articles

img

தொழிலாளர் சட்டங்கள் சீர்குலைக்கப்பட்டதன் அரசியல், தத்துவார்த்த பின்னணி - க.ஆனந்தன்,

தொழிலாளர் சட்டங்கள் சீர்குலைக்கப்பட்டதன் அரசியல், தத்துவார்த்த பின்னணி

இன்றைய முதலாளித்துவ உலகில் அரசுகள் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களில் பல வழிகளில் தலை யிடுகின்றன. இதன் முக்கிய நோக்கம் முதலாளி களின் லாபத்தை மேலும் அதிகப்படுத்துவது தான். இதற்காக சமீப காலமாக பயன்படுத்தப் படும் முக்கிய செயல்முறை - மூலதனத்தை (பணம், தொழிற்சாலை) கட்டற்ற வகையில் கொள்ளை யடிக்க விடுவதும், தொழிலாளர்களை கடுமை யான முறையில் கட்டுப்படுத்துவதும் ஆகும். மூலதனம் தனது செல்வத்தை குவிக்கிற; உபரியை மேலும் கூடுதலாக கைப்பற்றுகிற திறனை அரசின் தொழிலாளர் சட்டங்கள் சீர்குலைக்கப்படுவதன் மூலம் மேலும் கூடு தலாக்கிக் கொள்கிறது. முதலாளித்துவ தொழிலாளர் சட்டம் முதலாளித்துவ தொழிலாளர் சட்டம் என்பது மூலதனம் தனது லாபத்தையும்;

மேலும் கூடுத லாக உபரியை எளிதாகவும் வலுவாகவும் பிழிந் தெடுப்பதற்கான - சட்டக் கட்டமைப்பிலேயே உள்ள மிகவும் முக்கியமான பகுதியாகும். ஏனெ னில், இது முதலாளித்துவ பொருளாதாரத்தின் மிக முக்கியமான பகுதியை - அதாவது, தொழி லாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே யான உறவுகளில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உற்பத்தி மற்றும் விற்பனைத் துறையில், வேலை நிபந்தனைகள் மற்றும் உற்பத்தி சாதன உரிமையாளர்களால் தொழி லாளர் சக்தியினை பயன்படுத்தப்படுவது ஆகிய வற்றை நேரடியாக இந்த சட்டங்கள் தீர்மா னிக்கின்றன.  எனவே தொழிலாளர் சட்டம் என்பது, முதலா ளித்துவச் சுரண்டலின் வடிவங்கள் மற்றும் முறை கள், உழைக்கும் மக்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமை, வர்க்கப் போராட் டத்தின் வளர்ச்சி, தொழிலாளர் சக்தியின் மறு உற்பத்தி மற்றும் முதலாளித்துவத்தின் சில பொருளாதார விதிகளின் செயல்பாடு ஆகிய வற்றின் மீது பெரும் தாக்கத்தை செலுத்துகிறது. இவ்வாறு, முதலாளித்துவ தொழிலாளர் சட்டம் என்பது, முதலாளித்துவ அரசு தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்து வதற்கான கூர்மையான மற்றும் வளை யக்கூடிய கருவியாக மாறியுள்ளது. இது ஒருபுறம் தொழிலாளர் இயக்கத்தை பலவீ னப்படுத்தவும் பிளவுபடுத்தவும், தொழிற்சங்கங் களை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், முத லாளிகளின் அதிகாரத்தை வலுப்படுத்தவும், உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலை அதிகரிக்கவும்; மற்றும் அவர்களின் சமூக வெற்றிகள், பலன்கள் மற்றும் உரிமைகளை  பாதிக்கவும் சீர்குலைக்கவும் பயன்படுத்தப் படுகிறது. மறுபுறம், தொழிலாளர்களை ஏமாற்ற வும், அவர்களின் வர்க்க உணர்வை மழுங்க டிக்கவும், சுரண்டலை மூடி மறைக்கவும் மற்றும் தொழிலாளர்களிடையே “

