தொழிலாளர் வர்க்கத்தின் மாபெரும் அரசியல், பொருளாதாரப் போராட்டம்
கேள்வி : பல்வேறு மத்திய தொழிற்சங்கங்கள் ஜூலை 9-இல் பொது வேலை நிறுத்தத்திற்கான அறைகூவலை விடுத்துள்ளன. எந்தப் பிரச்சனைகள் மீது இந்த வேலை நிறுத்த அறைகூவல்? ஏன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதை ஆதரிக்கிறது?
பேபி: அனைத்துத் தொழிற்சங்க இயக்கங்களும் கூட்டாக எழுப்பிய பிரச்சனைகளில் ஒன்று, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை வாபஸ் பெறுதல். இது திரட்டப்பட்ட மற்றும் திரட்டப்படாத தொழிலாளர்களின் முக்கியப் பிரச்சனையாகும். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், இளைஞர்களின் வேலையின்மை, கலாச்சாரத் துறையில் நிகழ்வுப் போக்குகள், மதச் சுதந்திரம் குறித்த கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை நமது நாட்டு மக்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டவை. உரிமைகள் பறி போய்விடும் ஆனால் மிக முக்கியமான கோரிக்கை, மோடி அரசு ஏற்கனவே நிறைவேற்றிய தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் குறித்தது. 29 தொழிலாளர் சட்டங்கள் அடிப்படையானவை. ஆனால் 29 சட்டங்களையும் உள்ளடக்கி, 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக அரசு சுருக்கிவிட்டது. இத்தகைய நான்கு சட்டத் தொகுப்புகளும் அமலாக்கப்பட்டால், தொழிலாளர்கள் முதலாளித்துவத்தின் அடிமைகளாக மாற்றப்படுவர். அவர்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளும், சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நிறுத்த உரிமை உட்பட பறிபோய் விடும். எனவே தொழிலாளர்கள் இத்தகைய கொடூரமான சட்டங்களுக்கு எதிராகப் போராடாமல், தொழிற்சங்கங்கள் இருப்பதில் எந்த நியாயமும் இல்லை. எனவே தொழிற்சங்க இயக்கத்தின் வாழ்வா சாவா என்ற பிரச்சனையுடன், சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகளின் பிரச்சனைகள் மற்றும் கலாச்சாரப் பிரச்சனைகள், கோரிக்கைகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே சாமானிய மனிதர்கள், பரம ஏழைகள் மற்றும் தொழிலாளி வர்க்கத்திற்காகக் குரல் கொடுக்கும் சிபிஎம், தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாகத் திகழும் சிபிஎம் - தனது முழுமையான ஆதரவை இந்த வேலை நிறுத்தத்திற்கு அளிக்கிறது.
வேலைநிறுத்தம் பொருத்தமான வழிமுறையா?
வேலை நிறுத்தங்கள் பொதுமக்களுக்குப் பல அசௌகரியங்களை ஏற்படுத்துவதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது. எனவே வேலை நிறுத்தம் என்பது பொருத்தமான போராட்ட வழிமுறையா?
வேலை நிறுத்தங்கள் நிச்சயமாகப் பலருக்கும் அசௌகரி யம் ஏற்படுத்துகிறது. ஆனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள் முதலாவதாகத் தங்கள் ஊதியத்தை இழக்கிறார்கள். அவர்களது குடும்பங்கள் வருவாயை இழக்கின்றன. அப்படி, ஏன் தொழிலாளர்கள் தங்களுக்கே இன்னல்களைத் தேடிக் கொண்டும் கூட போராடுகிறார்கள்? வேலை நிறுத்தம் என்பது தொழிலாளர்கள் பயன்படுத்தும் முதல் ஆயுதம் அல்ல. குழுவாகச் சென்று மனுக்கள் கொடுத்திருப்பார்கள். கண்டன தினம் நிர்ணயித்து ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்கள். அவர்களது கோரிக்கை களை முன்னிலைப்படுத்தி, இதர அனைத்து வடிவங்களிலும் முயற்சி செய்த பிறகு, அம்முயற்சிகள் தோல்வியுறும் பட்சத்தில்தான் வேலை நிறுத்தம் என்ற கூர்மையான ஆயுதத்தைத் தொழிலாளி வர்க்கம் கையில் எடுக்கிறது. தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதும், வேலை நேரத்தை அதிகப்படுத்துவதுமான நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் வேலை நேரப் பிரச்சனை முன்னுக்கு வந்தது. ஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் வேலைக்கென ஒரு நாளில் 24 மணி நேரத்தை மூன்றாகச் சமமாகப் பிரித்து உறுதிப்படுத்துவதற்கான போராட்டம் சிக்காகோவில் தொடங்கியது. மிகப்பெரிய வேலை நிறுத்தம் நடைபெற்றது. அதற்குப் பிறகு பல்வேறு நாடுகளில் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. மக்களின் ஆதரவுடன் தொழிலாளி வர்க்கம் நடத்திய போராட்டங்களால் இந்தத் தொழிலாளர் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. தற்போது இந்த உரிமைகள் மற்றும் சட்டப் பாதுகாப்பு களை அகற்ற முயற்சி செய்யப்படுகிறது. எனவே அதிகாரத்தில் உள்ளவர்களிடம் தொழிலாளர் உரிமைகளை எடுத்துக்கூறி நிலைநாட்ட முடியாத சூழ்நிலையில்தான், தங்கள் ஊதியத்தை இழந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்குகின்றனர்.
