அரசு வங்கிகளின் தலைமை நிர்வாகிகளில் எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மையினர், பெண்கள் ஒருவர் கூட இல்லை!
சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வியால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை
“அமைச்சரின் பதில் வெறும் புள்ளி விவரங்கள் அல்ல. சாதி பாகுபாடுகளின் வெளிப்பாடே ஆகும். இட ஒதுக்கீடு இல்லாத பதவிகளில் எந்த அளவுக்கு பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இது சாட்சியம்”.
புதுதில்லி, ஆக. 9 - அரசு வங்கிகளின் தலைமை நிர்வா கிகளில், எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மையி னர், பெண்கள் ஒருவர் கூட இல்லை, என்பது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக, சு. வெங்க டேசன் எம்.பி. அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டி ருப்பதாவது: அரசு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள், தலைவர்களில் எத்த னை பேர் பட்டியல் சாதி, பழங்குடி யினர், சிறுபான்மையினர், பெண்கள் என்ற கேள்வியை (எண். 2469/04. 08.2025) நாடாளுமன்றத்தில் நிதிய மைச்சரிடம் எழுப்பி இருந்தேன். அதற்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்துள்ள பதில் பேரதிர்ச்சியைத் தருகிறது.
பிரதிநிதித்துவம் பாதாளத்தில்
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக ளில் மொத்தமுள்ள 9 தலைவர்கள், மேலாண்மை இயக்குநர்களில் ஒருவர் கூட பட்டியல் சாதியை சேர்ந்தவர் இல்லை. பழங்குடியினர் இல்லை. பெண்கள் இல்லை. சிறுபான்மையினர் இல்லை. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக ளின் இயக்குநரவை குறித்து தரப் பட்டுள்ள விவரங்களும் இப்படித்தான் உள்ளது. மொத்தமுள்ள 98 இயக்குநர்களில் பட்டியல் சாதிகளை சேர்ந்தவர்கள் 6 பேர். பழங்குடியினர், சிறுபான்மையினர் தலா ஒருவர். பெண்கள் எண்ணிக்கை 12. மக்கள் தொகை சதவிகிதத்திற்கும் பிரதிநிதித் துவத்திற்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது.
எல்ஐசி-யிலும் மோசமான நிலை
எல்.ஐ.சி.யின் இயக்குநரவையில் மொத்தமுள்ள 13 பேரில் பட்டியல் சாதியினர், சிறுபான்மையினர் எவரு மே இல்லை. ஒரே ஒருவர் பழங்குடியி னர். ஒரே ஒரு பெண். எல்.ஐ.சி.யின் தலைவர் பொறுப்பில் உள்ளவரும் மேற்கண்ட பிரிவினைச் சேர்ந்தவர் இல்லை. அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவ னங்களின் இயக்குநரவையில் மொத்த முள்ள 48 பேரில் பட்டியல் சாதியினர் 5 பேர் மட்டுமே. சிறுபான்மையினர், பழங்குடியினர் ஒருவர் கூட இல்லை. 18 பேர் பெண்கள். அரசுப் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் 6 பேரில் பட்டி யல் சாதியினர் ஒருவர் மட்டுமே. சிறு பான்மையினரும், பழங்குடியினரும் இல்லை. 3 பேர் பெண்கள்.
வெளிப்பட்ட சாதியப் பாரபட்சம்
இந்த வகையில், “அமைச்சரின் பதில் வெறும் புள்ளி விவரங்கள் அல்ல. சாதி பாகுபாடுகளின் வெளிப்பாடே ஆகும். இட ஒதுக்கீடு இல்லாத பதவிக ளில் எந்த அளவுக்கு பட்டியல் சாதியி னர், பழங்குடியினர், சிறுபான்மையி னர், பெண்கள் புறக்கணிக்கப்படு கிறார்கள் என்பதற்கு இது சாட்சியம். அரசு நிறுவனங்களின் கதியே இது வென்றால் தனியார் நிறுவனங்களில் எல்லாம் என்ன நிலைமை இருக்கும்!.” இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி., குறிப்பிட்டுள்ளார்.