articles

img

உண்மையைச் சொல்ல மறுக்கும் மோடி

உண்மையைச் சொல்ல மறுக்கும் மோடி

வேளச்சேரியில் ஜி.ராமகிருஷ்ணனின் சாடல்

“உள்ளூர் சந்தையில் விலைபோகாத மாடு!”

“உள்ளூர் சந்தையில் விலைபோகாத மாடு, வெளியூர் சந்தையில் விற்பனையாகாது என்பார்கள்.” அதுபோல, மோடி அரசு உள்ளூரில் மக்களுக்கு பதில் சொல்ல மறுக்கிறது. ஆனால் பல நாடுகளுக்கு தூதுக்குழுவை அனுப்பி விளக்கம் சொல்ல முயன்றுள்ளது..

அனைத்துக்கட்சி கூட்டத்திலிருந்து ஓடிய மோடி!

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் மக்கள் ஒருநாள் கடையடைப்பு நடத்தினர். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குறி வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. ஆனால் பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்குப் பிறகு இரண்டு முறை நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை!

இஸ்லாமியர்-இந்துக்கள் பிளவு பிரச்சாரம்!

“இந்த தாக்குதலை பயன்படுத்தி இஸ்லாமியர் களுக்கும் இந்துக்களுக்கும் இடையே பிளவை உருவாக்கும் பிரச்சாரத்தை செய்கின்றனர். இதனை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கவில்லை.” நாடு இக்கட்டான நிலையில் உள்ளது. பயங்கரவாதி களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும், பயங்கர வாதத்தை ஒடுக்க வேண்டும் என்று நாடே கொந்தளித்தது. ஆனால் உண்மையான தகவல்களை நாட்டு மக்களுக்கு பிரதமர் தெரிவிக்காமல் உள்ளார்.  வேளச்சேரியில் நடைபெற்ற கிளர்ச்சி பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் ஆற்றிய உரையிலிருந்து...