articles

‘போலி பக்தர்களின் வேடம் கலைந்தது’ - மதுரை சொக்கன்

‘போலி பக்தர்களின்  வேடம் கலைந்தது’

‘ஓம் முருகா என்று சொல்லி  உச்சரிக்கும் சாமிகளே ருத்ராட்ச பூனைகளாய் வாழுறீங்க சீமான்கள் போர்வையில சாமான்ய மக்களையே  ஏமாத்தி கொண்டாட்டம் போடுறீங்க பொய்மை எப்போதும்  ஓங்குவதும் இல்லை உண்மை எப்போதும்  தூங்குவதும் இல்லை கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்’ 

- இது எம்ஜிஆர் நடித்த ‘நினைத்ததை முடிப்ப வன்’ படத்திற்காக மருதகாசி எழுதிய பாடல்.  மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் இந்து முன்னணி நடத்திய மாநாட்டிற்கு இந்த வரிகள் அப்படியே பொருந்துகின்றன.  இந்த மாநாட்டில் அரசியல் பேசக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நிபந்தனை விதித்தது. ஆனால் இந்த மாநாட்டின் தீர்மானங்களையும், பேச்சுக்களை யும் பார்க்கும் போது இது ஆன்மீக கலப்பு சற்றும் இல்லாத அக்மார்க் அரசியல் மாநாடு என்பதை புரிந்து கொள்ள முடியும். அதிலும் கூட அவர்க ளது வழக்கமான வெறுப்பரசியலை தூண்டுவ தற்காகவே இந்த மாநாட்டையும் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.  பக்த சிரோன்மணிகள் போல வேடமிட்டு நடித் தாலும் அவர்களது உண்மையான நோக்கத்தை மறைக்க முடியவில்லை. அதிலும் பாஜக தலை வர் நயினார் நாகேந்திரன் மதுரை சோமுவுக்கே டப் கொடுக்கும் அளவுக்கு மருதமலை மாமணி யே பாடலை பாடினார். நல்ல வேளை மதுரை சோமு உயிரோடு இல்லை. ஆனால் எவ்வளவு தான் முருக பக்தர்கள்போல நடித்தாலும் அவர் ளால் ‘கொண்டையை’ மறைக்க முடியவில்லை.  இந்த மாநாட்டில் ஆறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன. முதல் தீர்மானமே திருப்ப ரங்குன்றம் மலை குறித்து, இல்லாத ஒன்றை பொல்லாத வகையில் கூறி கலவரத்திற்கு கால் கோள் விழா நடத்துவதாக உள்ளது.  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை. மாறாக, கீழே உள்ள கோவிலில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். ஆனால் இந்த தீர்மானத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. உயர்நீதி மன்ற தீர்ப்பு அப்படியில்லை என்பது ஒருபுற மிருக்க, ஒரு வேளை இவர்கள் கூறுவது போல இருந்தால் நீதிமன்றத்தை அணுக வேண்டியது தானே? இவர்களது நோக்கம் தீபம் ஏற்றுவது அல்ல, கலவரத் தீயை பற்ற வைப்பதே ஆகும். இரண்டாவது தீர்மானம் ‘ஆபரேசன் சிந்தூர்’  நடவடிக்கைக்காக மோடி அரசுக்கு பாராட்டு தெரிவிக்கிறது. அந்த தீர்மானத்தில் இந்து பெண் களின் குங்குமத்தை பறித்ததற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறப் பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு விசயத்தில் கூட குறுகிய மதவெறியை தூண்டுவது பக்தர்கள் நம்பும் முருகக் கடவுளுக்கே அடுக்காது. நல்ல வேளை, போரை நான் தான் நிறுத்தினேன் என்று விடாமல் கூறும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பு க்கு நன்றி தெரிவிக்காமல் விட்டார்கள்.  மூன்றாவது தீர்மானமும் மீண்டும் மலை யைச் சுற்றுகிறது. ‘குன்றம் குமரனுக்கே!’ என்று  கூறி திருப்பரங்குன்றம் மலையை சர்ச்சை யாக்க முயலும் இந்த தீர்மானம், திருப்பரங் குன்றம் மலை மீதான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் நல்லதொரு தீர்ப்பு கிடைக்க வேண்டு மென முருகப் பெருமானை வேண்டுவதாக முடி கிறது. இந்த வழக்கில் சம்பந்தமில்லாமல் முருகப் பெருமானையும் கோர்த்துவிட முயல்கிறார்கள். ‘குன்றம் குமரனுக்கு’ என்று கூறும் இவர்கள்,