நாம் இந்த (சுரண்டல்) சமூகத்தின் பங்காளிகள்”, ‘இதைப் பாதுகாக்க கடமைப்பட்டவர்கள்’ என்ற சிந்தனையையும்; “நம்பிக்கை அடிப்படையிலான ஆட்சி”, சீர்திருத்தவாத மாயைகள் மற்றும் சந்தர்ப்ப வாதம் ஆகிய கருத்துக்களை வளர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது. சுதந்திர இந்தியாவில் தொழிலாளர் சட்டங்கள் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், தொழி லாளர் வர்க்கத்தின் கவலைகள் அரசியல் நிர்ணய சபையின் விவாதங்களில் வெளிப் பட்டாலும், அவை பெரும்பாலும் நமது அரசியல மைப்பின் நடைமுறைப்படுத்த முடியாத அரசுக் கொள்கை வழிகாட்டு நெறிமுறைகளில் மட்டுமே சிக்கிக்கொண்டன.  சுதந்திர இந்தியாவில் தொழிலாளர் சட்டங் கள், முக்கியமாக உள்நாட்டு முதலாளிகள் கையில் இருந்த புதிய அரசியல் அதிகாரத்தின் தேவைக்கேற்ப இயற்றப்பட்டன - தடையற்ற உற்பத்தி; லாபம் மற்றும் செல்வத்தை உறுதி செய்வதற்காக. அதே நேரத்தில், அப்போது நிலவிய சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசியல் சூழ்நிலை மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் கன வுகளைக் கருத்தில் கொண்டு, சுதந்திரத்திற்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் ஓரள விற்கு தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை சக்தியை வலுப்படுத்திய சில தொழிலாளர் நலச் சட்டங்களும் இயற்றப்பட்டன. இப்போது, நாம் ஏற்கனவே நீண்ட பாதை யை கடந்துவிட்டோம். முதலாளித்துவம் முற்றி லும் வேறுபட்ட கட்டத்தில் நுழைந்துள்ளது. தற்போதைய கட்டத்தின் போது, முதலாளித்துவ மானது, நீண்ட காலமாக நீடிக்கும் அமைப்பு ரீதியான நெருக்கடியை எதிர்கொண்டு வரு கின்றது. முதலாளித்துவ சக்திகள் பொருளாதா ரத்தை நிர்வகிப்பதற்கான சிறந்த வழியாக புதிய தாராளமயக் கொள்கைகளை ஏற்றுக்கொண் டன. இது அடிப்படையில் தனியார் மூல தனத்தின் நலன்களை முன்னேற்றுவதைக் குறிக்கிறது. இதைச் சாதிக்க தொழிலாளர்களை கட்டுப்படுத்துவதும்; மூலதனத்தை கட்டற்ற வகையில் கொள்ளையடிக்க அனுமதிப்பதும் ஆகிய வழிகளை நாடினர். இந்தக் காலகட்டத் தில், மூலதனத்தின் இந்த கட்டுப்பாடு நீக்கம் பல விதமான ஆக்கிரமிப்பு வடிவங்களை எடுத்துள்ளது:  Y மூலதனத்தின் கட்டற்ற பாய்ச்சல் மற்றும் தேசிய எல்லைகளைத் தாண்டி பொருட்கள் மற்றும் சேவைகளின் தாராளமயம்;  Yஆனால் உலகம் முழுவதும் தொழிலாளர்க ளின் சுதந்திரமான - தாராளமான செயல் பாடு அனுமதிக்கப்படுவதில்லை Y கல்வி, சுகாதாரம், வங்கி மற்றும் காப்பீடு போன்ற இதுவரை அரசுக்காக ஒதுக்கப்பட்ட மற்றும் அரசால் வழங்கப்பட்ட புதிய பகுதிக ளில் தனியார் மூலதனத்தை ஊக்குவித்தல் Y நீர் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற புதிய பகுதிகளில் தனியாருக்கான புதிய சந்தையை உருவாக்குதல் சமீபத்தில், இது மின்சாரம் மற்றும் நிலக்க ரித் துறை, விமான நிலையங்கள் மற்றும் ரயில்வே தனியார்மயமாக்கம், அத்துடன் ஆயுதத் துறையின் நிறுவனமயமாக்கல் மற்றும் பாதுகாப்பில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு களை உயர்த்துதல் ஆகியவற்றின் மூலம் மிகவும் மோசமான ஆக்கிரமிப்பு வடிவத்தை எடுத்துள்ளது.  