articles

img

காலத்தை வென்றவர்கள் மூலதனத்தை மொழிபெயர்த்த விடுதலைப் போராட்ட வீரர் - பெரணமல்லூர் சேகரன்

காலத்தை  வென்றவர்கள் மூலதனத்தை மொழிபெயர்த்த விடுதலைப் போராட்ட வீர

இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சிய சிந்தனையாளர், நூலா சிரியர், கவிஞர், பன்மொழிப் புலவர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல பரி மாணங்கள் கொண்ட ஜமதக்னி. வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கத்திற்கு அருகில் கடப்பேரி என்னும்  ஊரில் 1903 ஏப். 15இல் பிறந்தார். இன்டர் மீடியட் வகுப்பில் தேறிய பின்னர் ஆறு மாதம் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி  புரிந்தார். தமிழ், சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளின் இலக்கியங் களைக் கற்றிருந்தார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார்.  உப்புச் சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்ட போது காவலர்கள் இவர் மண்டையில் அடித்ததால் மயக்கமுற்று மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் நிலை ஏற் பட்டது. சிறையில் இருந்தபோது நூல்கள் பலவற்றைப் படித்துத் தம் அறிவை வளர்த்துக் கொண்டார். 1931 இல் அரக் கோணத்தில் கள்ளுக்கடை மறியலின் போது கத்தியால் குத்தப்பட்டு உயிர் தப்பினார். இவர் எழுதிய நூல்களில் ‘பக்த விஜயம்’, ‘கனிந்த காதல்’, ‘தேசிய கீதம்’, ‘சோசலிஸ்டு கீதங்கள்’, ‘மார்க்சியம்’, ஆகியவை ‘இந்தியாவிற்கு ஏன் சோச லிசம்?’ குறிப்பிடத்தக்கவை. கம்ப ராமாயணத்தையும், வால்மீகி ராமா யணத்தையும் ஒப்பிட்டு 20 கட்டுரைகளை எழுதினார். இவரது தமிழாக்க நூல்கள் ‘மேக  சந்தேசம்’, ‘காமன் மகள்’, ‘இரகு வம்சம்.’ ‘பூமியின் வரலாறு’ என்னும் நூலும் உயிர்களின் தோற்றம்’ என்னும் நூலும் கையெழுத்துப்படியாக இருக்கும்போதே தமிழக அரசின் பரிசைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மாமேதை மார்க்சின் ‘மூலதனம்’  நூலை தமிழாக்கம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகே அச்சுக்கு வந்தது.  1981-மே 27 அன்று காலமான அவரது களப் பணியும் எழுத்துப் பணியும் அளப் பரியதும் அர்ப்பணிப்பு மிக்கதுமாகும்.