அரிட்டாபட்டி மலை மட்டும் ‘வேதாந்தா முதலா ளிக்கு’ என்றும் தீர்மானத்தில் சேர்க்காமல் விட்டு விட்டார்கள்.  அடுத்த தீர்மானம், தமிழ்நாட்டில் கோவில்க ளை பாதுகாத்து வரும் அறநிலையத் துறையை குறி வைக்கிறது. அறநிலையத்துறையை கலைத்துவிட்டு கோவில் சொத்துக்களை இஷ்டத்திற்கு ஆட்டையைப்போட இவர்கள் துடிக்கிறார்கள். தீட்சிதர்கள் வசமுள்ள சிதம்பரம் கோவிலின் சொத்துக்கள் எந்தளவுக்கு துஷ்பிர யோகம் செய்யப்படுகிறது என்பதையும் கோவி லையே கல்யாண மண்டபமாக மாற்றியது யார் என்பதையும், சிறுமிகளுக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்தது யார் என்பதையும் தமிழ்நாடு நன்கறியும்.  ஆனால், தமிழ்நாடு அரசின் அறநிலை யத்துறை, கோவில் நிதியில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளைக் கட்டக்கூடாது என்று தீர்மானம் கூறுகிறது.  இவர்களுடைய நோக்கம் கோவிலைப் பாது காப்பது அல்ல, மாறாக அரசுக் கட்டுப்பாட்டிலி ருந்து கோவில்களை விலக்கி தங்களது கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொண்டு கொட்டமடிக்க வேண்டும் என்பதுதான்.  தமிழ்க் கடவுள் முருகனுக்கு மாநாடு நடத்து கிறோம் என்றவர்கள், தமிழையோ, முருகனை யோ தொடர்புபடுத்தி ஒரு தீர்மானமும் போட வில்லை. கோவில் குடமுழுக்குகளை ‘தமிழிலும்’ நடத்துவதற்கே தடை கேட்டு வழக்கு தொடுத்த வர்கள் இவர்கள். கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யக் கூடாது என்பவர்களும் இவர்களே.  தமிழ்க் கடவுள் முருகன் என்றால், அந்த முருகனுக்கு தமிழில் மட்டுமே அர்ச்சனையும் குடமுழுக்கும் செய்ய வேண்டுமென்றோ, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்றோ தீர்மானம் போடாதது ஏன்?  முருகனைப் போல, அனைவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்ய வேண்டும் என்று ஒரு தீர்மானம் போட்டிருக்கலாமே... மாறாக, இந்த மாநாட்டையே தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டமாக மாற்றிவிட்டார்கள். எதிர்வரும் தேர்தல்களில் இந்து விரோதிகளுக்கு ஓட்டுப் போ டக்கூடாது என்றும், இந்து அமைப்புகளுக்கே ஓட்டுப் போட வேண்டும் என்றே தீர்மானம் நிறை வேற்றியுள்ளனர்.

இவர்கள் மாநாட்டில் ஆறு படை வீடு செட்டு போட்டதே தேர்தல் அறுவடைக் காகத்தான் என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. இதில் கொடுமை என்னவென்றால் அதிமுக வைச் சேர்ந்த அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் இந்த மாநாட்டிற்கு சென் றுள்ளனர். அவர்களை வைத்துக் கொண்டே இந்து சமய நம்பிக்கைகளையும், இந்து தெய்வங் ங்களையும், திராவிட சிந்தனையாளர்கள் தொ டர்ந்து இழிவுபடுத்தி வருகிறார்கள் என்று கூறி யதுடன், தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் காட்டி, ஒழிக்கப்பட வேண்டிய வர்கள் இவர்கள் என்று வீடியோ போட்டுள்ளனர். செல்லூர் ராஜூ உள்ளிட்ட அதிமுக தலைவர்க ளும், எந்த எதிர்ப்புமின்றி, அச்சடித்த பதுமை கள் போல் அமர்ந்திருக்கிறார்கள். இந்த மாநாட்டிற்கு இவர்களது தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து மடல் வாசித்த நிலையில் தான் இவர்கள் அங்கு சென்றுள்ள னர். தங்களது கட்சியின் பெயரில் அண்ணாவின் பெயரும், திராவிடம் என்ற சொல்லும் இருப்பதை மறந்து அண்ணாமலை பேச்சை, வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.

இதே அண்ணாமலை, ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி என்றது கூட இவர்களுக்கு மறந்து போயிருக்கும்.  கடைசியாக முருக பக்தர்கள் மாநாடு என்பது நினைவுக்கு வந்து சஷ்டிதோறும் கோவில்களில் கந்தசஷ்டி பாடுகிறோம் என்று தீர்மானம் போட்டு முடித்திருக்கிறார்கள். இவர்கள் சொல்லித்தான் கோவில்களில் பக்தர்கள் கந்தசஷ்டி கவசம் பாடுகிறார்களா என்ன?  மாநாட்டில் பேசிய ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் யாருக்கும் தெரியாத தகவல்களை சொல்கிறேன் என்று சொல்லி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கொஞ்ச காலம் மூடப்பட்டு கிடந்தது. விஜயநகர பேரர சால் ஒளி கிடைத்தது என்று கூறியுள்ளார். மீனாட் சியம்மன் கோவில் ஒருபோதும் மூடப்பட்ட தில்லை. யாரோ மண்டபத்தில் எழுதிக் கொடுத்த தை இங்கு வந்து வாசிக்கிறார். வைத்தியநாத அய்யர் தலைமையில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆலயப் பிரவேசம் நடந்ததைத் தொ டர்ந்து இந்தக் கோவிலில் இனி மீனாட்சி இல்லை என்று சொல்லி போட்டிக் கோவிலை ஏற்படுத்த முயன்று தோற்றுப் போனது யார் என்ற வரலாற்றையும் பவன் கல்யாண் தெரிந்து கொண்டு பேசினால் நல்லது. முருகன் நேரில் வர மாட்டார். நம்மில் வருவார். நாமே முருகனாக மாறுவோம் என்றெல்லாம் பவன் கல்யாண் பேசி யுள்ளார்.

