articles

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆந்திராவில்  10 மணிநேர வேலை தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி அரசாங்கம் அறிவிப்பு

ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு,  வணிகம் செய்வதை எளிதாக்குவதற்காக வும், முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக வும் அதிகபட்ச வேலை நேரத்தை ஒரு  நாளைக்கு ஒன்பது மணி நேரத்திலிருந்து  10 மணி நேரமாக உயர்த்த முடிவு செய்துள்  ளது. இதற்கு ஏற்ப தொழிலாளர் சட்டங்  களை திருத்த முடிவு செய்யப்பட்டுள்ள தாக அம்மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கே.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சரவை எடுத்த முடிவுகள் குறித்து செய்தியாளர்  களிடம் பேசிய அமைச்சர் கே.பார்த்த சாரதி, “ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 9 மணிநேர வேலையை அனுமதிக்கும் பிரிவு 54 இப்போது ஒரு நாளைக்கு 10  மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரிவு 55 இன் கீழ், 5 மணிநேர வேலைக்கு  ஒரு மணி நேரம் ஓய்வு என்று உள்ளது.  அது இப்போது 6 மணிநேரமாக மாற்றப்  பட்டுள்ளது. கூடுதலாக வேலை செய் யும்போது, வருமானம் அதிகரிக்கும். இந்த விதிகளால் பெண்கள் முறை யான துறைகளில் பணியாற்ற முடியும். அவை பெண்களுக்கு பொருளாதார ரீதி யாக அதிகாரம் அளிக்கின்றன. மேலும்,  தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக் கின்றன” என அவர் தெரிவித்தார். ஜூலை 9 ஆம் தேதி போராட்டம் ஆந்திர அரசின் 10 மணிநேர வேலை  அறிவிப்பு தொடர்பாக இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. ராமகிருஷ்ணா கூறுகையில்,”கடந்த 11 ஆண்டுகளாக, மோடி அரசாங்கம் இந்தி யாவில் தொழிலாளர்களின் உரிமை களை மீறும் நடவடிக்கைகளை மீண்டும்  மீண்டும் எடுத்து வருகிறது. இந்த விதி களை எதிர்க்கும் வகையில், ஜூலை 9 ஆம்  தேதி இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்  கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள் ளன. இந்த போராட்டத்தில் அனைத்து பிரிவுகளும் தீவிரமாக பங்கேற்கும்” என  அவர் கூறினார். பாட்னா

பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி சாலை விபத்தில்  உயிர் தப்பினார்

ராஷ்டிரிய ஜனதாதள தலைவ ரும், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி மாதேபுராவில் (பீகார்) நடைபெற்ற அரசி யல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று, அங்கி ருந்து சாலை மார்க்கமாக கட்சி செய்தித்  தொடர்பாளர் சக்தி யாதவ் உள்ளிட்டோரு டன் தேசிய நெடுஞ்சாலை 22இல் திரும்  பிக் கொண்டிருந்தார். வைஷாலி மாவட் டத்தின் ஹாஜிபூரில் சனிக்கிழமை அன்று  அதிகாலை 1:30 மணிக்கு, தேநீர் அருந்து வதற்காக அவரது கார் நின்றபோது, வேக மாக வந்த லாரி ஒன்று தேஜஸ்வி உடன்  சென்ற 3 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது.  இந்த விபத்தில் தேஜஸ்வி நூலிழை யில் உயிர் தப்பினார். எனினும் அவருடன் சென்ற பாதுகாப்புப் படையினர் காயம டைந்தனர். காயமடைந்த பாதுகாப்புப்  பணியாளர்கள் சதார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நிகழ்ந்ததை அடுத்து சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய லாரி ஓட்டு நரை, சராய் காவல் நிலைய அதிகாரிகள்  கைது செய்து விசாரித்து வருகின்றனர். பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி சாலை விபத்தில் உயிர் தப்பிய  விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“வேடனுக்கு” எதிரான சங்பரிவார நடவடிக்கைகள் கேரளத்தில் எடுபடாது அமைச்சர் வி.சிவன்குட்டி எச்சரிக்கை

