தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் எழுச்சியை வலுப்படுத்துவோம் !'
சிஐடியு 55ஆவது ஆண்டு நிறைவு
இந்திய தொழிற்சங்க வரலாற்றில் சிஐடியு என்கிற இந்திய தொழிற்சங்க மையம் 54 ஆண்டுகளை நிறைவு செய்து 55ஆவது ஆண்டு துவக்கத்தினை மே 30 அன்று அமைப்பு தினமாக நாடு முழுவதும் கொண்டாடு கிறது. சிஐடியு தோழர்கள் தங்களது பணித் தளத்தில் செங்கொடி ஏற்றிடவும், ஆலை வாயில் கூட்டங்கள் நடத்திடவும், சிஐடியு-வின் நீண்ட நெடிய வர்க்கப் போராட்டங்கள், தனித்தும் கூட்டாகவும் முன்னெடுத்த போராட்ட அனு பவங்களை இன்றைய தலைமுறை தொழி லாளர்களுக்கு விளக்கக் கூட்டங்களாகவும் நடத்துகிறார்கள்.
பன்முனைத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள்
இக்காலத்தில் ஆளும் வர்க்கத்தின் தொழி லாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மட்டுமல்ல, விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடிய கொள்கைகளை எதிர்த்தும், மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், ஆலை நிர்வாகங்களின் பழிவாங்கல் நட வடிக்கைகள் ஒருபுறம், அரசு இயந்திரங்கள் அப்பட்டமாக நிர்வாகங்களுக்கு ஆதர வான நிலை மறுபுறம் என இருமுனை தாக்கு தல்களையும் எதிர்கொண்டு தொழிலாளர் களின் உறுதிமிக்க ஒற்றுமையான போராட்டங் களையும் சிஐடியு முன்னெடுத்துள்ளது.
வரலாற்றுப் பின்னணி: ஏஐடியுசி -யில் இருந்து சிஐடியு வரை
பிரிட்டிஷ் ஆட்சியில் பஞ்சாலைகள், சணல் ஆலைகள், நிலக்கரிச் சுரங்கங்கள் என பல ஆலைகளில் தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வந்த நிலையில், நாடு முழுமைக்கான ஒரு சங்கம் உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்ட நிலையில் 1920 அக்டோபர் 31இல் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ்(ஏஐடியுசி) அமைக்கப்பட்டது. இச்சங்கமானது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தலைவர்களால் வழிநடத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட சவால்கள் நாடு விடுதலைக்குப் பிறகு ஆட்சி பொறுப் பேற்ற காங்கிரஸ் கட்சி கடைப்பிடித்த கொள்கை கள் காரணமாக ஏற்பட்ட கடுமையான பொரு ளாதார நெருக்கடியின் பின்னணியில் தொழி லாளர்கள் மற்றும் மக்களின் வாழ்க்கை மீது கடுமையான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. ஆலைகள் மூடல், வேலை இழப்பு, காண்ட்ராக்ட் முறை அதிகமாக்கல், கூட்டுப்பேர சக்தியின் மீது தாக்குதல், போனஸ் மறுப்பு, சமூகப் பாதுகாப்பு மறுப்பு போன்ற கடுமையான தாக்குதல்கள் நடந்தபோதும், அனைத்து தொழிற்சங்கங் களையும் ஒன்றிணைத்து ஓர் ஒன்றுபட்ட போராட்டத்தை உருவாக்க வேண்டிய பொறு ப்பும், கடமையும் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசுக்கு இருந்தது.
வர்க்கச் சமரசமா? வர்க்கப்போராட்டமா? '
ஆனால் பெரும்பாலான தலைவர்கள், வர்க்கப் போராட்டத்தை வலுப்படுத்தாமல், வர்க்க சமரசப் பாதையை தேர்ந்தெடுத்தார்கள். ஆளும் வர்க்கத்துடன் செய்த சமரசப் போக்கையும் ஆளும் கட்சியுடன் கொண்ட கூட்டணியையும் முற்போக்கான செயல் என்று சித்தரிக்க முயன்றார்கள். வர்க்கப் போராட்டம் என்ற கருத்தையே ஏளனம் செய்யும் நிலையை சமரசத் தலைவர்கள் மேற்கொண்டார்கள். அதே நேரத்தில் ஒரு பிரிவு தலைவர்கள் தேசிய மட்டத்திலும், தொழிற்சாலை மட்டத்தி லும், வர்க்கப் போராட்டப் பாதையை பின்பற்ற வேண்டும் என்றும், தொழிலாளி வர்க்கத்தை, இயக்கத்தை அரசின் கொள்கைகளுக்கு எதிராக ஒரு சரியான போராட்டப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டனர்.
