articles

img

பட்டியல் சாதிகளில் உள் வகைப்படுத்தல்: தலித் ஒற்றுமைக்கு எதிரானதா? -பி.வி.ராகவலு, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

நேற்றைய தொடர்ச்சி...

தீண்டாமைக் கொடுமையை நேரடியாக எதிர் கொள்வதற்கு மட்டுமே வடிவமைக்கப்பட்ட ஆயு தமாக இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் வளர்வ தற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், பட்டி யலினத்தவர் வாழ்நிலையை மேம்படச் செய்வ தோடு, அவர்கள் சந்திக்கும் சமூக ஒடுக்குமுறைக ளைச் சமாளிக்கத் தேவையான சுயவிடுதலையைப் பெறுவதற்கான ஊக்கத்தையும் வழங்கக் கூடிய தாகவே அது அமைந்துள்ளது. அதனால்தான் அரு வருப்பான தீண்டாமைக் கொடுமையை நேரடியாக எதிர்கொள்ள சிறப்பு விதிகள் அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படை யில், இத்தகையக் குற்றங்களைத் தடுக்கப் பல்வேறு சட்டங்களை அரசு இயற்றியுள்ளன. பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்தில்தான் இடஒதுக்கீடு தரப்படுகிறது. அதேவேளையில், பாதிக்கப்பட்ட பிரிவினர் மத்தி யிலும் அதை சமமாகப் பகிர்வதை உறுதி செய்வது முற்றிலும் நியாயமானதாகும்.

நிலுவை காலியிடங்கள் நிரப்பப்படாதா?

உட்பிரிவு வகைப்படுத்தலால் கூடுதல் பணி யிடங்கள் நிரப்பப்படாமலேயே போய் விடும் என்றும், தொடர்ந்து அவை பொதுப் பிரிவினருக் கான பணியிடமாக மாற்றப்பட்டு விடும் என்றும்  சிலர் கவலை தெரிவிக்கிறார்கள். உள்வகைப் படுத்தல் மற்றும் பொதுப் பிரிவுக்கு மாற்றம் செய்வது ஆகிய இரண்டும் சம்பந்தமில்லாத பிரச்சனைகளா கும். அவற்றை இணைத்துப் பார்க்க ஏதுமில்லை. 

உள் வகைப்படுத்தலுக்கான கோரிக்கை எழும்  முன்பே, பொதுப் பிரிவுக்கு மாற்றம் செய்வது குறித்த விவாதம் நடந்து வருகிறது. நிரப்பப்படாத பணி யிடங்களைப் பொதுப் பிரிவுக்கு மாற்றுவதற்கு எதிரான போராட்டங்களால், பின்னடைவுப் பணி யிடங்கள் (Backlog Vacancies) என்ற முறை அறி முகப்படுத்தப்பட்டது. இதையும் மீறி, நிரப்பப்படாத பணியிடங்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்படுவது இன்றும் தொடர்கிறது. அண்மையில், இவ்வாறு பொதுப் பிரிவுக்கு மாற்றுவதற்கான வழிமுறை களை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டது.  ஆனால் கடுமையான எதிர்ப்புகள் வந்ததால், அவை உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டன. வருங் காலத்தில் அத்தகைய முயற்சிகள் நடந்தால், அவை யும் உறுதியாக எதிர்க்கப்பட வேண்டும். ஆனால், அந்தப் பிரச்சனையை உட்பிரிவு வகைப்படுத்த லோடு இணைப்பது சரியானதல்ல. 

உள்வகைப்படுத்தல் என்பது பட்டியலின சமூகத்திற்கு உள்ளேயுள்ள பிரச்சனையாகும். ஏற்கனவே இருக்கும் ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு தருவது மட்டுமேயாகும். ஒரு உட்பிரிவுக்கான ஒதுக் கீடு நிரம்பாவிட்டால், வேறு உட்பிரிவின் மூலம் அதை நிரப்பலாம். அப்படியும் நிரம்பாவிட்டால், பின்னடைவுப் பணியிடமாக மாற்றி வைத்துக் கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக பட்டியலின ஒதுக் கீட்டிலிருந்து காலியிடங்களை மாற்றாமல் இருப்ப தையும் இது உறுதி செய்யும். உள் வகைப்படுத் தலை மாநிலங்களும், ஒன்றிய அரசும் அறிமுகப் படுத்துகையில், சம்பந்தப்பட்ட ஒதுக்கீட்டுப் பிரி விலிருந்து இடங்கள் மாற்றப்படுவதைத் தடுக்க, முறையான சட்ட நடைமுறைகளும், அரசியல் அமைப்புச் சட்ட நெறிகளும் உறுதி செய்யப் படுகிற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

தலித் ஒற்றுமைக்கு எதிரானதா?

