தொழிலாளர்களின் வாழ்க்கையும் மூலதனத்தின் சுரண்டலும்
இன்றைய உலகில், உழைப்பால் வாழ்க்கை நடத்தும் சாமானிய மக்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அதே நேரத் தில், பெரு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் இலாபத்தைக் குவித்து செல்வந்தர்களாக உருவெடுக்கின்றனர். இந்தப் பிரச்சனை ஒரு நாட்டோடு மட்டும் நின்றுவிடவில்லை; உலகளவில் பரவி யுள்ளது. சர்வதேச தொழிலாளர் சங்கங்க ளின் கூட்டமைப்பு (ITUC) வெளியிட்ட 2024 உலகளாவிய உரிமைகள் குறியீட்டு அறிக்கை இதைத் தெளிவாக வெளிப் படுத்துகிறது. 151 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 131 நாடுகள் (87%) தொழிலா ளர்களின் வேலைநிறுத்த உரிமையைப் பறித்துள்ளன. 119 நாடுகள் (79%) கூட்டுப் பேரம் பேசும் உரிமையை மறுக்கின்றன. 65% நாடுகளில் தொழிலாளர்கள் அரசு அல்லது முதலாளிகளால் அச்சுறுத்தப்படு கின்றனர். 74% நாடுகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தடைகள் விதிக்கப் படுகின்றன. இதன் பொருள் என்ன? நம் முன்னோர்கள் போராடிப் பெற்ற அடிப்ப டை உரிமைகளைக்கூட இன்று நம்மிடமி ருந்து பறித்து வருகிறார்கள் என்பது தான்.
மூலதனத்தின் நவீன சுரண்டல் முறைகள் தொழில்நுட்பத்தின் பெயரில் சுரண்டல்
21ஆம் நூற்றாண்டில், தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றனர். ‘கோல்ட்மன் சாக்ஸ்’ (Goldman Sachs) நிறுவனத்தின் 2023 ஆய்வறிக்கையின்படி, ‘30 கோடி முழுநேர வேலைவாய்ப்புகள்’ 2030ஆம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு (AI) தாக்கத்தால் பாதிக்கப்படலாம். வேலை யிழந்தவர்களின் வாழ்க்கை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இந்தத் தொழில்நுட்பங்கள், தொழிலாளர்களை மேலும் சுரண்டுவதற்கான கருவிகளாக மாற்றப்படுகின்றன.
உலகமயமாக்கலின் கொடுமை
“உலகமயமாக்கல்” என்ற முழக்கத் தின் பின்னால், பெரு நிறுவனங்கள் மட்டுமே பயனடைகின்றன. உலகமய மாக்கப்பட்ட பொருளாதாரத்தில் நிதி, பொருட்கள், மூலதனம் ஆகியவை சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆதிக்கத்தில் சுதந்திரமாக நகர்கின்றன. ஆனால், தொழிலாளர் கள் தேசிய எல்லைகளால் கட்டுப்படுத்தப் படுகின்றனர். இதனால், வளர்ந்த (உலகின் வடக்கு) மற்றும் வளர்ச்சியடை யாத (உலகின் தெற்கு) நாடுகளுக்கு இடையே கூலி வேறுபாடு பெருகி, உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்கள் தெற்கு நாடுகளுக்கு மாற்றப்படுகின்றன. உதாரணமாக, ஒரு ஆடைத் தொழி லாளி மாதம் 8,000 ரூபாய் சம்பளம் பெறு கிறார்; அதே வேலைக்கு அமெரிக்காவில் 1,65,000 ரூபாய் கிடைக்கிறது. இந்த ஏற்றத் தாழ்வைப் பயன்படுத்தி, பன்னாட்டு நிறுவ னங்கள் பெரும் லாபம் ஈட்டுகின்றன. நிதி மூலதனத்தின் கொள்ளை நிதி மூலதனத்தின் புதிய புதிய சுரண் டல் முறைகள் இன்று தலைவிரித்து ஆடு கின்றன. வங்கிகளும் நிதி நிறுவனங்களும் சாமானிய மக்களின் பணத்தை கடனாக வழங்கி, அதிக வட்டி வசூலித்து செல்வம் சேர்க்கின்றன. வீட்டுக் கடன், கார் கடன், கல்விக் கடன், தனிப்பட்ட கடன் என அனைத்திற்கும் கடன் வழங்கி, மக்களை வாழ்நாள் முழுவதும் வட்டி கட்ட வைக்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் 2023 புள்ளிவிவரப்படி, இந்தியாவில் மொத்த வீட்டுக் கடன் தொகை 25 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இதனால், சாமானிய மக்கள் கடனாளிகளாகி, வங்கிகளுக்கு அடிமைகளாக மாறுகின்றனர். இந்தியாவில் 1991க்குப் பின் நடந்த மாறுதல்கள் தாராளமயமாக்கலின் விளைவுகள் 1991இல் இந்தியாவில் அறிமுகமான தாராளமய பொருளாதாரக் கொள்கை கள், சுரண்டலை பன்மடங்கு அதிகரித் துள்ளன. அரசு நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டன. இதன் விளைவாக, முன்பு அரசு வேலைகளில் இருந்த தொழிலா ளர்களுக்கு வேலை பாதுகாப்பு, ஓய்வூதியம், மருத்துவச் சலுகைகள், பிராவிடண்ட் ஃபண்ட், கிராஜுவிட்டி போன்றவை உறுதி செய்யப்பட்டிருந்தன. ஆனால், தனியார்மயமாக்கலுக்குப் பின், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் “கோல்டன் ஹேண்ட் ஷேக்” என்ற பெயரில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மீத முள்ளவர்களின் சம்பளமும் சலுகைக ளும் பறிக்கப்பட்டன. 1991இல் அரசுத் துறை யில் 1.9 கோடி பேர் வேலை செய்தனர்; 2023இல் இது 1.7 கோடியாகக் குறைந்துள்ளது.
