states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

 சிபிஐ(எம்) மத்தியக் குழு உறுப்பினர், தாமஸ் ஐசக்

அறிவிக்கப்படாத அவசரநிலை காலத்தில் அவசரநிலை  காலத்தின் 50 ஆவது ஆண்டு நினைவு தினம் கொண்டாடப் படுகிறது. இது அதைவிட மோசமானது. தற்போதைய காலம் வகுப்புவாத பெரும்பான்மைவாதம் மற்றும் பெரு நிறுவனங் களின் நலன்களுக்கு அடிபணிவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அறிவிக்கப்பட்ட அவசரநிலையா அல்லது பரவி வரும் அறிவிக்கப்படாத அவசரநிலையா, எது மோசமானது?

காங்கிரஸ் தலைவர் சுப்ரியா

2024 பிப்ரவரி 15அன்று உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திர முறையை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனக் கூறியது. ஆனால் 2024 பிப்ரவரி 21 அன்று 8,350 தேர்தல் பத்திரங்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன. தேர்தல் பத்திர முறை நீக்கப்பட்டபிறகு ஏன் தேர்தல் பத்திரங்கள் அச்சிடப்பட்டது?

பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

இந்தியா தன்னுடைய சொந்த வரம்புகளின் யதார்த்தங்களை எதிர்கொள்ள வேண்டும். உண்மையான தொழில்நுட்ப சுதந்திரத்தில் முதலீடு செய்ய வேண்டும். திறம்பட போராடுவதற்கான கருவிகள் மற்றும் சுதந்திரத்துடன் தன் ராணுவத்தை வலுப்படுத்த வேண்டும். மேலும் அதன் தலைவர்களிடமிருந்து நேர்மை மற்றும் பொறுப்புணர்வை வர வைக்க வேண்டும்.

எஸ்எப்ஐ அகில இந்திய தலைவர் வி.பி.ஷானு

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய அதே கால கட்டத்தில் காசாவின் 870 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளது. சியோனிச அரசு என்பது  இதுதான். இனப்படுகொலை தான்  அவர்களது திட்டம்.