என்ன தேடுகிறாய் - மா.முத்துசாமி
தியே! நீ என்ன தேடுகிறாய்? என் பாதையைத்தான் என்ன செய்யப் போகிறாய்? திரும்பிச் செல்கிறாயா? அது மனிதர்களின் செயல் முயற்சியை கைவிடுவது நகருக்குள் செல்வேன் கடலை அடைவேன் அஞ்சமாட்டேன் ஆக்கிரமிப்புக்கு... கடலே! நீ என்ன தேடுகிறாய் ? என்னை அண்டி வந்த உறவுகள் கரையோரத்தில் மிதக்கின்றனவாம் எண்ணெய்ப் பிசுக்கு தொண்டையை கவ்வி விட்டதே... வண்டே! நீ என்ன தேடுகிறாய் ? பூவைத்தான்... பூந்தோட்டத்தில் தானே இதெல்லாம் மலர்களல்ல மலடுகள் தேனுமில்லை மணமுமில்லையே பூச்சிக்கொல்லிகள் மூக்கை துளைக்கவில்லையா... பூவே! நீ என்ன தேடுகிறாய்? பூஞ்சிட்டுக்களைத்தான் செல்போன் டவர்கள் எமனாய் வந்து தொலைந்த சிட்டுகளை கணக்கெடுக்க முடியுமா... மண்ணே! நீ என்ன தேடுகிறாய்? மரங்களைத்தான் மரமண்டைகளுக்கு உறைக்கவில்லையே நான் மலடாவேன் என்று வனத்துறை பாதுகாப்பு பாலுக்கு காவல் பூனை... காற்றே! நீ என்ன யோசிக்கிறாய்? ஆலைகளின் நச்சுப்புகை மூச்சு முட்டுகிறது தினம் அரை மணி நேரம் ஆக்ஸிஜன் குடியல் காசு கொடுத்து தண்டச்சோற்று தடிமாடுகளே வெட்கமாய் இல்லை உங்களுக்கு.... மனிதா! நீ என்ன தேடுகிறாய் ? பாழ்படுத்திய இயற்கையை புதுப்பிக்க முடியுமா என்று தொலைந்த வாழ்க்கையை மீட்டு எடுக்க முடியுமா என்று வருங்கால சந்ததிகள் காறி உமிழ்ந்தது ஈரம் காயவில்லையே முகத்தில் இன்னும்...