ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் நான்காவது அகில இந்திய மாநாடு, இன்று (செப்.19) நாமக்கல்லில் எழுச்சியுடன் துவங்குகிறது. தமிழ்நாட்டில் பழங்குடி மக்கள் 1.4 சதமான வர்களே (7,96,686) 2021 கணக்கெடுப்பின்படி. 1990 ஆம் ஆண்டில் மகத்தான மலைவாழ் மக்களின் தலைவர் தோழர் பாஷா ஜான், கொல்லிமலை தலைவர்கள் சின்னமுத்து, டி.கே.தம்பி, வி.கே.ராஜு, லட்சுமண ராஜா, தும்பல் கிருஷ்ணமூர்த்தி, பெ.சண்முகம் - இவர்களுக்கெல்லாம் மலைவாழ் மக்கள் சங்கத் தினை உருவாக்கிட உந்து சக்தியாக இருந்த வாழும் வரலாறு தோழர் என்.சங்கரய்யா, மறைந்த தலைவர் கள் கே.வரதராஜன், ஜி.வீரய்யன், ஏ.எம்.காதர், அன்று முதல் இன்று வரை வழிகாட்டியாக திகழ்ந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் - இவர்களின் வழிகாட்டுதலில், ஒரு சில மாவட்டங்களில் சில நூறு பேர்களை மட்டுமே இணைத்து துவங்கியதுதான் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம். இன்றைக்கு 20 மாவட்டங்களில் மலையாளி, இருளர், காட்டுநாயக்கன், மலைக்குறவன், குருமன்ஸ், கொண்டா ரெட்டி, வேட்டைக்காரன், மலைவேடர், காணிகர், களியன், தோடர், புலையன், காடார், பல்சர், மலமலசர், நரிக்குறவன், குருவிக்காரன் உட்பட 22 பழங்குடியின மக்களை ஒரே சங்கத்தில் சேர்த்து செயல்படும் மாபெரும் அமைப்பு தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கமே.
வாச்சாத்தி
தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்க வரலாற்றில் கடந்த 33 ஆண்டுகளில் வாச்சாத்தியில் துவங்கிய மலைவாழ் மக்களின் வீரம் செறிந்த போராட்டம், உலகப் பழங்குடி மக்கள் மத்தியில் உத்வேகத்தை விதைத்த நிகழ்வாகும். அங்கு, பாதிக்கப்பட்ட 18 பழங்குடியின பெண்களுக்கும், கிராம மக்களுக்கும் தொடர்ந்து உயிரையே பணயம் வைத்து நீதி மன்றத்தில் 19 ஆண்டுகள் வழக்கைச் சந்தித்து, இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே குற்றவாளிகள் என்ற தீர்ப்புடன், போன 54 வனத்துறை, காவல்துறையினருக்கும் தண்டனை பெற்றுத் தந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் நடத்தியது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம். இன்னும் அதன் தொடர்ச்சியாக கடைக்கோடியில் உள்ள காடர் இன மக்களுக்கான வாழ்விடம் பெற்றுத் தந்ததும், திருமூர்த்தி மலையில் 100 ஆண்டுகள் தீர்க்கப்படாத சாலை வசதி கோரிக்கையை தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி களத்திலேயே மாவட்ட ஆட்சியரால் சாலை அமைப்பதற்கான உத்தரவை பெற்றதும் மாபெரும் சாதனையாகும்.
இனச்சான்று
திண்டுக்கல் நிலக்கோட்டையில் புதுப்பட்டி காட்டு நாயக்கன் பழங்குடிகளுக்கு ஒரே வாரத்தில் ஆயிரம் இனச் சான்று பெற்றுத்தந்ததும், 28 வருடங்களாக இனச் சான்றிதலுக்காக போராடி வந்த ஆத்தூர் பெத்த நாயக்கன்பாளையம் மலைக்குறவன் பழங்குடி மக்க ளுக்கும், மாணவர்களுக்கும் தொடர் முயற்சியால் கடந்த 12.09.2023 தேதியன்று ஆத்தூர் கோட்டாட் சியரிடம் 38 இனச் சான்றிதழ் பெற்றுத் தந்ததும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திரு வண்ணாமலை போன்ற மாவட்டங்களில் வீட்டு மனை பட்டா, இனச் சான்றிதழ், அரசின் தொகுப்பு வீடுகள், வன உரிமைச் சட்டத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை பழங்குடி மக்களுக்கு பெற்றுத்தந்ததும் - என பழங்குடி மக்களின் பாதுகாவலனாக அம்மக்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்து, அரவணைத்து வரும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், தனது அகில இந்திய மாநாட்டை நாமக்கல்லில் நடத்துகிறது.
செப்.21 பேரணி
தமிழ்நாட்டில் பரவலாக அனைத்து பழங்குடி மக்களையும் ஒன்று திரட்டி ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும், 2023 வன உரிமை திருத்தச் சட்டத்தினை ரத்து செய்திடக் கோரியும், 2006 வன உரிமை சட்டத்தினை முழுமையாக அமல்படுத்தி நில உரிமை வழங்கிடவும் அரை நூற்றாண்டு காலமாக பழங்குடியினர் பட்டியலில் தங்களை இணைத்திடக் கோரி போராடிவரும் புலையன், வேட்டைக்காரன், ஈரோடு மலையாளி, குருமன்ஸ் இனத்தின் உட்பிரிவு கள், குறவன் இனத்தின் உட்பிரிவுகளை பழங்குடியின பட்டியலில் இணைத்திட அடுத்த கட்டமான வலுவான போராட்டத்தினை முன்னெடுத்து செல்வதற்கு ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய மேடையின் நான்காவது அகில இந்திய மாநாடு நிச்சயம் வழி வகுத்திடும், 21-09-2023 மாலை பழங்குடி மக்களின் பண்பாட்டு பேரணி துவக்கி மாலை 5 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பழங்குடி மக்களின் நிலம் உரிமை பாதுகாக்கின்ற ஆதிவாசி உரிமைகளுக்கான அகில இந்திய மாநாட்டிற்கு நாமக்கல் நோக்கி அணிவகுப்பீர்!