முன்னணி ஊழியர்களுக்கு முக்கியமான கையேடு
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உதயமான சமயத்தில், தோழர் எம்.ஆர். அப்பன், செம்பியன் என்னும் புனைபெயரில் எழுதிய ‘ஸ்தாபனம் ஓர் அறிமுகம்’ என்னும் சிறுபிரசுரம் தற்போது தஞ்சா வூர், வீரா பதிப்பகம் சார்பில் மூன்றா வது பதிப்பாக வெளியிடப்பட்டி ருக்கிறது. இது, 16 பக்கங்களைக் கொண்ட சிறுபிரசுரம் என்ற போதி லும், இயக்கங்களில் ஈடுபடும் ஒவ்வொரு முன்னணி ஊழியர் கைகளிலும் போர்வாளாக இருக்க வேண்டிய ஒரு புத்தகமாகும். உடனடித் தேவைக்காகவும், கோரிக்கைகளுக்காகவும் நடத்தும் போராட்டங்கள் அனைத்தும் சமூக மாற்றத்துக்காக நடத்தப்படும் நெடிய போராட்டத்தின் ஒரு பகுதி யே என்பதை எம்.ஆர்.அப்பன் இதில் சுட்டிக்காட்டி இருக்கிறார். “தொழிற்சங்கத்திற்கு ஒரு வரலாற்றுக் கடமையுண்டு. அந்தக் கடமையை நிறைவேற்ற திறமை வாய்ந்த தலைமை தேவை. உணர்வுள்ள - போர்க்குணமிக்க தொண்டர்கள் தேவை. முழுமையான -ஜனநாயக ரீதியான நடைமுறை தேவை.” என்று வலியுறுத்தி இருக்கிறார். தொழிற்சங்க ஜனநாயகம் குறித்தும், விமர்சனம்-சுய விமர்சனம் குறித்தும் மிக அற்புதமாக விளக்கி இருக்கிறார். “விமர்சனமும், சுயவிமர்சனமும் ஓர் இயக்கத்தின் ரத்தமும் சதையும் போன்றதாகும். சங்கத்தினுடைய ஜனநாயக மரபுகளைப் பேணிப் பாதுகாப்பதற்கான மாபெரும் வாய்ப்பைத் தருவது விமர்சனமாகும். இதுவே சங்கத்தில் ஜனநாயகத்தை உத்ரவாதப்படுத்துவதற்குரிய பாதுகாப்பையும் வழங்கும். சங்கத்தில் உள்ள தலைவர்களோ அல்லது ஏனையோரோ செய்யும் தவறுகளை-பிழைகளை-சறுக்கல்களை வெளிக் கொணரும் வாசல்களைத் திறந்துவிடுவது விமர்சனமும் சுய விமர்சனமுமேயாகும். தவறுகளை-பிழைகளை சறுக்கல்களை களையவும், எதிர் காலத்தில் இப்போக்குகள் ஏற்படுத்துவதைத் தடுக்கும் சக்தியாகவும் விமர்சனமும், சுய விமர்சனமும் அமைகின்றது” என்கிறார் அப்பன். அனைத்தையும் தீர்மானிப்பவர்கள் முன்னணி ஊழியர்களே என்றார் தோழர் ஸ்டாலின். அதை முன்னணி ஊழியர்களும், மற்றவர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் ‘சரியாக பயிற்றுவிக்கப்பட்ட முன்னணி ஊழியர்கள்’ என்ற உபதலைப்பில் முன்னணி ஊழியர்களின் முக்கியத்துவத்தையும் அவர்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் கூறியிருக்கிறார். இயக்கங்களில் ஈடுபடும் ஒவ்வொரு தோழரும் அவசியம் படிக்க வேண்டிய கையேடாகும். ஸ்தாபனம் -ஓர் அறிமுகம் ஆசிரியர் : எம்.ஆர்.அப்பன் வெளியீடு : வீரா பதிப்பகம் தொடர்புக்கு : 8903631454