இந்துத்துவா கருத்தியலை மறுக்கும் கீழடி தரவுகள்
கீழடி தொல்லியல் ஆய்வாளர் திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களை நொய்டாவுக்கு ஒன்றிய அரசு இடம் மாற்றம் செய்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு அவர் உருவாக்கிய கீழடி ஆய்வ றிக்கையை வெளியிட மேலும் அறிவியல் ஆதா ரங்கள் தேவை என ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார். அதற்கு முன்னதாக கீழடி ஆய்வ றிக்கையில் திருத்தங்கள் தேவை என ஒன்றிய அரசு வலியுறுத்தி அதனை திரு. அமர்நாத் அவர்கள் மறுத் தார். இந்த நிகழ்வுகளின் தொடரை கவனிக்கும் பொழுது திரு. அமர்நாத் அவர்களின் இடமாற்றம் வழக்கமான நிர்வாக செயல் அல்ல எனும் முடி வுக்கே வர இயலும். கீழடித் தரவுகள் ஏன் ஒன்றிய அரசுக்கு கசப்பானதாக உள்ளது? ஏனெனில் ஒன்றிய அரசும் அதற்கு வழிகாட்டும் சங் பரிவாரமும் கட்ட மைக்க முயலும் “ஒரே தேசம்-ஒரே பண்பாடு-ஒரே மதம்- ஒரே மொழி” எனும் இந்துத்துவா ஒற்றை தன்மை க்கு இதுவரை கிடைத்துள்ள கீழடித் தரவுகள் ஒத்தி சைந்ததாக இல்லை.
இந்து மதமும் இந்துத்துவா கருத்தியலும்
இந்து மதமும் இந்துத்துவா கருத்தியலும் ஒன்றல்ல! இந்துத்துவா கருத்தியலை நிலைநாட்ட பல முனைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன என ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற சிபிஐ(எம்) அகில இந்திய மாநாடு தனது அரசியல் தீர்மானத்தில் குறிப்பிடுகி றது. இந்துத்துவா சித்தாந்தத்தை இந்திய அரசின் சித்தாந்தமாக மாற்றுவதும் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசை இந்து ராஷ்டிராவாக மாற்றுவதும் ஆகிய இரு இலக்குகள்தான் ஆர்எஸ்எஸ்சின் நிகழ்ச்சி நிரல். ஆனால், இந்து மதத்தின் சிறப்பம்சம் என்னவெ னில் அது ஒற்றைத்தன்மை கொண்டது அல்ல; பன்மு கத்தன்மை பண்பாடுகளை கொண்டது. பல்வேறு தெய்வங்கள்/ பல வழிபாட்டு முறைகள்/ பல்வேறு தத்து வங்கள்/ பண்பாட்டின் பல வெளிப்பாடுகள் என்பது இந்து மதத்தின் தனித்தன்மை ஆகும். இந்தியாவில் ராமருக்கும் கோவில் உண்டு; ராவணனுக்கும் கோ வில் உண்டு. ஆனால் இந்துத்துவா முன்வைக்கும் ஒட்டு மொத்த ஒற்றை இந்து அடையாளம் என்பது அந்த பன்முகத்தன்மையை மறுப்பது ஆகும்.
மொழி சார்ந்த பண்பாடுகளின் பன்முகத்தன்மை
இந்த ஒற்றைத் தன்மை அடையாளத்துக்கு இன்னொரு தடைக்கல்லாக இருப்பது மொழி சார்ந்த பண்பாட்டு அடையாளம். இந்தியாவில் அரசியல மைப்புச் சட்டம் அங்கீகரித்த முக்கிய மொழிகள் 22. மேலும் குறைந்தபட்சம் 10 லட்சம் மக்கள் பேசும் மொழிகள் 150க்கும் அதிகமாக உள்ளன என மதிப்பி டப்பட்டுள்ளது. இந்த மொழிகள் ஒவ்வொன்றும் தமக்கென பண்பாட்டுத் தனித்துவத்தை பெற்றுள்ளன. இந்த மொழிகளை பேசும் மக்கள் தமது பண்பாட்டுச் சூழலின் அடிப்படையில்தான் பல பிரச்சனைகளை நோக்குகின்றனர். இவற்றை கீழ்க்கண்ட தரவுகள் நிலைநாட்டுகின்றன: திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்த தென் பகுதி மக்களும் இந்தோ ஆரிய மொழி குடும்பத்தைச் சேர்ந்த வட பகுதி மக்களும் சில முக்கிய பண்பாட்டு அடை யாளங்களை ஒரே மாதிரியாக பார்க்கவில்லை என்ப தையே இந்த தரவுகள் வெளிப்படுத்துகின்றன. அதே வேளையில் இந்துத்துவா தனது நோக்கத்தில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது என்பதும் புலனாகிறது. “இந்துத்துவா மதவாத நிகழ்ச்சி நிரல் சாதாரண மக்களின் ‘பொதுப் புத்தியின்’ ஒரு பகுதியாக மாறும் வரை அது வெற்றி அடையாது” எனவும் மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை மாநாட்டு தீர்மானம் குறிப்பிடுகிறது. இத்தகைய பொது புத்தியின் ஒரு பகுதியாக இந்துத்து வாவை மாற்றுவதில் கீழடித் தரவுகள் ஒரு தடையாக உள்ளன என சங் பரிவாரம் கருதுகிறது. எனவேதான் கீழடி மட்டுமல்ல, அது போன்ற பல ஆய்வுக ளுக்கும் தரவுகளுக்கும் முட்டுக்கட்டைகள் உருவாக் கப்படுகின்றன.