பங்கெடுக்காத தொழிலாளர்கள்
வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்களின் ஒரு பகுதி யினரே பங்கேற்கின்றனர். எந்தச் சங்கத்திலும் சேராத பெரும்பகுதித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கெடுப்பதில்லை. இப்படிப்பட்ட வேலை நிறுத்தங் கள் அவர்கள் மீது எத்தகைய தாக்கத்தைச் செலுத்தும்? தொழிற்சங்கங்களின் ஸ்டிரைக் உள்ளிட்ட அறைகூவல்களை இத்தகைய தொழிலாளர்கள் ஏன் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்?
உலகம் முழுவதும் திரட்டப்பட்ட தொழிற்சங்க இயக்கச் செயல்பாடுகளுக்குப் பல தடைகளைத் தீவிர வலதுசாரி ஆளும் வர்க்கங்கள் ஏற்படுத்துகின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்தத் தொழிலாளர்களும் ஏதேனும் ஒரு தொழிற்சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்துள்ளனரா என்றால் இல்லை. தற்போது மிக முக்கியமான தொழிற்சங்கங்கள் ஒன்றுபட்ட வேலை நிறுத்த அறைகூவலை விடுத்துள்ளன. நேரடியாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்காதவர்கள் கூட, அவர்களின் உரிமைகளும் வேலை நிறுத்தக் கோரிக்கைகளாக உள்ளன என்பதைப் புரிந்துகொள்வார்கள். எனவே வெகு சீக்கிரத்தில் அவர்களும் வேலை நிறுத்தங்களில் பங்கேற்றுள்ளவர்களோடு கைகோர்ப்பர். வேலைநிறுத்தம் அதிகார வர்க்கத்தின் மீது நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக 2019 முதல் தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆனால் தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பின் காரணமாக ஆளும் வர்க்கங்கள், மோடி அரசு இவற்றை அமலாக்கினால் தொழிலாளர் மத்தியில் பெரும் எழுச்சி ஏற்படும் என்பதை உணர்ந்துள்ளன. எனவே அமலாக்கத்தை ஒத்திவைக்கின்றனர். அரைகுறையாக இவற்றை அமலாக்குகின்றனர். எனவே சில பகுதியினர் நேரடியாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்காவிட்டாலும், அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை அவர்களும் பார்க்கிறார்கள். பிறகு ஒரு கட்டத்தில் அவர்களும் இத்தகைய போராட்டங்களில் பங்குபெறுவர் என நாங்கள் நம்புகிறோம். வேலையின்மையும் இளைஞர்களும்
நாட்டில் வேலையின்மை பெருமளவில் உள்ளது. இருப்பினும் இளைஞர்கள் பெரும் போராட்டங்களில் இறங்கவில்லையே, ஏன்?
நம் நாட்டின் மிகப்பெரும் தொழிற்சங்க இயக்கத் தலைவர், மறைந்த தோழர் பி.டி. ரணதிவே அவர்கள், திரட்டப்பட்ட தொழிலாளி வர்க்கம் வேலையின்மைப் பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். வேலையில்லாதவர்களைத் திரட்டுவது குறித்துத் தொழிற்சங்க இயக்கம் அக்கறை செலுத்த வேண்டும். அதனை ஒரு கடமையாகக் கருத வேண்டும். முதலாளிகள் எப்போதுமே வேலையற்றோரை ரிசர்வ் படையினராகத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத்தான் முயற்சிக்கிறார்கள். தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்யும்போது முதலாளிகள் வேலையற்ற இளைஞர்களைப் பணியில் அமர்த்தும் முயற்சிகளில் இறங்குகின்றனர். வேலையில் உள்ளோரையும் வேலை யற்றோரையும் இரண்டு எதிர்எதிர் முரண்பட்ட முகாம்களாக வைத்திருக்கவே அவர்கள் முயற்சி செய்கின்றனர். ஜூலை 9 பொதுவேலை நிறுத்தப் போராட்டத்திலும் வேலையின்மைக்குத் தீர்வு வேண்டும் என்ற கோரிக்கை இணைக்கப்பட்டுள்ளது. வேலையற்ற இளைஞர்கள் மத்தியில் தொழிற்சங்க இயக்கத்தினர், நாங்கள் மேற்கொள்ளும் இந்த வேலை நிறுத்தம் உங்கள் கோரிக்கைக்காகவும் நடத்துகிறோம் என பேச விரும்புவர். நம் நாட்டின் முக்கிய இளைஞர் அமைப்புகளில் ஒன்றான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், வேலையின்மை மற்றும் அதனுடன் தொடர்புள்ள பிரச்சனைகள் மீது தேசிய சிறப்பு மாநாட்டை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. வேலையின்மைப் பிரச்சனைக்காக தில்லியில் பெருமளவில் இளைஞர்களைத் திரட்டிப் போராட அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். ஜூலை 9 வேலை நிறுத்தத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே பணியில் உள்ள தொழிலாளர்களின் இயக்கமும், வேலையற்ற இளைஞர்களின் இயக்கமும் வருங்காலத்தில் ஒன்றோடு ஒன்று கைகோர்த்துச் செல்லும். '
இந்தியா அணி ஆதரிக்கிறதா?
