இந்தியாவில் கடந்த 8 நாட்களில் 10,000க்கும் குறைவாக இருந்த தினசரி கொரோனா தொற்று இப்பொழுது ஒரு லட்சத்தை கடந்துள் ளது. இன்னும் இது அதிகரிக்கவே செய்யும். தொற்று எண்ணிக்கை வேகமாக உயர்வதற்கு ஒமைக்ரான்தான் காரணம் என்பது ஆய்வாளர்களின் மதிப்பீடு ஆகும். இந்தியாவின் முக்கிய நரங்களான தில்லி/மும்பை/கொல்கத்தா/சென்னை/பெங்களூரு என அனைத்திலும் தொற்று எண்ணிக்கை செங்குத் தாக உயர்ந்த வண்ணம் உள்ளது. சென்னையில் பத்து நாட்களுக்கு முன்பு 1ரூக்கும் குறைவாக இருந்த தொற்று/பரிசோதனை விகிதம் இப்பொழுது 13% ஆக அதிகரித்துள்ளது. செங்கற்பட்டு(11%)/ திருவள்ளூர்(10.5%) மாவட்டங்களும் அதிக தொற்று விகிதத்தை வெளிப்படுத்துகின்றன. 5ரூக்கும் குறை வாக இருப்பதே நல்லது என்பது உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீடு. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தொற்று விகிதம் 6.6ரூ ஆகும். தில்லியிலும் 15ரூஐ தொற்று விகிதம் கடந்துள்ளது. இதே நிலைதான் மும்பை/பெங்களூரு/கொல்கத்தாவிலும் உள்ளது.
ஒரு லட்சம் தொற்றை கடக்க முதல் அலையின் பொழுது 120 நாட்களும் இரண்டாம் அலையில் 50 நாட் களும் ஆயின. மூன்றாவது அலையில் ஒரு லட்சம் தொற்று எண்ணிக்கையை கடக்க 10 நாட்கள் மட்டுமே தேவைப்பட்டன. இந்தியாவில் ஒமைக்ரானின் வேகத்துக்கு இது சான்று! ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் இரு வாரங்களில் தொற்று உச்சத்தை தொடும் என கணிக்கப்படுகிறது. எனவே இந்த குறுகிய காலத்தில் மருத்துவ கட்டமைப்புகள் கடுமையான சவாலை எதிர்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.
தென் ஆப்பிரிக்க அனுபவமும் இந்திய அனுபவமும்!
முதன் முதலில் ஒமைக்ரான் கண்டுபிடிக்கப்பட்டது தென் ஆப்பிரிக்காவில் கவுடங் எனும் பகுதியாகும். இங்கு நவம்பர் இறுதியில் தொடங்கிய தொற்று டிசம்பர் இறுதியில் வேகமாக குறைந்தது. அங்குள்ள மருத்துவ நிபுணர்கள் பீட்டா/டெல்டா/ஒமைக்ரான் எனும் மூன்று அலைகளில் முதல் 4 வாரங்களில் கிடைத்த அனுபவத்தை பட்டியலிட்டுள்ளனர். (அதன் முக்கிய விவரங்கள் கீழே : அட்டவணை) மற்ற உருமாறிகளை ஒப்பிடும் பொழுது ஒமைக்ரான் அலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டவர்கள்/ஆக்சிஜன் தேவைப்பட்டவர்கள்/உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்பதை இந்த விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனை ஒரு முக்கிய தரவாக எடுத்து கொள்ளலாமே தவிர இதே நிலைதான் அனைத்து தேசங்களிலும் இருக்கும் என முடிவுக்கு வர இயலாது. ஒமைக்ரானின் வீரியம்/ இயற்கை எதிர்ப்பு சக்தி/ தடுப்பூசிகள் செலுத்தி கொண்டவர்கள் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு ஏற்ப இது மாறுபடும். ஒமைக்ரான் பாதிப்பிலும் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களில் சுமார் 17 முதல் 20% பேர் இறக்கின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது. மும்பை நகரில் உருவாகியுள்ள ஒமைக்ரான் தொற்று மற்றும் ஆக்சிஜன் தேவை குறித்து சில விவரங்களை நிபுணர்கள் தொகுத்துள்ளனர்.
- மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் 14.1%
- அவர்களில் 30% பேருக்கு ஆக்சிஜன் தேவையும்;
- 11.2% பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும்;
- 7% பேர் வென்டிலேட்டர் சிகிச்சையும் தேவைப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் கவுடங் நகரைவிட மும்பையில் மருத்துவமனை படுக்கைகள்/ஆக்சிஜன்/வென்ட்டிலேட்டர் தேவைகள் அதிகமாக உள்ளன. அதே சமயம் தில்லி மற்றும் கொல்க்கத்தாவில் இவற்றின் தேவைகள் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளன. எனவே அனைத்து இடங்களிலும் ஒமைக்ரான் வைரஸ் ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லை. எனவே ஒரு குறிப்பிட்ட நகரம் அல்லது பகுதியில் வைரஸ் எவ்வித தாக்கத்தை உருவாக்குகிறது என்பதை நுட்பமாக ஆய்வு செய்வது அவசியம் ஆகும். ஒமைக்ரான் காரணமாக உயிரிழப்பு அல்லது நோயின் கடுமைத்தன்மை குறைவாக இருப்பதற்கு கீழ்கண்ட முக்கிய காரணங்கள் முன்வைக்கப்படு கின்றன:
1. ஒமைக்ரான் இயற்கையிலேயே டெல்டாவை ஒப்பிடும் பொழுது வீரியம் குறைவாக உள்ளது.
