articles

img

மேற்கு ஆப்பிரிக்காவில் புதிய எழுச்சியின் துவக்கம் - பேரா.பிரபாத் பட்நாயக்

மேற்கு ஆப்பிரிக்காவில் புதிய எழுச்சியின் துவக்கம்

பிரெஞ்சு மொழி பேசும் ஆப்பிரிக்க நாடுகள் முழுமையாக காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறவில்லை. முன்னாள் காலனி நாடுகளில் தனது சொத்துக்களைப் பாதுகாப்ப தற்காக, பிரான்ஸ் அந்நாடுகளில் தனது ராணுவத்தை நிலைநிறுத்த வலியுறுத்தியது. அந்த காலனி நாடு களும் இதற்கு ஒப்புக்கொண்டன. இது பிரான்சுக்கு தனது முன்னாள் காலனி நாடுகளின் அரசியலில் தலையிடுவதற்கு பெரும் வாய்ப்புகளை வழங்கியது.

பிரான்சின் காலனித்துவக் கட்டுப்பாடு

இந்தக் காலனி நாடுகள் பிரான்ஸ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ‘சிஎப்ஏ ஃபிராங்க்’ (CFA FRANC) என்ற நாணயத்தை ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டன. இந்த நாணயம் பிரெஞ்சு ஃபிராங்குடன் நிலையான பரிமாற்ற விகிதத்தைக் கொண்டிருந்தது. இந்த நிலை யான பரிமாற்ற விகிதத்தைப் பராமரிக்க, இந்த நாடுக ளின் பணவியல் கொள்கை பிரான்ஸ் நாட்டின் மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்பட்டது. பணவியல் கொள் கையை பொதுவான பொருளாதாரக் கொள்கை யிலிருந்து பிரிக்க முடியாததால், இந்நாடுகளின் பொரு ளாதாரக் கொள்கையும் பெரும்பாலும் பிரான்ஸால் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த முழு ஏற்பாடும் பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றி யத்தில் இணைந்த பிறகும் தொடர்ந்தது. எனவே, பிரான்சின் முன்னாள் காலனி நாடுகளின் சுதந்திரம் எப்போதும் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்த காலனித்துவ அமைப்பிலிருந்து வெளியேற, காலனி நாடுகளில் அதிகாரத்தைக் கைப்பற்றிய புரட்சி யாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அமெரிக்க ஆதரவுடன் பிரான்ஸால் கொடூரமாக நசுக்கப்பட்டன.

தாமஸ் சங்காராவின் படுகொலை

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் அதிகாரத்திற்கு வந்த புரட்சியாளர் தாமஸ் சங்காரா,  தனது நாட்டிலிருந்து பிரான்ஸ் ராணுவத்தை வெளி யேற்ற விரும்பினார். அவர் தனது கட்சி உறுப்பினர் ஒருவரால் நடத்தப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் கொல்லப்பட்டார். இந்த ஆட்சிக்கவிழ்ப்பும் படுகொ லையும் தெளிவாக பிரான்சின் தூண்டுதலாலும் ஆதர வுடனும் நடைபெற்றது. எனினும், இந்த நாடுகளில் புதிய காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

இப்ராஹிம் தரோரின் எழுச்சி

இத்தகைய பின்னணியில் 2022இல் புர்கினோ பாசோவில் அமைக்கப்பட்ட “பாதுகாப்பு மற்றும் நாட்டை மீட்டெடுக்கும் தேசப்பற்று இயக்கத்தின்” (PMSR) இளம் தலைவரான கேப்டன் இப்ராஹிம் தரோர், 2022 செப்டம்பர் 30 அன்று அந்நாட்டின் அதி காரத்தைக் கைப்பற்றிய பிறகு, தனது நாட்டிலிருந்து பிரான்ஸ் படைகளை வெளியேற வலியுறுத்தினார். அதில் வெற்றியும் பெற்றார். மேலும், தனது நாடு சிக்கியிருந்த சிஎப்ஏ ஃபிராங்க் நாணய ஏற்பாட்டிற்கும் முடிவு கட்டினார். பின்னர், தனது அண்டை நாடுகளான மாலி மற்றும் நைஜருடன் இணைந்து “சஹேல் நாடுகளின் கூட்டமைப்பை” (AES) - அதாவது மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு - உருவாக்கினார். இந்த இரண்டு நாடுக ளும் காலனியாதிக்கத்திலிருந்து உண்மையான விடு தலைக்கான ஆர்வத்தால் உந்தப்பட்டிருந்தன. பிரான்ஸ் மற்றும் அமெரிக்கப் படைகள் நைஜரிலி ருந்து வெளியேற்றப்பட்டன. அங்கிருந்த பெண்டகன் டிரோன் நிலையமும் மூடப்பட்டது. இவ்வாறு, கனிம வளங்கள் மிகவும் செழிப்பாக உள்ள பகுதியில் சஹேல் கூட்டமைப்பு ஏகாதிபத்தியத்திற்கு ஒரு முள்ளாக உருவெடுக்கத் தொடங்கியது.