மொழி சார்ந்த பண்பாட்டு பிரிவினையா?
கீழடி அறிக்கை குறித்து தனது எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ள ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் “உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சி கள், அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்க ளும் தங்களுடன் சேர்ந்து பெருமைகொள்வோம். ஆனால் இன்றைய அறிவியல் உலகின் ஏற்றுக்கொள் ளலுக்கு, எங்களுக்கு இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை” என முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கூறுகிறார். கீழடி அறிக்கை அறிவியல் பூர்வமானதாக எப்படி இல்லை என்பதை அமைச்சர் விளக்கவில்லை. மேலும் இன்றைய அறிவியல் உலகம் இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு ஆதாரங்கள் இல்லை எனவும் கூறுகிறார். இவர் சொல்லும் அறிவியல் உலகம் என்பது எது? எந்த ஆய்வாளர்கள் கீழடி அறிக்கைக்கு ஆட்சேபணை தெரிவித்தார்கள் என்பதும் அமைச்சர் குறிப்பிடவில்லை. கீழடி அறிக்கை ஆய்வாளர்களி டையே பரவலாக விவாதிக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு, அந்த அறிக்கையை வெளியிட வேண்டு மல்லவா? அறிக்கையை வெளியிடாமல் அறிவியல் உலகம் ஏற்கவில்லை என குறிப்பிடுவது எப்படி பொருத்தமாக இருக்கும்? அறிக்கை குறித்து ஆட்சே பணைக் கருத்துகள் சொல்லப்பட்டு இருந்தால் அவற்றை வெளியிட்டால்தானே, எது சரி எனும் விவாதம் நடக்கும்! மேலும் அமைச்சர் கூறுகிறார்: “தமிழ்நாடு பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியா கும் - பிரிவினை உணர்வுகள் மூலம் அல்லாமல், நேர்மையான அறிவின் மூலம் அதன் பாரம்பரி யத்தை பெருமைப்படுத்த வேண்டும்.” மொழி சார்ந்த வளமான பண்பாட்டைப் பேசினாலே அது பிரிவினை எனச் சொல்வது அபத்தமானது மட்டுமல்ல; ஆபத்தானதும் கூட!
சங் பரிவாரத்தின் ‘அறிவியல்’
இவர்கள் கூறும் ‘அறிவியல்’ என்பது என்ன? அமைச்சரின் மாநிலமான ராஜஸ்தானின் பாஜக துணை முதல்வர் தியா குமாரி கடந்த மாதம் ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது ஹல்திகாட் எனுமிடத்தில் 1576ஆம் ஆண்டு அக்பர் படைகளுக்கும் மகா ராணா பிரதாப் படைகளுக்கும் இடையே நடந்த போரில் அக்பர் வெற்றி பெற்றார் எனும் கல்வெட்டை ராணா பிரதாப் வெற்றி பெற்றார் என மாற்றினேன் என்பதை தனது சாதனையாக குறிப்பிடுகிறார். இந்த போரில் அக்பர் படைகளுக்கு மான்சிங் எனும் இந்து தளபதியும் ராணா பிரதாப்பின் படைக்கு ஹகிம்கான் சூர் எனும் முஸ்லிம் தளபதியும் தலைமை தாங்கி னர். இந்த போரில் அக்பர் படைகள் வென்றன; ராணா பிரதாப் படைகள் தோற்றன. உண்மையில் ராணா பிரதாப்பின் கோட்டையை பாதுகாக்க ஹகிம்கான் சூர் தனது உயிரை பலி கொடுத்தார். அதனால்தான் ராணா பிரதாப் தப்பித்து, பின்னர் அக்பரை தொடர்ந்து எதிர்க்க முடிந்தது. ராஜஸ்தான் துணை முதல்வரின் உரையை பல வரலாற்று ஆய்வாளர்கள் கண்டித்துள் ளனர். ஆனால் கீழடி அறிக்கையின் அறிவியல் ஆதாரம் பற்றி கவலைப்படும் ஷெகாவத், தியா குமாரியின் உரை குறித்து எதுவும் பேசியதாக தெரியவில்லை. ஒருவேளை இப்படி வரலாற்றை எவ்வித ஆதாரமும் இல்லாமல் மாற்றுவதுதான் உண்மையான அறிவி யல் என நினைக்கிறார்களா?