சிஐடியு உருவாக்கம்: 1970
இது குறித்து கோவாவில் 1970 ஏப்ரல் 9,10 தேதிகளில் நடைபெற்ற தொழிலாளர்களின் கருத்தரங்கத்தில், இந்த பிரச்சனை ஆழமாக விவாதிக்கப்பட்டது. அமைப்பின் ஒற்றுமையை பாதுகாக்கவும், அமைப்பை போராட்டப் பாதை யில் கொண்டு செல்லவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சியெல்லாம் வர்க்கச் சமரசத் தலைமை யின் ஜனநாயக விரோத நிலைபாட்டின் காரண மாக இறுதியில் தோல்வியடைந்தது எனவும், ஆளும் வர்க்கத்தின் தாக்குதலுக்கும், தொழி லாளர் விரோதக் கொள்கைக்கும் எதிரான போராட்டப் பாதையில் தொழிற்சங்க இயக்கத் தைக் கொண்டு செல்வதற்கான இலக்கினை செயல்படுத்த ஒரு புதிய தொழிற்சங்க மையம் அமைக்கப்பட வேண்டியது தேவை எனவும் அந்த கருத்தரங்கம் கவனத்தில் எடுத்துக் கொண்டது; அதற்கான ஒரு தீர்மானமும் நிறை வேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின்படி, கொல்கத்தாவில் 1970 மே 27 முதல் 31 வரை நடைபெற்ற மாநாட்டிற்கு தோழர் ஜோதிபாசு தலைமையில் வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. மே 30, 1970 அன்று தோழர் பி.டி.ரணதிவே தலைவராக வும், தோழர் பி.ராமமூர்த்தி பொதுச்செயலாள ராகவும் கொண்ட இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) என்கிற அகில இந்திய அளவிலான புதிய தொழிற்சங்க இயக்கம் அமைக்கப்பட்டது.
சிஐடியு-வின் கொள்கை அடித்தளம்
சிஐடியு-வின் அமைப்புச்சட்டம் தனது குறிக்கோள்களாக “தொழிலாளி வர்க்கத்தின் மீதான சுரண்டல் முடிவுக்கு வரவேண்டு மானால், அனைத்து உற்பத்தி முறைகள், பகிர்ந்தளித்தல் மற்றும் பரிவர்த்தனை அனைத்தும் கொண்டு வரக்கூடிய சோசலிச சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றும், சோசலிச சமுதாயம் மட்டுமே தொழிலாளி வர்க்கத்திற்கு வாழ்க்கையில் அடிப்படையான மாற்றங்களை கொண்டு வரும்” என்றும் முன் வைத்தது.
ஒன்றுபட்ட போராட்டங்களின் வளர்ச்சி
சிஐடியு உதயமான நாளில் இருந்து ஒன்று பட்ட போராட்டங்களை உருவாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் பல்வேறு நிலைகளைக் கடந்து வந்துள்ளது. மும்பையில் ஜூலை-1981இல் நடந்த மிகப்பிரமாண்டமான கருத்தரங்கத்தில் “தேசிய பிரச்சார மேடை” அமைக்கப்பட்டது. முதல் நாடுதழுவிய வேலைநிறுத்தம்: 1982 1982 ஜனவரி-19இல் நடைபெற்ற நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் இந்திய தொழிற்சங்க வரலாற்றிலேயே முதன்முறை யாக நடந்த அகில இந்திய அளவிலான எதிர்ப்பு நடவடிக்கை ஆகும். இந்த வேலை நிறுத்தத்தையொட்டி, தோழர் பி.டி.ரணதிவே, தோழர் பி.ராமமூர்த்தி ஆகியோர் விடுத்த அறிக்கையில் “காங்கிரஸ் அரசின் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறை களை எதிர்த்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 50 ஆயிரம் தொழிலாளர்கள் கைது செய்யப் பட்டாலும் போலீஸ் தடியடி, துப்பாக்கிச்சூடு, குண்டர்களின் தாக்குதல் அனைத்தையும் மீறி இந்திய தொழிலாளி வர்க்கம் தொழிற்சங்க வரலாற்றில் முத்திரை பதித்து உள்ளனர்” என குறிப்பிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தியாகங்கள் தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்தின் போதுதான் விவசாய இயக்கத் தோழர்கள் திருமெய்ஞானத்தில் அஞ்சான், நாகூரானும், திருத்துறைபூண்டியில் ஞானசேக