கலைத்துறை ஆளுமைகளின் சங்கமம் - மயிலைபாலு
மகாபாரதத்தின் ‘அம்பை’ பாத்திரம் மனதில் உறுதி கொண்ட பெண்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு. ஆணாதிக்க அழிப்பின் ஆணிவேராக அம்பை விளங்குகிறாள். அந்தப் பாத்திரம் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் தேவை ‘குலவை 2025’ நிகழ்வுகளில் ஒன்றாக வெளிப்பட்டது. நாடக ஆளுமை மங்கை முன்முயற்சியில் சென்னையில் இரண்டு நாட்கள் பெண்ணிய நாடக விழா நிகழ்ந்தது. முதல் நாள் (7.6. 2025) நிகழ்வுக்கு செல்ல இயலாததால் தவறவிட் டவை அநேகம்... அநேகம்... இரண்டாம் நாள் (8 6 2025) நிகழ்வில் நர்த்தகி நடராஜ் பார்வையாளர்களுடன் சொற்பகிர்வு செய்தபோது ‘அம்பை’ நாட்டிய நாடகம் பற்றி சிலாகித்தார். தனது வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது அம்பைதான் என்று மனம் திறந்தார். ஒப்பனை ஏதுமின்றி, இசைக் கருவிகள் உதவியின்றி அம்பை நாட்டிய நாட கத்தின் ஒரு பகுதியை ஆடிக்காட்டியும் பார்வை யாளர்களைப் பரவசப்படுத்தினார். ஒவ்வொரு கலைஞருக்கும் ஒரு படைப்பு மாஸ்டர் பீஸ் ஆக இருக்கும். எனக்கு அம்பை என்று அவர் கூறிய போது கரவொலியால் அரங்கம் நிறைந்தது. ஆணிலிருந்து பெண்ணாய் அலங்கரிப்பு மாற்றம் அந்த நாளின் - விழாவின் - நிறைவு நிகழ்வாக அம்பை பற்றிய ‘பனித்தீ’ தெருக்கூத்து வடிவ நாடகம் அமைந்தது தற்செயலானதா? திட்ட மிட்டதா? என்றறியேன். ஆனால் நாட்டிய நாடகத் தளத்திலிருந்து தெருக்கூத்து தளத்திற்கு அம்பையைக் கொண்டு வந்தவர் திலகவதி. ஒரு மணி நேரத்திற்கும் சற்று கூடுதலாக அரங் கையே அவர் தனது கட்டுக்குள் வைத்தி ருந்தார். ஆடியபடியும்.... பாடியபடியும்.... ஆணிலிருந்து பெண்ணாய் அலங்கரிப்பை மாற்றிக்கொண்ட அவரது திறன் வியப்பின் உச்சம். இளம் வயதில் கூத்துக் கலையை தேர்ந்தெடுத்த திலகவதி பாராட்டுக்குரியவர். இதே பனித்தீ கூத்து நிகழ்வை சில ஆண்டு களுக்கு முன் நிகழ்த்திய உஷாராணி இப்போது அகவை முதிர்ச்சியால் பார்வையாளராக வந்திருந்தார். அவரை மேடைக்கு அழைத்து திலகவதி வாழ்த்து பெற்றது நெகிழ்வின் உச்சம். கடை கேட்டலும் பாலியல் தொழிலுமே திரு நங்கைகள் வாழ வழி என்று வரம்பிட்டிருந்த காலம் ஒன்று இருந்தது. இன்று அவர்கள் திமிறி எழுந்து அந்தத் தளையில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு மனிதப் பெருவெளியில்
