இந்திய தேர்தல் ஆணையம் ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக, கடவுள் முருகன், தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்பது போன்ற ஒரு செயற்கை நுண்ணறிவு காணொலி வெளியிடப்பட்டுள்ளது. சாதி, மதத்தை முன்வைத்து வாக்கு கேட்கக் கூடாது என்ற விதியை மீறி இந்தக் காணொலியைத் தயாரித்தவர்கள் மற்றும் வெளியிட்டவர்கள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெ. சண்முகம், சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர்