பன்னாட்டு நிறுவனங்களின் ஊடுருவல்
அமேசான், ஹூண்டாய், ஃபோர்டு, வால்மார்ட், நைக் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய கிராமங்கள் வரை ஊடுருவியுள்ளன. இவை குறைந்த சம்பளத்தில் இந்தியத் தொழிலாளர்க ளைப் பயன்படுத்தி, பெரும் லாபத்தை தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் செல்கின் றன. உதாரணமாக, ஆப்பிள் நிறுவனம் ஐஃபோன் தயாரிக்கிறது; அதன் உற்பத்திச் செலவு 12,500 ரூபாய், ஆனால் விற்பனை விலை 83,000 ரூபாய். இந்த 70,500 ரூபாய் லாபத்தில், அதன் உற்பத்தியில் பல்வேறு நிலைகளில் ஈடுபடுகிற இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தொழிலாளர்களுக்கு கிடைப்பது சொற்பம்.
இந்தியாவில்
வெளிநாட்டு நேரடி முதலீடு 1991இல் 850 கோடி ரூபாயாக இருந்தது; 2022-23இல் 5,90,000 கோடி ரூபாயாக உயர்ந்துள் ளது. ஆனால், வேலைவாய்ப்பு உரு வாக்கம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
புதிய தொழிலாளர் சட்டங்களின் கொடுமை
2019-2020இல் மத்திய அரசு கொண்டு வந்த நான்கு புதிய தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள்—மூலதன மற்றும் வேலைவாய்ப்பு சட்டம், தொழில் உறவுச் சட்டம், சமூக பாதுகாப்புச் சட்டம், வேலைப் பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் வேலை நிலைமைகள் சட்டம்— ஆகிய தொகுப்புச் சட்டங்கள் தொழிலாளர்களுக்கு மேலும் அநீதி இழைக்கின்றன.
12 மணி நேர வேலை
வேலை நேரம் 8 மணியிலிருந்து 12 மணியாக உயர்த்தப்பட்டுள்ளது. 8 மணி நேர வேலையே தொழிலாளர்களை சோர்வடையச் செய்கிறது; குடும்பத்துடன் நேரம் செலவிட முடிவதில்லை. காலை 8 மணிக்கு வேலைக்குச் சென்றால், இரவு 8 மணிக்குத்தான் வீடு திரும்ப முடியும்; பயண நேரம் சேர்ந்தால் 9-10 மணியாகிறது. உலக சுகாதார அமைப்பின் 2021 ஆய்வின்படி, வாரம் 55 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்பவர்க ளுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் 35% அதிகம். 12 மணி நேர வேலை என்றால் வாரம் 72 மணி நேரம்—இது உரிமை பறிப்பு மட்டுமல்ல; உடல் நிலைக்கும் மிகவும் ஆபத்தானது.
பெண் தொழிலாளர்களுக்கு இரவு நேர வேலை
பெண்கள் இரவு நேரத்தில் வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது “பெண்களுக்கு அதிகாரமளித்தல்” என்று சொல்லப்பட்டாலும், பாது காப்புக்கு எந்த ஏற்பாடும் இல்லை. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022 புள்ளி விவரப்படி, இந்தியாவில் ஒவ்வொரு 16 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார். உழைப்புச் சுரண்டலோடு பாலியல் சுரண்டலும் பெண் உழைப்பாளிகளை கொடூரமாகத் தாக்குகிறது.
வேலைநிறுத்த உரிமை பறிப்பு
புதிய சட்டங்களில் மிக மோசமான விஷயம் என்னவென்றால், தொழிலாளர் கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு மிகவும் கடினமான நிபந்தனைகள் விதித்தி ருப்பது தான். வேலைநிறுத்தத்துக்கு 60 நாட்கள் முன்கூட்டியே அறிவிப்பு கொடுக்க வேண்டும், அரசிடம் அனுமதி வாங்க வேண்டும், 14 நாட்கள் “சமரச காலம்” கடைப்பிடிக்க வேண்டும், அரசு அதிகாரி சமரசம் பேசும் வரை வேலைநிறுத்தம் செய்யக்கூடாது. இதனால் தொழிலாளர்க ளின் போராட்ட உரிமையே பறிக்கப் படுகிறது.