ரனும் காவல்துறையின் அடக்குமுறையால் பலியானார்கள். இந்த போராட்டத்தில் தங்க ளது உயிர்களை தொழிலாளி வர்க்கத்திற்காக அர்ப்பணித்த தியாகிகளை போற்றுகிற வகை யில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 19 தியாகி கள் தினமாக சிஐடியு அனுஷ்டித்து வருகிறது. தமிழ்நாட்டில் விவசாய இயக்கத்தை வளர்த்தெடுக்க சிஐடியு-வின் ஒவ்வொரு உறுப்பினரும் தலா 1 ரூபாயை விவசாய இயக்க வளர்ச்சி நிதியாக 40 ஆண்டுகளுக்கு மேலாக அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. மோடி அரசின் கார்ப்பரேட் சார்புக் கொள்கைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக மோடி அரசின் தொழிலாளர் விரோத, விவசாய விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக சிஐடியு தனித்தும், கூட்டாகவும் பலகட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இக்காலத்தில் தொழிலாளர் சட்டங்கள் திருத்தம் என்ற பெயரில் நான்கு சட்டத்தொகுப்பு களை சட்டமாக்கியது. மோட்டார் வாகன சட்டத் திருத்தம், மின்சார திருத்தச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்தங்கள், கடற்கரை மேலாண்மை சட்டம், பொதுத்துறை நிறு வனங்களை கார்ப்ரேட் நிறுவனங்களாக மாற்றும் சட்டம், பொதுத்துறை நிறுவனங் களை தனியார்மயமாக்கும் சட்டம் என தொழி லாளர்கள் மீது பலவிதமான தாக்குதல்களை யும் தொடுத்து வருகிறது. விவசாயிகள் போராட்டத்திற்கான ஆதரவு 2020இல் தலைநகர் டில்லியில் விவசாயி கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தை ஆத ரித்தது மட்டுமல்ல, மத்திய தொழிற்சங்கங் களுடன் இணைந்து நாடு தழுவிய ஆதரவு இயக்கங்களையும் சிஐடியு முன்னெடுத்தது. தீரமிக்க இந்த போராட்டத்தின் உறுதிக்கு முன்னால் மோடி அரசு மண்டியிட்டது. தேர்தல் பத்திர ஊழலும் கார்ப்பரேட் கள்ளக் கூட்டணியும் இந்திய பெரு முதலாளிகளுக்கும், கார்ப்ப ரேட்டுகளுக்கும் கொள்ளை லாபத்தை ஈட்டும் வகையில் தொழில் நடத்துவதை எளிமைப் படுத்துவது, தொழில் துவங்குவதற்கு ஊக்கம் அளிப்பது என்ற பெயரில் லட்சக் கணக்கான கோடி ரூபாயை முதலாளிக்கு வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு கை மாறாக பெரும் நிறுவனங்கள் “தேர்தல் பத்திரம்” என்ற பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியை பாஜகவிற்கு நன்றிக் கட னாக கொடுத்திருப்பது அம்பலமாகியுள்ளது. மூன்றாம் முறை ஆட்சியின் தீவிரமான நிலைபாடு மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப் பேற்றுள்ள மோடி அரசு, மதவாத - கார்ப்பரேட் கள்ளக்கூட்டணி அரசு, தனது சிந்தாந்த ரீதியிலான வெறுப்பு அரசியலையும், கார்ப்ரேட் ஆதரவு நிலைபாட்டையும் அனைத்து நிலை களிலும் மிக தீவிரமாக ஊடுருவச் செய் துள்ளது. இதை எதிர்ப்பவர்களை தேச விரோதி என முத்திரை குத்தவும் முயற்சிக்கிறது. நம் முன்னுள்ள கடமை மோடி அரசின் கொள்கைகளினால் ஏற்படும் விளைவுக்கு எதிராகப் போராடுவது மட்டும் போதாது, அந்த கொள்கைகளுக்கு பின் னால் உள்ள அரசியலையும் அம்பலப்படுத்து வதே நம் முன் உள்ள கடமையாகும். ஜூலை 9 வேலைநிறுத்தத்திற்கான அழைப்பு எதிர் வரும் ஜூலை 9ம் தேதி நடைபெறவுள்ள இந்திய தொழிலாளி வர்க்கத்தின் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றி பெற செய்வதே சிஐடியு-வின் 55ஆவது அமைப்பு தின சூளுரையாக ஏற்போம்.