articles

இஸ்ரேலிய திரைப்பட விழாவை நிறுத்துங்கள்!

இஸ்ரேலிய திரைப்பட விழாவை நிறுத்துங்கள்!

தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி யில் 2025 மே 29-31 வரை நடை பெறவிருக்கும் இஸ்ரேலிய திரைப்பட விழாவை நடத்த வேண்டாம் என தமுஎகச வும் இந்திய மாணவர் சங்கமும் வலி யுறுத்தியுள்ளன. தமுஎகச இந்தோ சினி அப்ரிஷியேசன் ஃபவுண்டேசன் நடத்தவிருக்கும் இவ்விழா வை நடத்தவேண்டாம் என தமுஎகச கோரி யுள்ளது. பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்து அவர்களது தாயகத்தை அப கரித்துக்கொண்டிருக்கும் இஸ்ரேலிய அரசை உலகமே கண்டித்துக்கொண்டி ருக்கும் இவ்வேளையில், தமிழ்நாட்டில் இவ்விழாவை நடத்துவது அரசியல் கூருணர்வற்ற செயலாகும். போர்க் குற்றங்களுக்காக சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட வேண்டிய இஸ்ரேலிய அரசின் செயல்களுக்கு ஆதர வளிப்பதாக அமையும் என்று தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் கூறியுள்ளனர். இஸ்ரேலிய திரைப்பட விழாவை நடத்துவதில்லை என்கிற முடிவை இந்தோ சினி அப்ரிஷியேசன் ஃபவுண் டேசன் தானாக முன்வந்து அறிவிக்க வேண்டும். மீறுமானால் தமிழ்நாடு அரசு தலையிட்டு இவ்விழா நடப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்திய மாணவர் சங்கம் இதேபோல், இந்த நூற்றாண்டின் ஆகப்பெரும் இன அழிப்பைச் செய்து வரும் இஸ்ரேலின் எவ்வித நிகழ்ச்சியும் தமிழகத்தில் நடைபெறுவதை அனுமதிப்பது படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான நிலையாக அமையும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தெள. சம்சீர் அகமது மற்றும் மாநிலச் செயலாளர் கோ. அரவிந்த சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் பாசிச நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. இஸ்ரேலிய திரைப்பட விழாவை புறக்கணிப்பது உலகளவில் இஸ்ரேலைத் தனிமைப்படுத்துவதற்கு எடுத்துக்காட்டாக அமையும். பாலஸ்தீன மக்களோடு துணை நிற்பதும் பாசிசத்திற்கு எதிராக குரலெழுப்புவதும் மதச்சார்பற்ற ஜனநாயக அரசின் இன்றியமையா வரலாற்றுக் கடமை என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இரு அமைப்புகளும் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு இவ்விழாவைத் தடை செய்ய வேண்டும் என்று கோரியுள் ளன.