தலித் ஒற்றுமையை உள்வகைப்படுத்துதல் சீர்குலைத்துவிடும் என்ற அச்சம் சில வட்டாரங்க ளில் வெளிப்படுகிறது. உள் வகைப்படுத்தல் என்ற  கோரிக்கை, பிளவை ஏற்படுத்துவதில்லை என்ப தைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமானதா கும். அதிகரித்து வரும் சமமற்ற நிலை, பலன்களை விநியோகிப்பதில் உட்பிரிவினர் எதிர்கொள்ளும் சமச்சீரற்ற நிலை மற்றும் இவற்றால் ஏற்படும் அதிருப்தி, ஆகியவையே பிளவை உண்டாக்கு கின்றன. வகைப்படுத்தலுக்கான கோரிக்கையும் அதில் இருந்தே எழுகிறது. இதனால், உள் வகைப் படுத்தலை எதிர்ப்பதால் ஒற்றுமை ஏற்படாது. சொல்லப்போனால், அதற்கு மாறான விளை வையே அத்தகைய எதிர்ப்பு உருவாக்கும். உள் வகைப்படுத்தலே ஒற்றுமையை வலுப்படுத்தும் என்பதே உண்மையாகும். பட்டியலினத்தவர்களில் ஓரளவு வளர்ந்துள்ள பிரிவினர், உள் வகைப் படுத்தலை ஆதரிக்க முன்வருவதால், சமூகங்க ளுக்கு இடையிலான உராய்வு மட்டுப்படும். அதோடு,  பட்டியல் சாதி மக்களுக்குள் வேற்றுமையை விதைக்கும் சக்திகளின் முயற்சிகளை முறியடிக்க வும் முடியும்.

வாக்கு வங்கி அரசியல் நடவடிக்கையா?

உள் வகைப்படுத்தலுக்கு எதிராக வைக்கப் படும் மற்றொரு வாதம் என்னவென்றால், அது முத லாளித்துவக் கட்சிகளின் கைகளில்  ஒரு கருவி யாகப் பயன்படுகிறது என்பதே. அதைத் தங்கள் வாக்கு வங்கி அரசியலுக்கு அவர்கள் பயன்படுத்துகி றார்கள் என்பதாகும். ஒரு சமூகத்தை, மற்றொரு சமூகத்திற்கு எதிராக நிறுத்துவது, மோதல்களைத் தூண்டுவது  ஆகியவற்றில் முதலாளித்துவக் கட்சி கள் தேர்ச்சி பெற்றுள்ளன என்பது உண்மைதான். குறிப்பாக, பாஜக இதில் திறமை பெற்றிருக்கிறது. இருந்தாலும், உள் வகைப்படுத்தலை நிராகரிக்க இதையொரு சாக்காகச் சொல்ல இயலாது. பல்வேறு உட்பிரிவுகளுக்கு இடையில் உள்ள சமச்சீரற்ற வளர்ச்சியை அங்கீகரிப்பது மற்றும் அறிவுசார்ந்த தீர்வுகளை முன்வைத்து ஒற்றுமை யைக் கட்டியெழுப்புவதன் மூலமே பிரித்தாளும் முதலாளித்துவ தந்திரத்தை நம்மால் முறியடிக்க இயலும். உண்மைப் பிரச்சனைக்கு தீர்வு காணா மல் தவிர்ப்பதால் அல்ல. 

முழுமையான தீர்வா?

உள் வகைப்படுத்தலுக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள ஒப்புதலால், பட்டியலின மக்களில் குறைவாகப் பலனடைந்த உட்பிரிவினரின் பிரச்ச னைகள் முழுமையாகத் தீர்க்கப்படும் என்று யாராவது நம்பினால், அவர்கள் ஏமாந்துதான் போய் விடுவார்கள்.  மேலும் நவீன-தாராளமயக் கொள் கைகள் வந்துவிட்டதாலும், அனைத்து முதலா ளித்துவக் கட்சிகளாலும் அத்தகைய பொருளா தாரப் பாதை நடைமுறைப்படுத்தப்படுவதாலும்,  இடஒதுக்கீடு என்பது மேலும் நீர்த்துப் போய், அது பெயர் அளவிலானதாக மாறி வருகிறது. இந்தச் சூழலில், உள் வகைப்படுத்துதல் பெரிய தாக்கத்தை  ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்க முடியாது. மிகவும் குறைவான இடங்களை பட்டியலினப் பிரிவின ருக்குள் பகிர்ந்து கொள்ள உதவலாம். அதையும் தாண்டி, பட்டியலின மக்களுக்குள் கூடுதலான ஒற்றுமையை ஏற்படுத்த உள் வகைப்படுத்தல் உதவும் என்பதே பெரும் பலனாக இருக்கும். 

எது உண்மையான தீர்வு?

