articles

img

நாடாளுமன்றத்தை கூட்டாமல் தப்பிக்க முயலாதீர்! - ச.வீரமணி

நாடாளுமன்றத்தை கூட்டாமல் தப்பிக்க முயலாதீர்!

பிரதமர் நரேந்திர மோடி,  பஹல்காமில் உள்ள  பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த கொடூர மான கொலைகளுக்கு இந்தியாவின் சாத்தியமான எதிர்வினை குறித்து விவாதிப்பதற்காக கூட்டப்பட்ட இரண்டு அனைத்துக் கட்சிக் கூட்டங் களில் இருந்தும் விலகி இருந்தார்; எனினும்,  நாட்டில் இயங்கும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட அக்கூட்டங்கள், ஐ.நா. அமைப்பால் நியமிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா (LeT) உடன் தொடர்புடைய பயங்கர வாதிகள் நடத்திய அப்படுகொலைகளை அனைத்துக் கட்சிகளும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்தன. பதிலுக்கு தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதில் அரசாங்கத்திற்கு தங்கள் ஆதரவையும் வழங்கின. போர் நிறுத்த அறிவிப்பு வரை இந்தக் கருத்தொற்று மை நீடித்தது. இராணுவ நடவடிக்கை முடியும் வரை அனைத்துக் கட்சிகளும் எந்த கேள்வியையும் எழுப்புவதைத் தவிர்த்தன.

டிரம்பின் தலையீடு -  சிம்லா ஒப்பந்தத்தின் மீறல்

எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், மற்றும் அவரது நிர்வாகம் போர் நிறுத்தத்தை ஒருதலைப்பட்சமாக அறிவித்ததும், வர்த்தக விளைவுகளின் அச்சுறுத்தலின் கீழ் இந்தியாவும் பாகிஸ்தானும் அதற்கு இணங்க வேண்டிய  கட்டாயம் ஏற்பட்டதாக அவர் கூறியதும் ஆச்சரிய மளித்தது மட்டுமல்லாமல், சிம்லா ஒப்பந்தத்தில் பொதிந்துள்ள கொள்கைகளை மீறுவதாகவும் இருந்தது. பேச்சுவார்த்தை மூலம் ஏற்பட்ட தீர்வின்  விளைவாக ஏற்பட்ட அந்த ஒப்பந்தம், இரு நாடுகளும் அனைத்து சர்ச்சைக்குரிய பிரச்சினைகளையும் இரு தரப்பு ரீதியாக விவாதத்தின் மூலம் தீர்க்க உறுதி யளித்தது. இருந்தபோதிலும், பாகிஸ்தான் தொடர்ந்து காஷ்மீர் பிரச்சனையை சர்வதேசமயமாக்க முயற்சித்து வருகிறது. ஜனாதிபதி டிரம்பின் கூற்றுகளை நேரடியாக எடுத்துக் கொண்டால், காஷ்மீர் விவகாரம் உண்மையில் சர்வதேசமய மாக்கப்பட்டுள்ளது என்பதையேக் குறிக்கும்.   இது நீண்ட கால ராணுவம் சார் உத்தி ரீதியாகவும்  இராஜீய ரீதியாகவும் கடும் விளைவுகளை ஏற்படுத்திடும்.

ஊடகங்களின் பொய்யான பிரச்சாரம் - தேசிய அவமானம்

இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் விளைவாக போர் நிறுத்தம் ஏற்பட்டதாக இந்திய அதிகாரிகளும் அரசாங்கமும் கூறியிருந்தாலும், இந்தக் கூற்றுக் களின் உண்மைத்தன்மை குறித்து கணிச மான அளவிற்கு குழப்பம் இன்னும் நீடிக்கிறது.  இந்த முக்கிய பிரச்சினையைத் தவிர, இராணுவம் தொடர்பாக வெளியான அறிக்கைகள் தொடர்பாக, அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தப்பட வேண்டி யிருக்கிறது. பிரதான ஊடகங்கள் வினோதமான மற்றும் சரிபார்க்கப்படாத கூற்றுகளைப் பரப்பிய தால் இது மிகவும் அவசியமானது. இந்த அறிக்கை களில் சில, குறிப்பாக மே 8 ஆம் தேதி இரவு ஒளிபரப்பப்பட்டவை, மிகவும் மூர்க்கத்தனமாக இருந்ததால், இந்திய ஊடகங்கள் சர்வதேச சமூகத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இந்தத்  தவறான விளக்கங்கள் இறுதியில் நமது தேசிய நலனைக் காயப்படுத்தின. எனவே, போர் நிறுத்தத் திற்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தால் ஓர் உண்மையான அறிக்கை வெளியிடுவது அவசரத் தேவையாக மாறியது.

ஐஎம்எப் கடன் ஒப்புதல் -  இந்தியாவின் ராஜதந்திர தோல்வி

கூடுதலாக, ஒரு பில்லியன் டாலர் கடனுக்கான பாகிஸ்தானின் கோரிக்கையை எந்த ஆட்சேபனையும் அல்லது தாமதமும் இல்லாமல் சர்வதேச நிதியம் (IMF) நிர்வாகக் குழு அங்கீகரித்தபோது, இந்தியாவுக்கு ஒரு தெளிவான ராஜதந்திர தோல்வி ஏற்பட்டது. இந்தச் சூழலில்தான் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்துவது அவசர முக்கியத்துவம் பெறுகிறது.