தமிழ்நாட்டில் ‘கிக்’ பொருளாதாரம்
“கிக் ஒர்க்கர்” எனும் புதிய தொழிலாளர் பிரிவு தோன்றியுள்ளது. ஸ்விக்கி, சொ மோட்டோ, உபர், ஓலா, அமேசான் ஃப்ளெக்ஸ் போன்ற நிறுவனங்களில் பணி யாற்றும் இவர்கள், தமிழ்நாட்டில் மட்டும் 8-10 லட்சம் பேர் உள்ளனர். இந்தியாவி லேயே தமிழ்நாடு கிக் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. நிதி ஆயோக் 2022 அறிக்கையின்படி, இந்தி யாவில் 77 லட்சம் கிக் தொழிலாளர்கள் உள்ளனர்; 70% பேர் உணவு விநியோகம் மற்றும் டாக்ஸி சேவைகளில் ஈடுபட்டுள்ள னர். இவர்களுக்கு நிலையான சம்பளம், மருத்துவச் சலுகை, ஓய்வூதியம், தொழிற் சங்க உரிமை எதுவும் இல்லை. “இவர்கள் ஊழியர்கள் அல்ல, சுதந்திர ஒப்பந்தக் காரர்கள்” என நிறுவனங்கள் கூறி பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்றன.
நிரந்தர வேலைகள் வீழ்ச்சி
முன்பு பெரும்பாலான வேலைகள் நிரந்தரமாக இருந்தன. இன்று நிரந்தர வேலைகள் குறைந்து, தற்காலிக வேலை கள் அதிகரித்துள்ளன. 1991இல் அரசுத் துறையில் 85% நிரந்தர வேலைகள் இருந்தன; 2023இல் இது 45% ஆகவும், தனியார் துறையில் 25% ஆகவும் குறைந்துள்ளது. அரசு அலுவலகங்களில் கூட தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப் படையில் ஆட்கள் சேர்க்கப்படுகின்றனர். இதன் விளைவு: வேலை பாதுகாப்பு, உயர் சம்பளம், ஓய்வூதியம், மருத்துவ சலுகை கள், தொழிற்சங்க உரிமை ஆகியவை இல்லாமல் போகின்றன.
தாராள வர்த்தக ஒப்பந்தங்களின் கொடுமை
இந்தியா 50க்கும் மேற்பட்ட நாடு களுடன் தாராள வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இவை விவசாயம், தொழில், கல்வி ஆகியவற்றை பாதிக் கின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இந்தியாவை பால் பொருட்கள், மாட்டி றைச்சி, மது உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய நிர்பந்திக்கின்றன. உதாரணமாக, அமெரிக்க சோயா பீன் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது; இந்திய சோயா பீன் 45 ரூபாய். நியூசிலாந்து நெய் ஒரு கிலோ 400 ரூபாய்; இந்திய நெய் 600 ரூபாய். இதனால், இந்திய விவசாயிகளும் பால் உற்பத்தியாளர்களும் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் அபாயம்.
உலகளாவிய எதிர்ப்பும் நம்பிக்கையும்
பிரான்சில் ஓய்வூதிய வயது 62இலி ருந்து 64 ஆக உயர்த்தப்பட்டதை எதிர்த்து, மக்கள் மூன்று மாதங்கள் வேலைநிறுத்தம் செய்தனர்; ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் 2023இல் தொழிற்சங்க உரிமைகளை வலுப்படுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டது. மெக்சிகோவில் தொழிலா ளர் நீதிக்கான சட்ட மாற்றங்கள் நடந்துள் ளன. இந்தியாவில், மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து 5 லட்சம் விவசாயி கள் 14 மாதங்கள் தர்ணா செய்து, சட்டங்க ளைத் திரும்பப் பெற வைத்தனர். இது நமக்கு உணர்த்துவது ஒன்றே: மக்கள் ஒன்றிணைந்தால், எந்த அநீதியையும் வெல்ல முடியும். தொழிலாளர்களின் உண்மையான விடுதலை, முதலாளித்துவ அமைப்பை முற்றிலும் மாற்றுவதிலேயே அடங்கி யுள்ளது. உழைப்பாளிகள் ஒன்றுபட்டுப் போராடினால் மட்டுமே, சுரண்டலற்ற சமத்துவ உலகை உருவாக்க முடியும். அதை முழங்கிடவே ; அந்த அடிப்ப டையில் மக்களை அணிதிரட்டிடவே ஜூன் 11-20 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கம்.