தொழிலாளர்கள் மீதான கட்டுப்படுத்தல் என்பது, ‘தொழிலாளர் சீர்திருத்தங்கள்’ என்ற வடிவத்தை எடுத்துள்ளது; இது இந்த மாற்றங்க ளின் இயல்பான நீட்சியாக பார்க்கப்பட வேண்டும். இதன் நோக்கம் மூலதனத்தின் கை களை வலுப்படுத்துவதுதான். இதற்கு இடது சாரிக் கட்சிகளைத் தவிர இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் ஒப்புதல் கிடைத்துள்ளது. மோடி அரசின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இதன்படி, தற்போதைய மோடி ஆட்சி நவீன தாராளமயக் கொள்கைகளின் ஆக்கிரமிப்பு வடி வங்களை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பாக உள்ளது. இதில் ‘தொழிலாளர் சீர்திருத்தங்கள்’ என்பது ஓர் ஒருங்கிணைந்த பகுதியாகும். இப்படித்தான், மோடி அரசு, ‘வணி கம் செய்வதை எளிதாக்குவது’ என்ற பெயரில் தொழிலாளர் சட்டங்களைச் சீர்குலைத்து, தொகுப்புச் சட்டங்களாக சுருக்கும் வேலையை மேற்கொண்டுள்ளது. இது தொழிலாளர்களின் உரிமைகளை அழிப்பதைத் தவிர வேறில்லை. இது, ‘வணிகம் செய்வதை எளிதாக்குவது’ என்ற உலக வங்கியின் குறியீட்டின் அடிப்படையில் தீவிரப்படுத்தப்பட்டது - நாடுகளை அவற்றின் வணிக-சார்பு சூழலின் அடிப்படையில் தர வரிசைப்படுத்துதல் (அதாவது, தொழிலாளர்க ளை விட மூலதனத்தின் நலன்களுக்கு முன்னு ரிமை கொடுத்தல்). மூலதனத்தின் இந்த கட்டளைக்கு மதிப்பு கொடுத்து, மூலதனத்திற்கு வசதிகள் செய்வதில் தன்னை மறுபடியும் உருவாக்கிக்கொண்ட மோடி ஆட்சி, தொழிலாளர்களை கட்டுப்படுத்த, சொல்லப்போனால் தொழிலாளர்கள் மீது முழு கட்டுப்பாட்டை நிறுவுவதற்காக 29 தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக இணைத்துள்ளது: 1. கூலி சட்டத் தொகுப்பு 2. தொழில்துறை உறவுகள் சட்டத் தொகுப்பு 3. சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு 4. தொழில்சார் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் வேலை நிலைமைகள் சட்டத்தொகுப்பு கூலிச் சட்டத் தொகுப்பு, 2019 இல் நிறை வேற்றப்பட்டது; மற்ற மூன்று சட்டத் தொகுப்புகள் 2020 இல், கொரோனா தொற்றுநோய்க் காலத்தில் நிறைவேற்றப்பட்டன. தொழிற்சங்கங்கள் மீதான போர் முதலாளித்துவத்தின் அடிப்படைத் தன்மை - அது தொழில் உறவுகளின் இயல்பு மீது பரவ லான தாக்கத்தை செலுத்துகிறது; மிக முக்கிய மாக தொழிற்சங்கங்களின் கட்டமைப்பு, செயல்கள் மற்றும் நோக்கங்களை வடிவ மைக்கும் விதத்தின் மூலம். இதன்படி, மூலதன உலகமயமாக்கலின் தற்போதைய கட்டம் தொ ழிற்சங்கங்கள் மீது ஒரு போரை கட்டவிழ்த்து விட்டுள்ளது. தொழிற்சங்கங்கள்தான் அவர்க ளின் தடையற்ற சுரண்டலை எதிர்க்கக்கூடிய ஒரே ஆயுதம். இதை எந்தவிதமான வழக்க மான வேலையோ அல்லது வேலை பாது காப்போ இல்லாத தொழிலாளர்களின் அதிக ரித்து வரும் விகிதத்தில் காணலாம்.  