கூட்ட நெரிசல் சம்பவம் எதிரொலி
கர்நாடக மாநில 
கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா
ராப் இசைக் கலைஞர் வேடனுக்கு  எதிரான சங் பரிவாரத்தின் நட வடிக்கைகள் மறுமலர்ச்சி கேர ளாவில் எடுபடாது என்று அம்மாநில  பொதுக் கல்வி மற்றும் வேலைவாய்ப் புத்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி கூறி னார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மேலும் கூறியதாவது, “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாடிய  ஒரு பாடலின் பெயரால் இப்போது வேட்டை நடத்தப்படுகிறது. வேடனுக்கு  எதிராக அவரது பெயர் அல்லது பாட லின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் சமூக ஊடகங்கள் மூலம் சைபர் தாக்கு தல்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. ஸ்ரீ நாராயண குரு, சட்டம்பி சுவாமிகள்,  மகாத்மா அய்யன்காளி ஆகியோர் வாழ்ந்து சமூக நீதியை நிலைநாட்டிய  மண் இது. சாதி அடிப்படையிலான அவ மானங்கள் அல்லது வேட்டை கேரள மண்  ணில் ஏற்றுக்கொள்ளப்படாது. முற்போக்கான கேரளா எப்போதும்  கலைஞர்களின் சிந்தனை சுதந்திரத்திற் காக நிற்கும். வேடன் போன்ற வளர்ந்து  வரும் கலைஞர்களுக்கு சர்வதேச தளங்களில் வாய்ப்புகள் கிடைத்தால்,  அத்தகைய வாய்ப்புகள் மறுக்கப்படக் கூடாது” என அவர் சுட்டிக்காட்டினார். கேரளத்தைக் கலக்கும் வேடன் ஹிரந்தாஸ் முரளி என்கிற தனது  பெயரை, “வேடன்” என ஒரு பழங்குடி யினர் அடையாளம் கொண்டதாக அமைத்துக் கொண்டார். வேடனின்  தாய் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழத் தமிழர். ஈழப் போர் காரண மாக, அவர் பின்னர் தமிழ்நாட்டின் ஊட்டிக்கு குடிபெயர்ந்தவர். தந்தை முரளீதரன் கேரளத்தின் திருச்சூரைச் சேர்ந்தவர். திருச்சூரில் கூலிவேலை செய்யும் தந்தையுடன் வாழும் வேடன்  துயரம் நிறைந்த தனது வாழ்க்கை அனு பவங்களையும் சமூக ஒடுக்குமுறை களையும் பாடல் வரிகளாக்கி ராப் இசை யாக உலவ விடுகிறார். வேடனின் பாடல் வரிகளில் தீண் டாமை, சாதி ஆதிக்கம், அரசியல் விமர்  சனம், ஜனநாயக ஒடுக்குமுறை போன்ற  தீவிர சமூக பிரச்சனைகளை நேர்மை யாகக் கூறுகிறார். கலை நயத்துடன் வெளியான அவரது பாடல்கள், இசை ஆல்பங்கள் சமூக ஊடகங்களில் கவ னம் பெற்றன. கடந்த சில மாத கால மாக அவரது மேடை நிகழ்ச்சிகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து  வருவது இதுவரை கேரளம் கண்டிராத  காட்சி. இவரது மனிதநேய உரிமைக் குரலை சங் பரிவாரங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அவருக்கு பாது காப்பு அரணாக கேரள அரசு விளங்கி வருகிறது. பெங்களூரு

கூட்ட நெரிசல் சம்பவம் எதிரொலி கர்நாடக மாநில  கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ராஜினாமா

கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஆர்சிபி அணி வெற்றிக் கொண்  டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரி சலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த னர். இந்தக் கூட்ட நெரிசலுக்குப் பொறுப்  பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம்  தலைவர் ரகுராமிடம், செயலாளர் ஏ. சங்கர், பொருளாளர் இ.எஸ்.ஜெய்ராம் தங்களது ராஜிநாமா கடிதத்தை அளித்துள்ளனர். இதுதொடர்பாக இரு வரும் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதா வது: “கடைசி 2 நாள்களுக்கு முன்பு யாரும்  எதிர்பார்க்காத வகையில், பரிதாபமான நிகழ்வு ஏற்பட்டது. இதில் எங்களது பொறுப்பு மிகவும் குறைவானது. ஆனா லும் தார்மீகப் பொறுப்பேற்று பதவியில்  இருந்து விலகுகிறோம்” என கூறியுள் ளார்கள். ஏற்கனவே கூட்ட நெரிசல் விவகா ரத்தில் ஆர்சிபி மார்க்கெட்டிங் பிரிவுத் தலைவர் நிகில், டிஎன்ஏ நிறுவனத்தின் மேத்யூ, கிரண், வினோத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கள் தெரிவிக்கின்றன.