தங்க வளத்தின் தேசியமயமாக்கல்

இந்த கனிம வளங்களில் தங்கம் முக்கிய இடம் வகிக்கிறது. புர்கினோபாசோ ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். 2024-இல் 57 டன் தங்கத்தை இந்நாடு உற்பத்தி செய் தது. ஆனால் அந்த நாட்டு மக்கள் இத்தங்க உற்பத்தி யில் இருந்து எந்தப் பலனும் பெறவில்லை. தங்கச் சுரங்கங்களை உடைமையாக்கிக் கொண்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்கே தங்கத்திலிருந்து கிடைக்கும் பெரும்பகுதி வருவாய் சென்றது. இப்ராஹிம் தரோர் தலைமையிலான அரசாங்கம் 2024-இல் சோபாமிப் (SOPAMIB) என்ற அரசு நிறுவனத்தை உருவாக்கி, தங்கம் எடுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து சுரங்கங்களைப் படிப்படியாக கைப்பற்றுவதில் ஈடுபடுத்தியது. அரசு டைமையாக்கப்பட்ட தங்கச் சுரங்கங்களிலிருந்து புர்கினோ பாசோ அரசாங்கத்திற்குக் கிடைத்த அதிக வருவாயை நாட்டைத் தொழில்மயமாக்குவதற்கும், புர்கினோபாசோ மக்களிடையே கல்வி மற்றும் சுகாதாரத்தை அதிகரிப்பதற்கும் மிகத் துரிதமாக பயன்படுத்தியது. தங்க விலை சமீபத்தில் உயர்ந்து வருகின்றது. டாலரின் எதிர்காலம் குறித்த சந்தேகங்கள் எழுந்து, பலர் டாலருக்குப் பதிலாக தங்கத்தை வைத்திருக்க முயற்சிக்கும் இந்தச் சூழலை புர்கினோ பாசோ அரசு பயன்படுத்திக் கொண்டது. இதன் மூலம், பிரான்ஸ் படைகளை தனது நாட்டிலிருந்து வெளியேற்றியதன் விளைவாக மேற்குலக நாடுகள் நேரடியாகவும் மறை முகமாகவும் விதித்த பொருளாதாரத் தடைகளின் விளைவுகளை ஓரளவுக்கு எதிர்கொள்ளும் நிலைக்கு புர்கினோ பாசோ வந்துள்ளது.

பொருளாதார சுயாட்சிக்கான நடவடிக்கைகள்

இப்ராஹிமின் அரசாங்கம் கைவினைத் தங்கத் துறையையும் ஒழுங்குபடுத்தியது. நாட்டில் தங்க சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்தது. மேலும், புர்கினோ பாசோவின் பிற முதன்மை உற்பத்திப் பொருட்களை உள்நாட்டிலேயே பதப்படுத்த முயன்றது. விவசாயிகளுக்கு வேளாண் உற்பத்தியை அதிகரிக்க உதவியது; மற்றும் உணவு தானிய தன்னிறைவை அடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நடவடிக்கைகள் எதிர்பார்த்தபடியே அமெ ரிக்காவின் ஆத்திரத்தைத் தூண்டின. அமெரிக்க செனட் குழு முன்பாக நடைபெற்ற ஒரு விசார ணையில், அமெரிக்க ஆப்பிரிக்க ராணுவப் பிரிவின் (ஆப்பிரிக்காம் -AFRICOM) தலைவரான ஜெனரல் மைக்கேல் லாங்கி, தங்கத்திலிருந்து பெற்ற வருமானத்தை இப்ராஹிம் தரோர் தனது சொந்தப்  பயன்பாட்டிற்காக, குறிப்பாக தனது தனிப்பட்ட  பாதுகாப்பை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்துவதாக தீய நோக்குடன் குற்றம் சாட்டினார். மைக்கேலின் இந்தக் கருத்துக்கள் ஆப்பிரிக்கா முழுவதும் ஊடகங்க ளால் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டன. ஆனால் ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதும் உள்ள மக்களிடமி ருந்து இது பரவலான எதிர்விமர்சனத்தைப் பெற்றது.

ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி

லாங்கியின் கருத்துக்கள் இப்ராஹிமுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்புக்கு தளம் அமைக்கும் நோக்கத்தை கொண்டிருக்கலாம். இப்ராஹிம் தரோர் அரசு “சர்வாதிகாரம்” என்றும், புர்கினோ பாசோவில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்றும் மேற்கு நாடுக ளில் பெயரிடப்படாத மூலங்களிலிருந்து எழுதப்பட்ட கட்டுரைகளுக்கு மத்தியில், ஏப்ரல் 16 அன்று ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடைபெற்றது. இருப்பி னும், இந்த முயற்சி வெற்றி பெறவில்லை, சதிகாரர் கள் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் இப்ராஹிம் தரோர்- தாமஸ் சங்காராவுக்கு ஏற்பட்ட கதி நேராமல் தப்பினார். ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி என்பது, காலனி ஆதிக் கத்திலிருந்து விடுதலை பெற முயல்கிற ஆப்பிரிக்க அரசாங்கங்களுக்கு ஏகாதிபத்தியத்தின் கணிக்கக் கூடிய பழிவாங்கல் ஆகும். ஆப்பிரிக்கக் கண்டத்தில் காலனி ஆதிக்க விடுதலைப் போராட்டம் எதிர் கொள்ளும் சிரமங்களை இது உணர்த்துகிறது. இந்தச் சிரமங்கள் பல மூலங்களிலிருந்து எழுகின்றன. பல்முனை சவால்கள் புர்கினோ பாசோ, ஏகாதிபத்தியத்தை எதிர்கொள்வ தோடு, அந்நாட்டின் நிலப்பரப்பில் 40 சதவீதத்தை கட்டுப்படுத்தும் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் அட்டூழியத்தையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்கிறது. கூடுதலாக, அந்தப் பகுதி ஏகாதிபத்தியத்தால் நிதிய ளிக்கப்படும் மேற்கத்திய சார்பு ஆட்சிகளைக் கொண் டுள்ளது. இந்த ஆட்சிகள் சடங்குப்பூர்வமாக நடத்தப்படும் தேர்தல்கள் மூலம் அதிகாரத்தைத் தக்க வைத்துள்ளன. இத்தேர்தல்களில், உண்மையான ஆளுமை இல்லாத மக்கள் பங்கேற்க அனுமதிக் கப்படுகிறார்கள். ஏகாதிபத்தியம் இத்தகைய ஆட்சிகளைப் பயன்படுத்தி தனது நோக்கங்களை அடைகிறது. முரண்பாடான அரசாங்கங்களுக்கு எதிராக பொருளா தாரத் தடைகளை விதிப்பது முதல் அவற்றிற்கு எதிராக ஆட்சிக்கவிழ்ப்புகளை நடத்த தளம் அமைப்பது வரை பல்வேறு வழிகளில் இவை பயன்படுத்தப் படுகின்றன. இகோவாஸின் (ECOWAS) நிலைப்பாடு உதாரணமாக, ‘மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார அமைப்பு’ (இகோவாஸ் - ECOWAS) புர்கினோ பாசோவுக்கு எதிராக அணி திரட்டப்பட்டது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பது என்ற  பெயரில் புர்கினோ பாசோவுக்கு எதிராக பொருளா தாரத் தடைகளை விதிப்போம் என அது மிரட்டியது (ஏனெனில் புரட்சிகர ஆட்சி “ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட” மேற் கத்திய ஆதரவு அரசாங்கத்தை கவிழ்த்து அதிகா ரத்திற்கு வந்திருந்தது). ஆனால் இந்த முயற்சி பெரி தாகப் பயனளிக்கவில்லை. ஏனெனில், விசித்திரமாக, “ஜனநாயக எதிர்ப்பாளர்” என்று அழைக்கப்பட்ட இப்ராஹிம் தரோர், புர்கினோ பாசோ மக்களிடையே வலுவான ஆதரவைப் பெற்றிருந்தார். இது அவரது அரசாங்கத்திற்கு ஆதரவாக வீதிகளில் நடைபெற்ற மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களில் வெளிப்பட்டது. இந்த நிலையில் தான் இகோவாஸ் (ECOWAS)-இல் இருந்து பிரிந்து சஹேல் கூட்டமைப்பு (AES) உரு வாக்கப்பட்டது. அண்டை நாடான ஐவரி கோஸ்ட், புர்கினோ பாசோவில் ஆட்சிக்கவிழ்ப்புகளை நடத்துவதற்கு பிரெஞ்சு நலன்களுக்கான தளமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. உண்மையில், தாமஸ் சங்காராவுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு சதிகாரர்கள் இறுதியில் ஐவரி கோஸ்ட்டுக்குத் தப்பிச் சென்று, அங்கு இன்னும் புகலிடம் பெற்று வாழ்கின்றனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியும் ஐவரி கோஸ்டை தளமாகப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. ஆப்பிரிக்க ஒற்றுமை இத்தகைய பின்னணியில், மேற்கு ஆப்பிரிக்கா வில் தொடங்கப்பட்ட காலனி ஆதிக்க எதிர்ப்பு விடுதலை முயற்சிகள், ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதும் மிகப் பெரிய அளவிற்கு மக்கள் ஆதர வைப் பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்பிரிக்கா முழுவதும் இப்ராஹிம் தரோருக்கு ஆதர வாக ஆர்ப்பாட்டங்களை நடத்தி, ஏகாதிபத்திய வாதிகளை புர்கினோ பாசோவிலிருந்து வெளியேறிச் செல்லுமாறு வற்புறுத்தினர். ஏகாதிபத்திய சக்திகளால் படுகொலை செய் யப்பட்ட பாட்ரிஸ் லுமும்பா, அமில்கார் கப்ரால், எட்வர்டோ மோண்ட்லேன், தாமஸ் சங்காரா ஆகியோர், தங்கள் உயிரைத் தியாகம் செய்த குவாமே நிக்ரூமா,  ஜூலியஸ் நைரேரே ஆகியோர் தங்கள் வாழ்நாள் முழுவதும் போராடிய நோக்கம், - காலனியாதிக்க எதிர்ப்பும்; பொருளாதாரச் சுரண்டலில் இருந்து விடுதலையும்-  ஆப்பிரிக்க மக்களிடையே வலு வாக எதிரொலிக்கிறது. ஆப்பிரிக்காவின் விடுதலைக் கான போராட்டத்தில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தை நாம் தற்போது காண்கிறோம். ஏகாதிபத்தியத்தின் கொடூரம் வரும் நாட்களில் இந்தப் போராட்டத்திற்கு எதிராக ஏகாதிபத்தியம் இன்னும் கொடூரமாக மாறும். பழைய பிரெஞ்சு நலன்களுக்கு மேலதிகமாக, உலகம் முழுவதும் மூலப்பொருட்களுக்கான டொனால்டுடிரம்ப் நிர்வாகத்தின் புதிய தேடலும் இப்போது சேர்ந்து உள்ளது. இந்த தேடலில் ஆப்பிரிக்கா நிச்சயமாக முக்கியப் பங்கு வகிக்கும். உண்மையில், டிரம்ப் ஏற்கனவே காங்கோ அரசின் ஒத்துழைப்புடன் காங்கோவின் கனிம வளங்களைக் கட்டுப்படுத்துவ தற்கான திட்டத்தை வகுத்துள்ளார். உலகின் கனிம வளங்களை, குறிப்பாக புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்குத் தேவையான வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்த டிரம்ப், அவசரமான முயற்சிகளில் இருக்கிறார். இந்த அவசரம் அவரது உக்ரைன் ஒப்பந்தத்தில், கிரீன்லாந்தை கைப்பற்றும் அவரது விருப்பத்தில், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக ஆக்கும் திட்டங்களில், கடல் தரையைக் கூட கட்டுப் படுத்த அவர் கொண்டுள்ள பேராசை நோக்கங்களில் தெளிவாகத் தெரிகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரில் “நேர்மையான மத்தியஸ்தர்” என்ற பெயரில் செயல்பட அவர் கொண்டுள்ள விருப்பமும் இரு நாடுகளின் செழிப்பான கனிம வளங்களைக் கைப்பற்றும் அவரது விருப்பத்துடன் தொடர்பில்லாமல் இல்லை. எதிர்காலப் போராட்டம் வரும் நாட்களில் ஆப்பிரிக்கா ஒருபுறம் ஏகாதிபத்தி யத்திற்கும் மறுபுறம் காலனி ஆதிக்க விடுதலைக்கான சக்திகளுக்கும் இடையே தீவிர போராட்டக் களமாக உருவாகும். முன்னது, ஆப்பிரிக்காவின் செழுமை யான இயற்கை வளங்களைத் தனக்காகக் கட்டுப் படுத்த விரும்புகிறது; பின்னது ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக இந்த வளங்களைப் பெற விரும்புகிறது. பீப்பிள்ஸ் டெமாக்ரசி (மே,11) தமிழில் : சேதுசிவன்