2. தற்பொழுது ஏழை தேசங்கள் தவிர ஏனைய தேசங்களில் கணிசமான பகுதியினர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதன் விளைவாக எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.
3. ஆல்ஃபா/பீட்டா/டெல்டா போன்ற உருமாறி அலைகளில் கணிசமான மக்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் இயற்கை எதிர்ப்பு சக்தி உருவாகி
யுள்ளது. (தடுப்பூசி எதிர்ப்பு சக்தி/ தொற்றால் உருவாகும் எதிர்ப்பு சக்தி இரண்டும் நாளடைவில் குறைவதால் ஒமைக்ரான் தாக்குகிறது. குறையும் எதிர்ப்பு சக்தி மீட்பதற்காகவே அடுத்த தவணை செலுத்த திட்டமிடப்படுகிறது)
(தடுப்பூசி எதிர்ப்பு சக்தி/ தொற்றால் உருவாகும்
4. ஒமைக்ரான் தொண்டையில் கடும் பாதிப்பை உருவாக்குகிறது. ஆனால் நுரையீரலை குறைவாகவே தாக்குகிறது என்பதை பிரிட்டன்/அமெரிக்கா/பெல்ஜியம்/ஹாங்காங்/ஜப்பான் ஆகிய தேசங்களில் நடைபெற்றுள்ள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
தொற்றிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளில் முக்கியமானது தடுப்பூசி செலுத்துவது ஆகும். 31.12.2021க்குள் 18 வயது பூர்த்தி அடைந்த அனை வருக்கும் இரு தவணைகள் செலுத்துவது எனும் இலக்கை மோடி அரசாங்கம் படாடோபமாக அறி வித்தது. ஆனால் ஜனவரி 7ம் தேதி வரை 45% பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளதாக அரசின் கோவின் இணையதளம் கூறுகிறது. இது கவலை தரும் அம்சம் ஆகும். ஒமைக்ரான் வைரசால் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கூடுதலாக கடும் நோய் விளைவுகளையும் உயிரிழப்பையும் சந்திக்கின்றனர் என்பதை பல தேசங்களின் ஆய்வுகளும் அனுபவங்களும் சுட்டிக்காட்டுகின்றன. உலகிலேயே மிக அதிக தடுப்பூசிகள் செலுத்திய நாடு இந்தியாதான் என மோடி அரசாங்கம் திரும்ப திரும்ப கூறிக்கொள்கிறது. இந்தியா செலுத்திய தடுப்பூசிகள் கணிசமானவை என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் மக்கள் தொகையை ஒப்பிடும் பொழுது தடுப்பூசி திட்டத்தில் பின்தங்கியுள்ளது என்பதே உண்மை! மக்கள் தொகை அதிகமாக உள்ள முதல் 6 தேசங்களின் கீழ்கண்ட விவரங்கள் இதனை தெளிவாக்கும். (அட்டவணை கீழே)
உலக மருந்து உற்பத்தி மையம் என அழைக்கப்படும் தேசம் இந்தியா! ஆனால் தடுப்பூசி செலுத்துவதில் பின் தங்கியுள்ளது. உலகில் பல தேசங்கள் 3வது தவணை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்க இந்தியா ஜனவரி 10(இன்று)தான் 3வது தவணையை தொடங்குகிறது. தடுப்பூசிகளின் எண்ணிக்கையையும் அவை செலுத்தப்படுவதற்கான கட்டமைப்புகளும் போர்க்கால அடிப்படையில் அதிகரிக்க வேண்டியுள்ளது. நோவாவேக்ஸ் மற்றும் கோர்பவேக்ஸ் ஆகிய தடுப்பூசிகளையும் ஒன்றிய அரசாங்கம் விரைவில் அமலாக்கத்திற்கு கொண்டுவர வேண்டும். அடுத்த முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கை முகக்கவசம் ஆகும். மக்களில் கணிசமானவர்கள் முகக்கவசம் போடுவதை தவிர்க்கின்றனர். எனவே மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவது மிக அவசியம். அதே போல பெரும் கூட்டங்களை தவிர்த்தல், தனி மனித இடைவெளி, கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் ஆகியவையும் மிக முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகும். “டெல்டாவை ஒப்பிடும் பொழுது ஒமைக்ரான் குறைந்த கடுமைத்தன்மையுடன் இருப்பது போல தோன்றுகிறது. ஆனால் அதனை குறைந்த ஆபத்தா னது என வகைப்படுத்துவது கூடாது. ஏனெனில் ஒமைக்ரானும் மற்ற உருமாறிகளைப் போலவே மக்களை மருத்துவமனைகளுக்குள் தள்ளுகிறது. உயிர்களை கொல்லுகிறது” என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. அந்த எச்சரிக்கையை மனதில் கொண்டு விழிப்புடன் ஒமைக்ரானை எதிர் கொள்வது அவசியம் ஆகும்.