சிந்து- கீழடி – ஆரிய நாகரிகங்கள்
கி.மு. 3300 முதல் 1700 வரை செழித்திருந்த சிந்துச் சமவெளி மிகச்சிறந்த நகர நாகரிகமாக விளங்கியது. பின்னர் மீண்டும் வளமான நகர நாகரிகம் கி.மு.600 முதல் 500 ஆம் ஆண்டுகளில்தான் கங்கைச் சமவெளி யில்உருவானது. இதுதான் இரண்டாவது நகர நாகரிகம் என கருதப்பட்டது. ஆனால் இதே காலகட்டத்தில் ஒரு நகர நாகரிகம் வைகை நதி கரையில் உருவானது என்பதையே கீழடித் தரவுகள் தெரிவிக்கின்றன. தற்போதைய புதிய கண்டுபிடிப்புகள், இந்தக் காலத்தை இன்னும் 300 ஆண்டுகள் முன்னோக்கி கொண்டு செல்கின்றன. கங்கைப் பகுதியில் உரு வான ஆரிய நாகரிகத்தில் கி.மு.6ஆம் நூற்றாண்டில் வர்ணாசிரம அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் வலுவாக உருவாகியிருந்தன. ஆனால் கீழடியில் வர்ணாசிரம அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. வேட்டை மற்றும் மேய்ச்சல் சமூகமாக இருந்த வரை அது ஆதி பொதுவுடமைச் சமூகத்தின் இறுதிக் கட்டமாக இருக்க வாய்ப்பு உண்டு. விவசாய சமூகமாக மாறிய பின்னர் உபரி உற்பத்தி உருவாகியிருக்க வேண்டும். உபரி உற்பத்தி எப்படி விநியோகிக் கப்பட்டது? எந்தப் பிரிவு பலன் அடைந்தது? எந்தப் பிரிவு பாதிக்கப்பட்டது? இவையெல்லாம் பதில் கிடைக்க வேண்டிய கேள்விகளாக உள்ளன. ஆனால் கீழடியில் வர்ணாசிரமம் இருக்கவில்லை என்ப தும் கங்கை ஆரியர் நாகரிகத்தில் இருந்த சமஸ்கிரு தம் அல்லது பிராகிருதம் கீழடியில் இருந்திருக்க வில்லை என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது. சிந்துச் சமவெளியை போலவே வழிபாடு இருந்தா லும் பெரும் கோவில்கள் அல்லது யாகங்கள் கீழடியில் இருந்திருக்கவில்லை. சிந்துச் சமவெளி நாக ரிகத்தை ஆரிய நாகரிகமாக மடைமாற்றும் முயற்சி பல தடைகளை சந்திப்பது போலவே கீழடியை ஒட்டு மொத்த ஆரிய நாகரிகத்துடன் இணைத்து இந்துத்துவா ஒற்றைத் தன்மையை உருவாக்க இன்றைய கீழடி ஆய்வறிக்கைகள் தமக்கு பயன்பட வில்லை என சங் பரிவாரம் கருதலாம். எப்படி சிந்து நாகரிகத்தை சுவீகரிக்க கடும் முயற்சிகள் நடக்கிற தோ அதே போல கீழடி/ ஆதிச்ச நல்லூர்/ சிவகளை உட்பட பல தொல்லியல் தரவுகளையும் மடைமாற்ற சூழ்ச்சிகள் நடக்கிறது. அவற்றை முறியடிக்க தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது மிக அவசியம்.