மேற்கண்ட புதிய தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள், பாதுகாக்கப்பட்ட மற்றும் வழக்க மான வேலைகள் மீது பலத்த தாக்குதலை தொடுக்கின்றன. குறைந்தபட்சம் மூன்று வழிக ளில் இந்த தாக்குதல் நடக்கிறது. இதன் மூலம் அவர்கள் தொழிற்சங்கம் இல்லாத பணியிடங்க ளை உறுதி செய்ய விரும்புகின்றனர். முதல் தாக்குதல் : பணி நீக்கத்திற்கான வரம்பு உயர்த்தல் முதலாவதாக, குறைந்தபட்சம் 100 தொழி லாளர்களை வேலைக்கு எடுக்கும் உற்பத்தி நிறு வனங்கள் முன்பு பணி விலக்கல், பணி நீக்கம் அல்லது தொழில் பிரிவுகளை மூடுவதற்கு முன்கூட்டிய அரசு அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. இந்த வரம்பு  தொழில்துறை உறவுகள் சட்டத் தொகுப்பில் 300 தொழிலாளர்களாக உயர்த்தப்பட்டுள்

 

ளது. இதன் விளைவாக, 100 முதல் 299 தொழி லாளர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவ னங்கள் இப்போது தங்கள் விருப்பப்படி “தொழி லாளர்களை வேலைக்கு எடுக்கலாம்; வேலை யிலிருந்து நீக்கலாம்”.  2017-2018 ஒழுங்கமைக்கப்பட்ட உற் பத்தித் துறையின் தரவுகளைப் பயன்படுத்தி மதிப்பீடு செய்யப்பட்டதில், 44 சதவீத தொழிலா ளர்கள் தன்னிச்சையான பணி நீக்கத்திற்கு எதி ரான சட்டப் பாதுகாப்பை இழப்பார்கள்; 90 சத வீத நிறுவனங்கள் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை அனுபவிக்கும் என தெரியவந்துள்ளது.  மேலும், பல மாநிலங்கள் (ஆந்திரப் பிரதே சம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டி ரா, ராஜஸ்தான் மற்றும் உத்தர்கண்ட்) பணி நீக்க ஈட்டை சேவை முடிக்கப்பட்ட ஒவ்வொரு வருடத்திற்கும் நாற்பத்தைந்து நாட்கள் சம்ப ளம் என்ற விகிதத்தில் தர ஒப்புதல் அளித்தி ருந்தன. ஆனால் தொழில்துறை உறவுகள் சட்டத் தொகுப்பானது வெறும் பதினைந்து நாட்கள் சம்பளத்தை மட்டுமே வழங்குகிறது. இரண்டாம் தாக்குதல் :  ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான வரம்பு உயர்த்தல் இரண்டாவதாக, இருபது அல்லது அதற்கு மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலை க்கு எடுக்கும் நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததா ரர்கள் முன்பு ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் 1970 இன் கீழ் சில கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது. தொழில்சார் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் வேலை நிலைமைகள் சட்டத் தொகுப்பின்படி, இத்தகைய நிபந்தனை கள் இப்போது ஐம்பது அல்லது அதற்கு மேற் பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததா ரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.  இவ்வாறு, இருபது முதல் நாற்பத்தொன்பது ஒப்பந்தத் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்