சிபிஎம் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என நீங்கள் கூறினீர்கள். வேலை நிறுத்தத்தை ஆத ரிக்கிறது எனக் கூறினீர்கள். சிபிஎம்-மின் பங்கு இந்தப் போராட்டத்தில் எவ்வாறு இருக்கும்? பெரிய அள விலான அரசியல் நடவடிக்கைக்கு இந்தத் தொழிலாளி வர்க்க நடவடிக்கையைப் பயன்படுத்துவது குறித்து நம்பிக்கை வைத்துள்ளீர்களா? இந்தியா அணி இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதா?
ஆம். தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் கடமை தொழிலாளி வர்க்கப் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுப்பதாகும். அதனால்தான் மதுரையில் நடைபெற்ற 24ஆவது அகில இந்திய மாநாட்டில் ஒருங்கிணைந்த தீர்மானம் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி நிறைவேற்றினோம். அப்போது வேலை நிறுத்தத் தேதி மே 20ஆக இருந்தது. பின்னர் உள்நாட்டு நிகழ்வுகளால் ஜூலை 9-இல் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்தம் மிக மிக முக்கியமானது என தீர்மானம் கூறுகிறது. அது அரசியலுடன் தொடர்புடையது. நரேந்திர மோடி அரசு பிளவுவாத அரசியல் கொள்கையைப் பின்பற்றுகிறது. பெரும்பான்மை மதவாத, பிளவுவாத அடிப்படையில் மக்களைத் திரட்ட முயல்கிறார்கள். பெரிய மாநிலம் உத்தரப்பிரதேசம். உபி மாநில முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தின் ன்போது என்ன கூறினார்? “நாம் (இந்துக்கள்) மக்களில் 80 சதவீதம் பேர்” என்கிறார். இது ஒரு அப்பட்டமான, கொடூரமான, மத விஷத்தைக் கக்கும் பேச்சாகும். அவர்களை நிலைநிறுத்திக்கொள்ள, தொழிலாளர், விவசாயிகள், வேலையற்ற இளைஞர்கள் சந்திக்கும் உண்மையான பிரச்சனைகளிலிருந்து பிளவுவாத அரசியலுக்குத் திசை திருப்புகின்றனர். இதை இந்தியா அணி கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அரசியலும் பொருளாதாரமும் இணைந்த...
மக்களின் துயரமான பொருளாதார நிலைமைகள் மீது இந்தியா அணி அதிக அக்கறை செலுத்தி அடையாளம் காண்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மதவாதம், எதேச்சதிகாரம், ஆளும் வர்க்கங்களின் நவீன பாசிசப் போக்குகளுக்கு எதிராக நாம் போராட வேண்டும். இது ஒரு மிக முக்கியக் கடமைகளில் ஒன்றாகும். ஆனால் இதே போல் சமமான முக்கியத்துவம் கொண்டது, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் தலையிடுவது. ஜூலை 9 தொழிலாளி வர்க்கப் போராட்டம் இதைத்தான் செய்கிறது. அரசியலும் பொருளாதாரமும் இணைந்த போராட்டம் இது. இன்று நம் நாட்டில் தேவைப்படும் அணி திரட்டல் என்பது, குறுகிய, பிளவுவாத, மதம், சாதி போன்ற வேறுபாடுகளைத் தள்ளிவைத்துவிட்டு, தொழிலாளர், விவசாயிகள், வேலையற்றோரை இந்தப் போராட்டத்தில் திரட்ட வேண்டும். இது பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக மிக முக்கியமானது.
சமூக மாறுதலுக்கு உதவும்
இந்த வேலை நிறுத்தம் இந்திய தொழிலாளி வர்க்கத் தின் ஒற்றுமையை முன்னெடுத்துச் செல்வதுடன், விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், இளைஞர் களின் ஒற்றுமையையும் முன்னெடுக்குமா?
பெண்களின் உரிமைகள்... ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வேறுபட்ட ஊதிய விகிதங்கள் உள்ளன. சம வேலைக்குச் சம ஊதியம் வேண்டும் என்பதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கோரிக்கையாக இணைக்கப்பட்டுள்ளது. இந்தியச் சமுதாயத்தில் மாறுதலைக் கொண்டுவர இந்த வேலை நிறுத்தம் நிச்சயம் உதவும்.