உண்மையில் முருகப் பெருமான் வரமாட்டார் என்ற தைரியத்தில் தான் இவர் வாயால் வடை சுடுகிறார். பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜக பொதுக்கூட்டம் போலவே மாநாட்டில் பேசி யுள்ளார். 2026 தேர்தலை மனதில் கொண்டே இந்த மாநாடு என்பதை அண்ணாமலை அப்ப டியே எடுத்துச் சொல்லிவிட்டார்.  இஸ்ரேலியர்க ளைப் போல இந்துக்களும் உணர்வோடு இருக்க வேண்டும் என்று கொஞ்சம் கூட கூச்சப்படாமல் பேசியுள்ளார். இஸ்ரேலின் இனவெறியால் பாலஸ்தீனம் பற்றியெரிகிறது. தங்களது மத வெறிச் சிந்தனையால் இஸ்ரேலோடு இவர்கள் கை கோர்க்கிறார்கள். இஸ்ரேலின் போர் வெறி யை போற்றி புகழ்வதிலிருந்தே இவர்களது நோக்கம் முருக பக்தி அல்ல, பாசிசப் பற்றே என்பதை புரிந்து கொள்ள முடியும். மாநாட்டில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் வன்னிய ராஜன் துவங்கி, நயினார் நாகேந்திரன், காடேஸ்வரா சுப்பிரமணியம் என அனைவரும் வெறுப்பரசியலை விசிறிவிட்டே பேசியுள்ளனர்.

சில ஊடகங்கள் இந்த மாநாட்டால் பூமியே பிளக்கப் போவது போலவும், வானமே கிழியப் போவது போலவும் பில்டப் கொடுத்தார்கள். ஆனால் பல இடங்களிலிருந்து ரூ. 200 முதல் ரூ. 500 வரை பணம் கொடுத்தே பலரை கூட்டி வந்துள்ளனர். அப்படியும் அவர்கள் எதிர்பார்த்த கூட்டம் இல்லை.  மாநாடு நடந்த அடுத்த நாளே கோவையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி வேல் கொடுத்து புளகாங்கிதம் அடைந்துள்ளார்.  ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் என்பதற்காகத் தான் முன் னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை, அதிமுக விலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி சில மாதங்களுக்கு முன்பு நடவடிக்கை எடுத்தார். இப்போது, அதே ஆர்எஸ்எஸ்-சின் நூற்றாண்டு விழாவில், மோகன் பகவத்தோடு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்கிறார்.  அதிமுகவை பாஜக விழுங்கும் ஆபத்து உள்ளது என்று அரசியல் நிபுணர்கள் எச்ச ரித்தது உண்மையாகி வருகிறது.  பாஜகவோடு சேர்ந்தது தவறு, இனி அந்த தவறை ஒருபோதும் செய்ய மாட்டேன் என்று இவர்களது அம்மா ஜெயலலிதா பகிரங்கமாகச் சொன்னார், மோடியா, லேடியா என்று கேள்வி எழுப்பினார் அவர்.  ஆனால் இவர்கள் அதை யெல்லாம் மறந்துவிட்டார்கள்.  

மண்டைக்காடு கலவரத்தை தொடர்ந்து 1982ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் எம்ஜிஆர் பேசியதை இவர்களுக்கு நினைவுபடுத்துகிறோம் : “ஆர்எஸ்எஸ் தனது பயிற்சிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். என்சிசி, சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. ஆர் எஸ்எஸ் அளிக்கும் பயிற்சி தேவையில்லை. இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? என சிந்திக்க வேண்டும். இந்து முன்னணிகாரர்கள் யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்கு சொல்லிக் கொள்ள விரும்பு கிறேன், இதுபோன்ற செயல்களை அரசு அனு மதிக்காது. மடாதிபதிகள் குன்றக்குடி அடிகளார் போல் நடந்து கொள்ள வேண்டும்” என்று எம்ஜிஆர் எச்சரித்திருந்தார். மொத்தத்தில் ஆன்மீகத்திற்கோ, பக்திக்கோ சம்பந்தமில்லாமல் ஒரு வெறுப்பரசியல் மாநாட்டை நடத்தி முடித்துள்ளனர். அதே நாளில் முருகப் பக்தர்கள் வழக்கம் போல ஆனி மாத கார்த்திகையை முன்னிட்டு முருகன்  கோவி லுக்கு சென்றுள்ளனர்.