கள் கட்டுப்பாடுகளின் எல் லைக்கு வெளியே விடப்படுகின்றன. இது தர மற்ற வேலைவாய்ப்பு வடிவங்களை ஊக்கு விக்கும். ஏற்கனவே ஒழுங்கமைக்கப்பட்ட உற் பத்தித் துறையில் ஒப்பந்த தொழிலாளர்களின் விகிதம் 1990-1991 இல் 12 சதவீதத்திலிருந்து 2013-2014 இல் 33.6 சதவீதமாக பெரும் அளவில் அதிகரித்துள்ளது. மூன்றாம் தாக்குதல் : நிச்சயமில்லாத கால வேலைவாய்ப்பு மூன்றாவதாக, அவர்களின் ஒப்பந்தங்கள் காலாவதியாகும்போது, நிச்சயமான காலத்திற் குட்பட்ட தொழிலாளர்களின் வேலை நீக்கம் இனி பணி நீக்கமாக கருதப்படாது. தொழில் துறை உறவுகள் சட்டத் தொகுப்பில் நிச்சயமான கால வேலைவாய்ப்பின் (Fixed Term) கட்டுப்பாடற்ற பயன்பாடு அனுமதிக்கப்படுகிறது.  இருப்பினும், பல நாடுகள் நிச்சயமான கால வேலைவாய்ப்பை கண்டிப்பாக கட்டுப்படுத்து கின்றன - ஒப்பந்த புதுப்பிப்புகளின் எண் ணிக்கை மற்றும் ஒரு தொழிலாளி நிச்சயமான கால அடிப்படையில் வேலைக்கு எடுக்கப்படக் கூடிய அதிகபட்ச மொத்த காலம் ஆகியவற்றின் மீதான வரம்புகளுடன் பல நாடுகளில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவின் விஷயத்தில் இத்தகைய தெளிவு கிடைக்க வில்லை. இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாமல் நிச்சயமான கால வேலைவாய்ப்பு முற்றிலும் தொழிலாளர் சந்தையை கட்டற்றதாக மாற்றி, கடும் சுரண்டல் மேற்கொள்ளும் வடிவமாக மாற்றப்பட்டுள்ளது.   இந்த மாற்றங்கள் தொழிற்சங்க உறுப்பி னர்களாக தொழிலாளர்கள் செயல்படுவதை நேரடியாக தடுக்கும் என்பதைக் காண்பது எளிது. ஏனெனில் பணி நீக்கத்தின் அச்சு றுத்தல் தொழிலாளர் சமூகத்தின் எப்போதும் வளர்ந்து வரும் பிரிவினரை தொடர்ந்து பயத்திலேயே வைக்கும். கூலி மற்றும் வேலைநிறுத்த உரிமை மீதான தாக்குதல் வேலைப் பாதுகாப்புடன் சேர்ந்து, கூலி என்பதும்  தொழிலாளர்களின் வாழ்க்கையில் சமமாக முக்கியமானவை. இருப்பினும், கூலி சட்டத் தொகுப்பு, எதிர்காலத்தில் குறைந்தபட்சக் கூலியின் தொடர்ச்சி இருக்குமா என்பது குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது வேண்டுமென்றே இரண்டு வகையான கூலிகளை அறிமுகப்படுத்தியதால் ஏற்பட்டுள் ளது, அதாவது குறைந்தபட்சக் கூலி மற்றும் தேசிய அடிப்படைக் கூலி.  முதலாவதை கணக்கிடுவதற்கு ஒரு புற நிலை அளவுகோல் உள்ளது; ஆனால் இரண்டா வதை மதிப்பிடுவதற்கு எந்த உறுதியான அடிப்ப டையும் இல்லை. மாநிலங்கள் தங்கள் குறைந்த பட்ச கூலிகளை தேசிய அடிப்படைக் கூலிக்கு மேல் நிர்ணயிக்க வழிகாட்டப்படுவதால், முதலீட்டிற்காகப் போட்டியிடும் மாநிலங்கள் உண்மையில் தேசிய அடிப்படைக் கூலியையே அளவுகோலாக பயன்படுத்தும். இது ஆந்திரப் பிரதேச கூலி சட்டத் தொகுப்பின் வரைவு விதி களில் செய்யப்பட்டது போல - இது இறுதியில் குறைந்தபட்சக் கூலி என்ற முழுக் கருத்தையும் நீர்த்துப்போகச் செய்யும். வேலைநிறுத்த உரிமை - தொழிலாளர்களின் முக்கிய அரசியல் கருவி வேலைநிறுத்த உரிமையானது தொழிலா ளர்களுக்கான ஒரு முக்கியமான அரசியல் கருவியாகும். தொழிற்சங்கங்களை அமைக் கும் உரிமை மற்றும் வேலைநிறுத்த உரிமை உட்பட கூட்டு நடவடிக்கைகளின் உரிமை ஆகி யவை தொழிலாளர் வர்க்கத்தின் பிரிக்க முடியாத மற்றும் வலுவாக நிறுவப்பட்ட உரிமைகளாகும். தொழில்துறை தகராறுகள் சட்டம், 1947 இந்த வேலைநிறுத்த உரிமையை பாதுகாத்தது ; மற்றும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை அறிவிப்பதற்கு ஒப்பீட்டளவில் எளிய நடை முறைகளைக் கொண்டிருந்தது.  