மதிப்பு மிக்கவர்களாக வலம் வருகிறார்கள். அவர்களைக் கலைத்துறையில் வளர்த்திருக் கும் பெருமை மங்கையையே சாரும். இது உண்மை; வெறும் புகழ்ச்சி அல்ல. பிரச்சனையின் உண்மை உணர்ந்து இதற்கு சாட்சியம் அளித்தார் திருநங்கை பிரியா பாபு. அவர் வழியாக ‘கண்ணாடி கலை குழு’வை தொடங்கி ‘மனசின் அழைப்பு’ நாட கம் மூலம் சமூகத்தில் மனமாற்றத்திற்கு வித்திட்டவர் மங்கை. இந்த நாடகத்தால் குடியிருப்புப் பிரச்சனையின் உண்மை உணர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் புக்கத்துறை யில் 50-க்கும் அதிகமான திருநங்கைகளுக்கு மாவட்ட ஆட்சியரால் வீட்டு வசதி கிடைத்தது என்ற பிரியபாபுவின் பதிவே இதற்கு சான்றானது. இந்தத் திருநர் சமூகத்தின் கலை வாரிசு களாக ரேவதி, சௌமியா, பிரதிக்ஷா என எத்தனை எத்தனை பேர்! இவர்களுக்குக் கிரியா ஊக்கியாக ஒரு ஸ்ரீஜித் சுந்தரம். உடல் நலப் பிரச்சனையால் உட்காருவதும் நடப்பதும் உயிர் வதைக்கும் வலியை ஏற்படுத்திய போதும் நிகழ்வுக்கு வந்திருந்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பாடலைப் பாடிய கானா விமலா போற்றுதலுக்குரியவர். மக்களோடு மக்களாய் இணைந்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு வழிகாட்டும் பணி செய்ய வயதென்ன வயது என்று சவால் விட்டு வந்திருந்தவர்கள் காந்தி மேரி, சந்தான மேரி, ப்ரீத்தம் போன்றோர். இவர்கள் அனை வரும் ஆகவை எழுபதைத் தாண்டியவர்கள். ...
முன் பக்கத் தொடர்ச்சி பாட்டுத் திறத்தாலே இவ்வை யத்தைப் பாலித்திட வேண்டும் என்ற பேராவலுடன் சந்தான மேரி தனது கணீர் குரல் பாடல்களால் நிகழ்வை மெரு கேற்றினார். அவரது கிராமிய மணம் கமழும் பாடல்கள் உலகமே நம் உறவு என்ற உணர்வின் உச்சம். கையில் கோல் ஊன்றிய வயதில் கதை சொல்லிய ப்ரீத்தம் அங்கதச் சுவை கூட்டி அசத்தினார். அவரின் மூத்த மகள் மாளவிகாவின் கதை சொல்லல் நாடக நிகழ்வாகவே மாறி மனதில் காட்சிகளை விரித்தன. பார்வை யாளர்களையும் பங்கேற்க செய்தது அவரது மேடை ஆளுமையின் உச்சம். ஓபன் மைக் நிகழ்வில் பூத்த புதுமை அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் ஓபன் மைக் நிகழ்வில் புதுமை பூத்தது. காந்தி மேரி, மகாராஷ்டிராவின் சுஷ்மா தேஷ் பாண்டே, வ.கீதா, கே.ஏ.குண சேகரன் சகோதரி கே.ஏ.ஜோதி ராணி, நடனக் கலைஞர் சுதா போன்றோரின் கருத்தாழம் மிக்க உரைகள் பல பல பார்வைத் திறப்புகளைச் செய்தன. இந்த வாய்ப்பு அரங்கத்தில் இருந்த வர்களோடு முடங்கிவிடக்கூடாது என்ற ஆதங்கம் துளிர்விட்டது. உரையாடல் மூலம் பரவலாக்கலாம். வானவில்லின் பாடல் கைதட்டி ஆட வைப்பதாயிருந்தது. கவிஞர் சுகிர்தராணி கவிதையின் காட்சி படிமமாக ‘பிணங்களின் அரசியல்’ ஓராள் நாடகம், கவிஞர் ச. விஜய லட்சுமியின் லண்டாய் மொழியாக்கக் கவிதை ‘நீதி எங்கே?’ பரமேஸ்வரி யின் உணர்ச்சி பூர்வமான நடிப்பில், ஜானகியின் நெறியாள்கையில் இன் னொரு நாடகம், மங்கை - கவின்மலர் இணைந்த ‘அம்மா’ நாடகத்தின் ஒரு பகுதி.... என்பவை கலகலப்பான அரங்கை இறுக்கமாக்கின. ஒரு பக்கம் சமூக அவலமும் மறுபக்கம் தியாகமும் கலந்து கிடப்பதை இவை காட்சிப்படுத்தின. நாடாளுமன்ற உறுப்பினர் தமி ழச்சி தங்கபாண்டியன், கவின்மலர் ஆகியோர் கவிதைகளால்