நாடாளுமன்ற சிறப்பு அமர்வு -  ஏன் மறுக்கிறது அரசு?

அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ மான அறிக்கை, அதைத் தொடர்ந்து அவையில் ஒரு கட்டமைக்கப்பட்ட விவாதம், தேசிய அளவில் ஓர்  உண்மையான கருத்தொற்றுமையை உருவாக்கு வதற்கு அனுமதித்திருக்கும். அத்தகைய போக்கு வெளிப்படைத்தன்மையையும், பல்வேறு அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைப்பையும் உறுதி செய்தி ருக்கும். இதன்மூலம் தேசிய அளவில் அரசியல் கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஜனநாயகப் பூர்வமாக உருவாகி இருக்கும். மாறுபட்ட கண்ணோட்டங்களின் வெளிப்பாடு இந்த பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய அங்கமாகும்.

வெளிப்படைத்தன்மை (vs) அரசியல் சுயநலம்

ஆயினும், அரசாங்கம் என்ன காரணத்தாலோ, நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கான கோரிக்கைக்கு சாதகமாக பதிலளிக்க விரும்ப வில்லை. அதற்கு பதிலாக, பயங்கரவாதத்தையும் அதன் ஆதரவாளர்களையும் கண்டிப்பதில் அரசியல் கட்சிகளின் ஆதரவை ஒரு பரந்த தேசிய அளவிலான கருத்தொற்றுமையாகக் காட்டிக் கொள்ளலாம் என்று அது கருதியது.

இந்தியாவின் ஜனநாயக பலம் - வெளியுறவுச் செயலாளரின் பதிலடி

இராணுவப் பேச்சுவார்த்தையின் போது, அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், இந்தியர்கள் தங்கள் சொந்த அரசாங்கத்தை விமர்சிப்பதாக பாகிஸ்தான் தலைவர் ஒருவர் கூறிய கருத்துக்கு வெளியுறவுச் செயலாளர் சரியான முறையில் தக்க பதிலடி கொடுத்தார். இந்தியா ஒரு  துடிப்புமிக்க ஜனநாயக நாடு என்றும், அங்கு அரசாங்கம் தன் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளது என்றும், விக்ரம் மிஸ்ரி எடுத்துரைத்து அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத் தார். உண்மையில், இந்தியாவின் அரசமைப்பு சட்டமும், அதன் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியர சும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்களை எதிர்கொள்வதில் நமக்கு முக்கிய பலமாக உள்ளது.

தேசிய கருத்தொற்றுமை -  ஜனநாயக வழிமுறைகள் தேவை

தேசிய அளவில் கணக்கெடுப்பு நடத்தும் இந்த தருணத்தில்,  வெளிப்படையான முறையிலும், ஜனநாயகரீதியாகவும் விவாதத்தில் ஈடுபடுவதன் மூலம் தேசிய அளவில் மக்கள் மத்தியில் கருத்தொற்று மையை உருவாக்குவது எளிதாக அமைந்திருக்கும். ஆயினும் அதனைச் செய்திட அரசாங்கம் முன்வர வில்லை. மாறாக அரசாங்கம் அரசியல் ஒற்றுமை யை, தனது ராஜீய ரீதியான தொடர்புகளை மேம்படுத்து வதற்கான ஒரு வழிமுறையாகக் காட்ட முயன்றது.  ஆனால் சரியான கருத்தொற்றுமை இல்லாமல் ராஜீய ரீதியான செல்வாக்கைக் கூட நிலைநிறுத்துவது கடின மாகிவிடும். ஆயினும்கூட, இந்தியாவின் நீடித்த வலிமை அதன் அரசமைப்புச்சட்டத்தின் முக்கிய  விழுமியங்களில் உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் சமகால சவாலை எதிர்கொள்வ தில் இவை புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் முன்னிறுத்தப்பட வேண்டும்.

மதவெறி அரசியல் (vs)  ஜனநாயக போராட்டம்

எனவே, தற்போது நம்முன் உள்ள கடமை, அடை யாள அரசியலால் இயக்கப்படும் அனைத்துவிதமான மதவெறி அரசியலையும் எதிர்த்துப் போராடும் அதே சமயத்தில், ஜனநாயகத்திற்கான போராட்டத்தையும் நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டி யது அவசியமாகும். மதவெறித் தீயை விசிறிவிட ஆட்சியாளர்கள் நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டி ருக்கும் இந்த சமயத்தில் இதற்கான போராட்டம் இரட்டிப்பு மடங்கு முக்கியத்துவம் உடையதாகும்.

பயங்கரவாத எதிர்ப்பு -  அரசமைப்பு விழுமியங்களுடன்

எனினும், பயங்கரவாதத்திற்கு எதிரான நமது பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும், பாகிஸ்தானிடமிருந்து இந்தியா வேறுபட்டது என்பதைக் காட்டுவதற்கான ராஜீய முயற்சிகளை வலுப்படுத்துவதன் அவசியத்தையும் குறைத்து மதிப்பிடக்கூடாது.  இன்றைய முக்கிய மான கால கட்டத்தில் இவ்விரண்டையும் ஒருங்கி ணைப்பதே நமது இலக்காக இருந்திட வேண்டும்.