் அமைச்சகத்தின் (தனிப்பொறுப்பு) இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மக்களவை யில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 2023-2028 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.14,000 கோடி மட்டுமே அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மீதமுள்ள ரூ.36,000 கோடியை பொது மற்றும் தனியார் துறைகள், தொண்டு நிறுவனங்கள், அறக்கட்ட ளைகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் உட்பட “ பிற வழிமுறைகளிலிருந்து நன்கொடைகள்” மூலம் திரட்டிக்கொள்ள வேண்டும் என அறி வித்தார். “பல வளர்ந்த நாடுகளில், தனியார் மற்றும் பொது முதலீட்டின் விகிதம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட தாக உள்ளது. ஆனால் இந்தியாவில், இது கிட்டத்தட்ட எதிர்மாறாக உள்ளது. இது உண்மை யில் இந்திய தொழில்துறையின் தோல்வி யாகும்” என்று விஞ்ஞானி ராமகிருஷ்ணன் மேலும் கூறுகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு, சிங்கப்பூர் அரசாங்கம் மூத்த விஞ்ஞானிகளை நிரந்தரமா கவோ அல்லது சிறப்பு அழைப்பாளராகவோ பங்களிப்பு செய்ய வெற்றிகரமாக ஈர்த்தது. குறைந்த வரிகள் மற்றும் சிறந்த அறிவியல் உள்கட்டமைப்புடன் கூடிய அதிகச் சம்பளம் இதற்கு முக்கியக் காரணம். சிங்கப்பூர் சுத்த மாகவும், சிறந்த பள்ளிகள், சுகாதாரம், பொது போக்குவரத்து ஆகியவை பாதுகாப்புடன் சிறப்பாக நடத்தப்படுகிறது, மேலும் வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு விரும்பத்தக்க இடமாக மாறியுள்ளது என் கிறார். மறுபுறம், விஞ்ஞானிகள் 1930களில் ஜெர்மனியிலிருந்து அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர், ஏனெனில் அவர்கள் தனிப்பட்ட வகையில் ஆபத்தில் இருந்தனர். ‘தற்காலிக நன்மை’ மற்ற நாடுகளைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி களை ஈர்க்கவும், ஏற்கனவே இந்தியாவில் பணி புரியும் திறமையானவர்களை ஊக்குவிக்கவும், அவர் இரண்டு முக்கியமான அம்சங்களை வலியுறுத்துகிறார்: “இந்திய நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு வலுவான, நிலையான அர்ப்பணிப்புடன் கூடிய நடவடிக்கைகள் தேவை, அதாவது அதிக நிதி மட்டுமல்ல, அதிக அளவு தொடர்ந்து கிடைக்கக் கூடிய நிலையான நிதி, மிகச் சிறந்த உள்கட்ட மைப்பு வசதி, முக்கியமாக, அரசியல் மற்றும் அதிகப்படியான அதிகார வர்க்கத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளிலிருந்து அறிவி யலை விலக்கி வைத்து பாதுகாக்க வேண்டும்.” சமூகக் காரணிகளைப் பற்றி அவர் கூறும் போது: “வெளிநாட்டிலிருந்து விஞ்ஞானிகளை (குறிப்பாக இந்தியர்கள் அல்லாதவர்களை) ஈர்ப்பதில் பின்னடைவு உள்ளது. இன்று, பணக்கார இந்தியர்கள் இந்தியாவின் பொது இடங்களிலிருந்து விலகிவிட்டனர். இன்று, தெருக்கள் அசுத்தமாகவும் குப்பைகளால் நிரம்பியதாகவும் உள்ளன, நடைபாதைகள் செல்ல முடியாதவையாகவும் மற்றும் பெரும்பாலான நகரங்களில் காற்று சுவாசிக்க முடியாததாக உள்ளது... இந்தியர் அல்லாத எந்த நபர்கள், தங்களுக்கும் தங்கள் குழந்தை களுக்கும் பலவீனமான முறையில் உள்ள வாழ்க்கையை விரும்புவார்கள்?” இருப்பி னும், பல சவால்கள் இருந்தபோதிலும், இந்தியா வில் அறிவியலுக்குப் பங்களிக்கும் ஆராய்ச்சி யாளர்களை உண்மையில் பாராட்டுகிறேன். “இந்தியாவில் எனக்கு பல அறிவியல் நண்பர்கள் உள்ளனர், மேலும் அவர்கள் இவ்வளவு கடினமான சூழ்நிலைகளில் இவ்வ ளவு நல்ல வேலைகளைச் செய்து, மகிழ்ச்சி யாக இருப்பதைக் கண்டு நான் எப்போதும் வியப்படைகிறேன். இளம் இந்தியர்கள் மிகவும் திறமையானவர்களாகவும் உற்சாகமானவர் களாகவும் உள்ளனர், ஆனால் அவர்கள் ஒட்டு மொத்த நாட்டாலும் ஏமாற்றப்படுகிறார்கள். இந்தியாவில் மக்கள்தொகை அதிகமாக உள்ளது. இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் கொண்ட நாடாகவும் உள்ளது. “இருப்பி னும், இது ஒரு தற்காலிகமான பலனை கொடுக்கும், ஒருவேளை இந்தியா இதை வீணடித்தால், எதிர்காலத்தில் மற்ற ஆசிய நாடுகள் மற்றும் மேற்கு நாடுகளுடன் போட்டி யிட முடியாமல் போகலாம்” என்று அவர் எச்சரிக்கிறார். நன்றி : தி இந்து (ஆங்கிலம்) தொகுப்பு: ஆர். பிரசாத் தமிழில்: மோசஸ் பிரபு