states

img

நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத்தலைவர் ஆதர்ஷ் ஐயர் தாக்கல் செய்த மனுவில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா, பாஜக முன்னாள் எம்.பி நளின் குமார் கட்டீல் ஆகியோர் அமலாக்கத்துறையை பயன்படுத்தி மிரட்டி, தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு நிர்மலா செய்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.