புதுதில்லி, டிச.11- மிக்ஜம் புயல் - வெள்ளம் ஏற்படுத்தி யிருக்கும் பேரிடரிலிருந்து மக்களை மீட்க, இடைக்காலமாக தமிழக அரசு கோரிய ரூ. 5,060 கோடி சிறப்பு நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்க டேசன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் திங்களன்று அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் பங்கேற்று சு. வெங்கடேசன் எம்.பி. பேசியதாவது:
“கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத அளவு பெரும் மழை வெள்ளத்தால் சென்னை, செங்கல்பட்டு, திருவள் ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட் டங்கள் கடுமையான சேதத்திற்கு உள் ளாகி இருக்கின்றன. இந்த பேரிடரி லிருந்து மக்கள் உடனடியாக மீள வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதல்வர் ரூ. 5060 கோடி சிறப்பு நிதியை இடைக்கால ஏற்பாடாக உடனடியாக வழங்க வேண்டும் என்று ஒன்றிய அர சுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். ஒன் றிய அரசு உடனடியாக இந்த உதவியை தமிழகத்திற்கு செய்ய வேண்டும்.
திட்டமிடப்படாமல் பெரும் வீக்கத் திற்கு உள்ளாகி இருக்கிற இந்திய பெருநகரங்களில் மிக முக்கியமான நகரம் சென்னை. பேரிடர்களிலிருந்து மீள முக்கியமான சுவாசம் உடனடி நிவாரணம்தான். எனவே, ஒன்றிய அரசு உடனடியாக இந்த நிவாரணத்தை வழங்க வேண்டும்.
அதேபோல மூன்று தொழிற் பேட்டைகள் கடுமையான பாதிப் பிற்கு உள்ளாகி இருக்கின்றன. சிறு, குறு, நடுத்தர தொழில்களின் பாதிப்பு அதிகம். இந்தியாவிலேயே அதிக மான ஜிஎஸ்டி செலுத்தும் மாநிலம் தமிழகம். எனவே சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று இந்த அவை யிலே நான் கோரிக்கை வைக்கிறேன்.
அதேபோல டிசம்பர் 4 அன்று பெரு வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் 6-ஆம் தேதி யுஜிசி நெட் தேர்வுகள் சென்னையில் நடத்துகிறது. நாட்டிலே என்ன நடக்கி றது என்பதே தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிற துறையாக கல்வித்துறை இருக்கிறதா? என்ற கேள்வி எழுப்ப விரும்புகிறேன். பல மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் அந்த தேர்வினை எழுத முடிய வில்லை. எனவே உடனடியாக மறு தேதி நிச்சயித்து யுஜிசி நெட் தேர்வினை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இடைக்கால நிவாரண நிதியை உட னடியாக வழங்க வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி கேட் டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு சு.வெங்கடேசன் பேசி யுள்ளார்.