இருப்பினும், புதிய தொழில்துறை உறவு கள் சட்டத் தொகுப்பானது, முந்தைய பல பாது காப்பு நடவடிக்கைகளை அகற்றிவிடுகிறது. முன்பு, பொது பயன்பாட்டு சேவைகளைத் தவிர, தொழிலாளர்கள் முதலாளிக்கு முன் அறிவிப்பு இல்லாமல் வேலைநிறுத்தத்தை நாட முடியும். இருப்பினும், தொழில்துறை உறவுகள் சட்டத் தொகுப்பின் கீழ், வேலைநிறுத்தத்திற்கு 60 நாட் களுக்கு முன்பாக முதலாளிக்கு வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கப்படாத வரை தொழி லாளர்கள் வேலைநிறுத்தத்திற்கு செல்ல முடியாது.  தொழில்துறை உறவுகள் தொகுப்புச் சட்டம், கூடுதலாக வேலைநிறுத்த அறிவிப்பு பெறப்பட்டு முதல் அமர்வுகள் நடத்தப்படும்போது, சமரச நடவடிக்கைகள் தொடங்கியதாகக் கருதப்படும் என்றும், சமரசம் நடைபெறும்போது எந்த வேலைநிறுத்தமும் அறிவிக்க முடியாது என்றும் கூறுகிறது. இதன் மூலம் வேலை நிறுத்தத்தின் உண்மையான நோக்கத்தையே நுட்பமாகத் தோற்கடிக்கிறது; இது இப்போது முதலாளியின் அனுமதியுடன் மட்டுமே நடத் தப்பட முடியும். தொழில்துறை உறவுகள் சட்டத் தொகுப்பின் படி வெகுஜன சாதாரண விடுப்பு கூட “வேலைநிறுத்தம்” என கருதப்படும்! தொழிலாளர்களை பாதுகாப்பிலிருந்து வெளியேற்றும் மற்றொரு அடி தொழிலாளர்களை, பாதுகாப்பு அம்சங்க ளில் இருந்து வெளியேற்றுவதற்கான மற்றொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை, மேற்கண்ட சட்டத் தொகுப்புகளின் பயன்பாட்டிற்கான வரம்பு களை அதிகரிப்பதாகும். தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய சட்டத் தொகுப்பு, மின்சார உதவியுடன் உற்பத்தி நடைபெறும் 20 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ள தொழிற் சாலைகளுக்கும் மின்சக்தி இல்லாமல் செய் யப்படும் 40 தொழிலாளர்களுக்கும் பொருந் தும். தொழிற்சாலைகள் சட்டத்தில், இது முறை யே 10 மற்றும் 20 ஆக இருந்தது. இதேபோல் ஒப்பந்தத் தொழிலாளர் (கட்டுப்பாடு மற்றும் ஒழிப்பு) சட்டம் 20 க்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் வேலைக்கு எடுக்கப்படும் இடங்களில் பொருந்தும். சட்டத் தொகுப்பு, இந்த வரம்பை 50 தொழிலாளர்களாக உயர்த்துகிறது. ஆறாவது பொருளாதாரக் கணக்கெடுப்பின் கண்டுபிடிப்புகள் நமது நாட்டில்  விவசாயம் அல்லாத 94.6% நிறுவனங்கள் 5 அல்லது அதற்கும் குறைவான தொழிலாளர்களையே வேலைக்கு எடுக்கின்றன என்பதை வெளிப் படுத்துகின்றன. 90% தொழிலாளர்கள் ஏற்க னவே இருக்கும் தொழிலாளர் சட்ட வரம்புக ளுக்கு வெளியே இருப்பதையும் அவை காட்டு கின்றன. இத்தகைய நிலைமையில் வரம்பை அதிகரிப்பது என்பது கிட்டத்தட்ட முழு தொழிலா ளர்களையும் சமூக பாதுகாப்பு நன்மைகள் உட்பட தொழிலாளர் உரிமைகளின் எல்லைக்கு வெளியே தள்ளுவதைக் குறிக்கிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளை அழித்தல் மாநிலங்களுக்கு இடையேயான புலம் பெயர்ந்த தொழிலாளர் (வேலைவாய்ப்பு கட்டுப் பாடு மற்றும் சேவை நிலைமைகள்) சட்டம், 1979 ரத்