பட்டியலின மக்களைப் பின்தங்கிய நிலைக்கு இட்டுச் சென்ற அடிப்படைப் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதில்தான் உண்மையான தீர்வு உள்ளது. நில உறவுகள் என்பது சமூகத்தின் அடித் தட்டுகளுக்குள்தான் தலித்துகளை அடைத்து வைத்திருக்கிறது. இந்த நில உறவுகள் உடைத் தெறியப்பட்டு, நில விநியோகம் நடப்பது உறுதி செய்யப்பட வேண்டும். தரமான கல்வி, உடல்நலன்,  வேலைவாய்ப்பு, உணவு மற்றும் இருப்பிடம் ஆகி யவை உரிமைகளாக பாதுகாக்கப்பட வேண்டும். தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு விரிவடைய வேண்டும். இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் போதுதான், தலித்துகளும் மற்றும் பிற பின் தங்கிய பிரிவினரும், தங்களின் பிற்பட்ட நிலையைக் கடந்து இடஒதுக்கீடுகளின் பயன் வரம்பையும் கடந்து முன்னேற முடியும்.

பட்டியலின மக்களைப் பின்தங்கிய நிலைக்கு இட்டுச் சென்ற அடிப்படைப் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதில்தான் உண்மையான தீர்வு உள்ளது. நில உறவுகள் என்பது சமூகத்தின் அடித் தட்டுகளுக்குள்தான் தலித்துகளை அடைத்து வைத்திருக்கிறது. இந்த நில உறவுகள் உடைத் தெறியப்பட்டு, நில விநியோகம் நடப்பது உறுதி செய்யப்பட வேண்டும். தரமான கல்வி, உடல்நலன்,  வேலைவாய்ப்பு, உணவு மற்றும் இருப்பிடம் ஆகி யவை உரிமைகளாக பாதுகாக்கப்பட வேண்டும். தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு விரிவடைய வேண்டும். இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் போதுதான், தலித்துகளும் மற்றும் பிற பின் தங்கிய பிரிவினரும், தங்களின் பிற்பட்ட நிலையைக் கடந்து இடஒதுக்கீடுகளின் பயன் வரம்பையும் கடந்து முன்னேற முடியும்.

கிரீமிலேயர் பொருத்தமற்றது

உள் வகைப்படுத்தல் பற்றிப் பேசும்போது, அமர்வில் இருந்த ஏழு நீதிபதிகளில் நான்கு பேர் ‘கிரீமிலேயர்’ பிரச்சனை குறித்தும் கருத்து தெரி வித்தனர். பட்டியலின மற்றும் பழங்குடிப் பிரிவின ருக்கும் கிரீமிலேயர் என்பதை அறிமுகப்படுத்த வேண்டும் என்று தனித்தனியாகவும் தங்கள் கருத்தை முன்வைத்தார்கள். தீர்ப்பின் நடை முறைப்படுத்தப்பட வேண்டிய பகுதியாக இது இல்லையென்றாலும், சூடான விவாதத்தை அக் கருத்துக்கள் கிளப்பியிருக்கின்றன.  பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களிடையில் கிரீமி லேயர் என்பதைப் புகுத்தும் ஆலோசனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து எதிர்த்து வருகிறது. ஏனென்றால், இது எந்த அடிப்படையிலும் நியாயப் படுத்த முடியாததாகும். வரலாற்று ரீதியாகவே சொத்தில்லா சமூகத்தினராக பட்டியலின மக்கள் இருந்து வருகிறார்கள். இன்றைக்குக்கூட அந்த நிலைதான் உள்ளது. 

உள் வகைப்படுத்தல் பற்றிப் பேசும்போது, அமர்வில் இருந்த ஏழு நீதிபதிகளில் நான்கு பேர் ‘கிரீமிலேயர்’ பிரச்சனை குறித்தும் கருத்து தெரி வித்தனர். பட்டியலின மற்றும் பழங்குடிப் பிரிவின ருக்கும் கிரீமிலேயர் என்பதை அறிமுகப்படுத்த வேண்டும் என்று தனித்தனியாகவும் தங்கள் கருத்தை முன்வைத்தார்கள். தீர்ப்பின் நடை முறைப்படுத்தப்பட வேண்டிய பகுதியாக இது இல்லையென்றாலும், சூடான விவாதத்தை அக் கருத்துக்கள் கிளப்பியிருக்கின்றன.  பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களிடையில் கிரீமி லேயர் என்பதைப் புகுத்தும் ஆலோசனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து எதிர்த்து வருகிறது. ஏனென்றால், இது எந்த அடிப்படையிலும் நியாயப் படுத்த முடியாததாகும். வரலாற்று ரீதியாகவே சொத்தில்லா சமூகத்தினராக பட்டியலின மக்கள் இருந்து வருகிறார்கள். இன்றைக்குக்கூட அந்த நிலைதான் உள்ளது. 

பி.வி.ராகவலு, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

நன்றி :  பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 
தமிழில் : கணேஷ்