சிரட்டைகளில் கலைப்பொருட்கள்
நெகிழி எனும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தி அரசும் தன்னார்வலர்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவர், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சிரட்டைகளில் பொருட்களை செய்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே நெகிழிக்கு மாற்றாக தென்னை சிரட்டைகளைக் கொண்டு வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வண்ண விளக்குகள், அலங்காரப் பொருட்களை செய்து அசத்து கிறார் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். இவரின் அசாத்திய திறமை யை கண்டு ஆச்சரியப்படும் மக் கள் ஆர்வமுடன் வந்து பொருட் களைப் பார்வையிட்டு, அவரை பாராட்டுகின்றனர். குமரி மாவட்டம் நித்திர விளை அருகே பணமுகம் பகுதி யில் சேர்ந்தவர் தம்பிராஜ் என்ற சோபி. இவர் சிறுவயது முதலே கலைத்துறையில் ஆர்வம் கொண்டிருந்தவர். பள்ளி காலங் களிலேயே பல்வேறு நாடகங்க ளில் நடித்து வந்துள்ளார் . வேலை நிமித்தமாக வெளி யூர் செல்லும் போதெல்லாம் தேநீர் கடைகளில் நெகிழி கோப் பைகளில் தேநீர் குடிப்பதை தவிர்த்து வந்துள்ளார். நெகிழி யால் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வரும் அபாயம் இருப்ப தால் அதற்கு மாற்றாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு எழுந்தது. 19 ஆண்டுகள் மின்வாரி யத்தில் பணியாற்றி 2023 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். ஓய்வு நாட்களை எப்படி பயனுள்ளதாக மாற்றுவது என்ற எண்ண ஓட்டத் தில் இருந்த அவருக்கு மீண்டும் நெகிழிக்கு எதிரான சிந்தனை தோன்றியுள்ளது. அதன் வெளிப்பாடாக முதன் முதலாக தனது வீட்டில் பயன்படுத்தி வெளியே வீசப்பட்ட தென்னை சிரட்டைகளைக் கொண்டு ஒரு தேநீர் கோப்பையை உருவாக்கி அதனை பயன்படுத்தி வந்துள் ளார். இது அவருக்கு ஒருவித உத்வேகத்தை தரவே, தேங்காய் சிரட்டைகளைக் கொண்டு வேறு பல பொருட்களை செய்ய முடி வெடுத்தார். அதற்கு தேவையான வற்றை வாங்கிய தம்பிராஜ், பல வித வீட்டு உபயோகப் பொருட் கள், அலங்காரப் பொருட்கள், வண்ண விளக்குகள், பழக்குலை உள்ளிட்டவற்றை கலைநயத்து டன் அதன் தன்மை மாறாமல் செய்து அசத்தி வருகிறார். இதனை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நேரில் வந்து பார்த்து ஆச்சரியம் அடைவது டன், அவரது திறமையைப் பாராட்டுகின்றனர். பலரும் தங்கள் வீட்டு தேவைகளுக்கு வாங்கிச் செல்கின்றனர். இது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தம்பிராஜ் நெகிழ்ச்சி அடைகிறார். பலரும் நெகிழிக்கு மாற்றாக இயற்கையான பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று கூறுகிறார் தம்பிராஜ்.