து செய்யப்பட்டது. தொழில்சார் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் வேலை நிலைமைகள் சட்டத்தொகுப்பு, 2020- ஐ நிறைவேற்றும்போது, தொழில்சார் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் வேலை நிலைமைகள் சட்டத் தொகுப்பில் மாநிலங்களுக்கு இடையேயான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய அத்தியா யம் வேண்டுமென்றே அதன் எல்லா பாது காப்பு ஏற்பாடுகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழி லாளர்களின் உரிமைகளை நீக்கிவிட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பொறுத்த வரை முதலாளிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசாங்கங்களின் சட்டரீதியான கடமைகள் தொடர்பான கிட்டத்தட்ட அனைத்து ஏற்பாடுகளையும் அது முற்றிலுமாக நீக்கிவிட் டுள்ளது. ஆளும் அமைப்பு தொழிலாளர்க ளின் இருப்புப் படையை தனது வசம் வைத்துக் கொள்ள விரும்புகிறது. பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் நலன் நடவடிக்கைகளுக்கான வரம்பு பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் நலன் நடவடிக்கைகளுக்கு உரிமையுள்ள வரம்பும் முதலாளிகள், சட்டத் தொகுப்பின் கீழ், அவர்களு க்கு உள்ள சிறிய கடமைகளிலிருந்து கூட எளி தில் தப்பிக்கக்கூடிய வகையில் நிர்ண யிக்கப்பட்டுள்ளது.  உதாரணமாக, 500 க்கும் குறைவான தொழிலாளர்கள் வேலைக்கு எடுக்கப்படும் தொழிற்சாலைகள் அல்லது கட்டிட மற்றும் பிற கட்டுமான வேலைகளுக்கு எந்த பாதுகாப்பு அதிகாரியும் தேவையில்லை. இந்த எண்ணிக்கை 250 அல்லது அதற்கும் குறை வாக இருக்கும்போது எந்த நல அதிகாரியையும் நியமிக்க தேவையில்லை. தொழிலாளர்களின் எண்ணிக்கை

100 க்கும் குறைவாக இருந்தால் எந்த சிற்றுண்டிச்சாலையும் வழங்க தேவை யில்லை. பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 50 க்கும் மேல் இருந்தால் மட்டுமே குழந்தைகள் காப்பக வசதி வழங்க வேண்டும். தொழிலாளர்களின் எண்ணிக்கை 500 ஆக இருக்கும்போது மட்டுமே ஆம்பு லன்ஸ் சேவை வழங்க வேண்டும். இது தொழி லாளர்களின் வாழ்க்கையைப் பற்றிய ஆளும் வர்க்கத்தின் அலட்சிய அணுகுமுறையைக் காட்டுகிறது. சமூக பாதுகாப்பில்  நிச்சயமற்ற நிலை சமூக பாதுகாப்புச் சட்டத் தொகுப்பின் மூலம் பரந்த அளவிலான தொழிலாளர்களின், குறிப்பாக- முறைசாரா தொழிலாளர்களின் கொஞ்சநஞ்ச சமூக பாதுகாப்பும் நிச்சய மற்ற நிலையில் தள்ளப்படுகிறது. பீடி, இரும்புத் தாது சுரங்கங்கள், மைக்கா சுரங்கங் கள், சுண்ணாம்புக் கல், டாலமைட் சுரங்கங்கள் போன்ற குறிப்பிட்ட துறைகளை