பார்வை யாளர்களின் கவனத்தை ஈர்த்தனர். கோயிலைக் கூடாரமாகக் கொண்டு சனாதனவாதிகள் செய்யும் பாலியல் வக்கிரங்களைத் தோலுரித்தது ‘வன்புணர்’ கவிதை. லேசாகுமோ மனம் லேசாகுமோ... லேசாகுமோ மனம் லேசாகுமோ என புண்ணாற்றுதலுக்கான சேர்ந்திசைப் பாடலில் பார்வை யாளர்களும் கரம் கோர்த்தனர். மத வாதச் சுரண்டலில் இருந்தும், வர்க்கச் சுரண்டலில் இருந்தும், ஆணாதிக்கச் சுரண்டலில் இருந்தும் விடுதலையாகி மனம் லேசாகுமோ என்ற கேள்வி மனதில் தொடர்ந்து அலையடிக்கவே செய்கின்றன. கலகலப்பாக நிகழ்வைத் தொகுத்து வழங்கினர் யாழினியும், பிரம்மியும். ஒட்டுமொத்த நிகழ்வையும் நெறிப் படுத்தி தொய்வின்றி கொண்டு சென்ற வர் பொன்னி. மங்கையின் வழித்தோன் றல். தாய் எட்டடி என்றால் குட்டி பதி னாறடி என்பது பழமொழியாக இல்லா மல் நிகழ் மொழியாக இருந்தது. பொன்னி மட்டுமல்ல, பெண்களை முன்னிலைப்படுத்தி அவர்களின் விடுதலைக்காக, சமத்துவத்திற்காக கலை வடிவங்களை, நாடக வடி வங்களை, இசைப் பாடல்களைப் பயன்படுத்தும் அனைவரும் மங்கை யின் வழித்தோன்றல்கள்தான். ஏதோ ஒரு வகையில் தங்களின் முன்னோடி களான இராமானுஜம், இளைய பத்ம நாபன், கூத்துப்பட்டறை முத்துசாமி, கவிஞர் இன்குலாப், ஓவியர்
ட்ராட்ஸ்கி மருது ஆகியோரின் பெருமை பேசியது சாலப் பொருத்தமாக இருந்தது. எவ்வளவோ வலிகள்... எனினும் மகிழ்ச்சி “இந்த நாடகக் கலைப்பயணத்தில் பெண்களுக்கு சொல்ல முடியாத எவ்வளவோ வலிகள் உள்ளுக்குள் இருக்கின்றன. அதை உடைத்துப் பேச நேரமும் இல்லை. அதற்கான இட மும் இதுவல்ல. இதையெல்லாம் மீறி இந்தப் பயணத்தில் படைப்புத்திற னோடு பலரும் வந்திருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களை முன்னிறுத்தி சிறிது காலம் ஓய்வெடுக்க லாம் என்று நினைக்கிறேன்” என்ற மங்கை வழங்கிய 15 நிமிட நன்றியுரை யின் சில வரிகள் மனதை நெருடின. ஒரு ஆளுமைக்குள்ளே ஆதங்கங்க ளும் இருக்கத்தானே செய்யும்! அதை யும் மீறி படைப்புகளை உருவாக்கு வதும், படைப்பாளிகளை உருவாக்கு வதும் காலம் விடுக்கும் அழைப்பை ஏற்று செயல்படுவதாகும். அந்த செயல் பாட்டுக்கு உறுதுணையாய் நாங்கள் இருக்கிறோம் என்று உரக்கப் பேசுவ தாய், உறுதி கூறுவதாய் நிகழ்வுகள் இருந்தன. மங்கையின் பிறந்தநாள் (அகவை - 65 ) குலவை 2025 நிகழ் வோடு இணைந்தது தனித்துவ சிறப்பா கும்.