உள்ளடக்கிய ஏற்கெனவே உள்ள சட்டங்கள் சமூக பாது காப்பு சட்டத் தொகுப்பின் கீழ் இணைக்கப் படுகின்றன. அரசாங்கம் இந்த சட்டங்களில் ‘செஸ்’ (cess) வசூலிப்பது தொடர்பான ஏற்பாடு களை ஒழித்துவிட்டுள்ளது. இந்த சட்டத் தொகுப்பு எந்த சமூக பாதுகாப்பு நன்மையையும் குறிப்பிடவில்லை. இவ்வாறு இலட்சக்கணக் கான இந்த தொழிலாளர்கள் நிதி ஒதுக்கீடு  மற்றும் சமூக பாதுகாப்பு நன்மைகளை வழங்கு வதற்கான எந்த உறுதிமொழியும் அரசாங்கத்தி டமிருந்து  இல்லாமல் துரதிர்ஷ்டவசமான நிலையில் விடப்படுகின்றனர். தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டமும் எதிர்காலமும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கம் அவர்களின் வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகள் மீதான இத்தகைய தாக்குதல்க ளுக்கு எதிராக போராடி வருகிறது, நமது நாட்டில் தொழிலாளர் வர்க்கம் 1990 களிலிருந்து செய்து வருவது போல. இப்போது பத்து மத்திய தொழிற்சங்கங்களின் பெரும்பான்மை 2025 மே 20 ஆம் தேதி பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. காஷ்மீரில் சுற்று லாப் பயணிகள் மீதான கொடூரமான பயங்கர வாதத் தாக்குதல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை யைக் கருத்தில் கொண்டு, இந்த பொது

வேலை நிறுத்தம் ஜூலை 9, 2025 க்கு ஒத்திவைக் கப்பட்டுள்ளது. தொழிலாளர் வர்க்கத்தின் கடின உழைப்பில் பெற்ற உரிமைகளை பாதுகாப்பதற்கு ஒன்று பட்ட போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தல் மற்றும் தொழிலாளர்களின் உணர்வை உயர்த்துதல் தேவைப்படுகிறது. அவர்களின் உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் மோடி அரசாங்கத்தால் பின்பற்றப்படும் புதிய தாரா ளமயக் கொள்கைகளுக்கும் இடையேயான தொடர்பை அவர்கள் புரிந்துகொள்ளுவதற்கு உதவ வேண்டும்.  தொழிலாளர் வர்க்கம் தற்போதைய முத லாளித்துவ அமைப்பின் உள்ளார்ந்த சுரண்டல் தன்மையைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். அதை மாற்றுவதற்காக அனைத்து சுரண்டப்படும் மற்றும் ஒடுக்கப்படும் பிரிவுக ளையும் ஒன்றிணைக்க வேண்டும். மாபெரும் வெற்றி பெறுவோம்! இந்த நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புக ளும் தொழிலாளர் வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான கூட்டுத் தாக்குதலாகும். வேலைப் பாதுகாப்பு, நியாயமான கூலி, வேலை நிறுத்த உரிமை, சமூகப் பாதுகாப்பு, பாது காப்பான பணிச்சூழல் - இவை அனைத்தும் இந்த சட்டத் தொகுப்புகளால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.  தொழிலா

ளர் வர்க்கம் இந்த சூழ்நிலையில் தனது வரலாற்றுப் பொறுப்பை உணர்ந்து, ஒன்றி ணைந்த போராட்டத்தின் மூலம் தனது உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். ஜூலை 9, 2025 பொது வேலைநிறுத்தம் இந்த திசையில் ஒரு முக்கியமான அடியாகும்.  தமிழில்: க.ஆனந்தன், தூத்துக்குடி