மேற்கு வங்கத்தில் நடைபெற்ற மூன்று அடுக்கு பஞ்சாயத்துத் தேர்தல்களின் போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, வழக்கம் போலவே இந்த முறையும் தன்னுடைய அர சியல் எதிரிகளுக்கு எதிராகவும், தனக்கெதிராக வாக்களிப்பார்கள் என கருதிய மக்களுக்கு எதிராகவும், வன்முறை வெறியாட்டங்களை யும், மிரட்டல்களையும் கட்டவிழ்த்துவிட்ட தைப் பார்த்தோம். தேர்தல் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத் திலும், அதாவது வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தபோதும், பிரச்சாரத்தை மேற்கொண்ட போதும், தேர்தல் நாளான ஜூலை 8 அன்றும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூலை 11 அன்றும், இடதுசாரி மற்றும் எதிர்க்கட்சி களின் வேட்பாளர்கள் மீதும், அவர்களுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் எனக் கருதி யவர்கள் மீதும், தாக்குதல்கள் மற்றும் மிரட்டல் கள் தொடுக்கப்பட்டன; வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டு, வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன; மிகப்பெரிய அளவில் தேர்தல் மோசடிகள் நடைபெற்றன.
திரிணாமுல் வெறியாட்டம்
கடைசியாக, பல இடங்களில் வாக்குப் பதிவு தனக்குச் சாதகமாக இல்லை என்பதை ஊகித்த பின்னர், எதிர்க்கட்சிகளின் தேர்தல் முகவர்கள், வாக்கு எண்ணும் இடங்களி லிருந்து மிகப்பெரிய அளவில் விரட்டியடிக்கப் பட்டனர், எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு முத்திரையிடப்பட்டிருந்த வாக்குச் சீட்டுகள் கிழித்தெறியப்பட்டன, தேர்தல் முடிவுகள் மாற்றி அறிவிக்கப்பட்டன. பல இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டபின்னர், திரிணாமுல் காங்கி ரஸ் குண்டர்களால் அவை பறிக்கப்பட்டு, அழிக்கப்பட்டன. பாங்கரில் ஐஎஸ்ஃஎப் வேட்பாளர், ஜெகனாரா பீவி, ஜில்லா பரிஷத் இடத்திற்கு வென்ற பின்னர், அந்த இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் வென்றதாக அறிவிக்கப் ப்பட்ட கொடுமையானது மிகவும் மோசமான ஒன்றாகும். உள்ளூர் மக்கள் இந்த மோசடிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தபின், இரவில் போராடிய மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் கொல்லப் பட்டார்கள். ஒட்டுமொத்தத்தில், தேர்தல் சம்பந்தமான வன்முறை சம்பவங்கள் காரணமாக, 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இதில் மற்றுமொரு மிகவும் மோசமான அம்சம் என்னவெனில், மேற்கண்ட அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளிலும் மாநில அரசு நிர்வாகத்துடன், காவல்துறையும் உடந்தையாக இருந்து ஈடுபட்டதாகும். இதில் மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு என்பது மிகவும் அவமானகரமானதாகும். பிரதான ஊடகங்கள் அனைத்தும், திரிணாமுல் காங்கிரஸ் இந்தத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருப்பதாக அறிவித்திருக்கின்றன. இந்தத் தேர்தல் முடிவு களை வைத்து எவ்விதமான அரசியல் முடிவுக்கும் வருவதில் அர்த்தம் இல்லை. தேர்தல் தொடர்பான அனைத்து நட வடிக்கைகளும் கேலிக்கூத்தானவையாகும். அனைத்துப் பஞ்சாயத்து அமைப்புகளையும் கைப்பற்றவேண்டும் என்கிற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வெறித்தனத்தால் ஜனநாயகம் இங்கே கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருக்கிறது.
மக்களின் பதிலடி
அதேவேளையில், 2018 பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடந்த போதிருந்த நிலைமைகள் போல இப்போது, திரிணாமுல் குண்டர்களின் தாக்குதல்கள் அவ்வளவு எளிதாக அமைந்திட வில்லை. பல இடங்களில் அவர்களின் தாக்கு தல்கள் அணிதிரண்ட மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. இவர்கள் மேற்கொண்ட நூற்றுக்கணக்கான தாக்குதல் களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணி வேட்பாளர்கள் எதிர்த்து நின்று முறியடித்துள்ளனர். தேர்தல் நாளின்போது, திரிணாமுல் காங்கிரஸ் மேற்கொண்டிருந்த தடைகளைத் தகர்த்தெறிந்துவிட்டு, பல்லா யிரக்கணக்கான மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தி இருக்கின்றனர். இந்த அனுபவம் தான் வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்ய இறங்கிய ஆளும் கட்சியை மிகவும் பதற்ற மடையச் செய்தது. மேலும் திரிணாமுல் காங்கிரசின் ஆட்சிக்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்பினை அளித்தது இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும்தான் என்பதையும் பஞ்சாயத்துத் தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன. எனவேதான் திரிணாமுல் காங்கிரசின் தாக்குதல்கள் இவர்களுக்கு எதிராகப் பிரதானமாக அமைந்திருந்தன. ஒப்பீட்டளவில் பாஜக-விற்கு எதிரான திரிணாமுல்லின் தாக்குதல்கள் என்பவை பெயரளவிலானதேயாகும். ஏனெ னில், திரிணாமுல் காங்கிரசும், பாஜக-வும் ஒரே வர்க்க நலனையே பிரதிபலிக்கின்றன, அவற்றிற்கு கிராமப்புற பணக்கார வர்க்கமும், அதனிடம் ஒட்டுண்ணியாக இருந்திடும் நபர்களுமே ஆதரவு அளித்துள்ளனர்.
புதுப்பணக்காரர்களும் திரிணாமுல் கட்சியும்
கிராமப்புறப் பகுதிகளில் திரிணாமுல் காங்கிரசின் ஆதிக்கம் என்பது கடந்த பத்தாண்டுகளில் அது அங்கே அமைத்துள்ள வலைப்பின்னலிலிருந்து உருவாகியிருப்ப தாகும். கிராமப்புறங்களில் புதிதாக உரு வாகியுள்ள புதுப் பணக்காரர்களே அதன் ஆதர வாளர்கள். கிராமப்புற வங்காளத்தின் அரசியல் பொருளாதாரம் என்பது, அனைத்து மட்டங் களிலும் திரிணாமுல் காங்கிரசாரின் அடா வடித்தனங்களுடன் பின்னிப்பிணைந்ததாக மாறியுள்ளது. அரசாங்க நலத்திட்டங்களுக்கு கிராமப்புறங்களில் செலவிடப்படும் நிதி முழுமையாக இவர்களால் சூறையாடப்பட்டு வருகிறது. மாநில அரசுத் திட்டங்கள் மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் இவர்களுக்கு அளிக்கப்படும் ‘கமி ஷன்கள்’ கணிசமானவைகளாகும். கிராமப்புறங் களில் இருக்கும் புதுப்பணக்காரர்களின் இத்தகு ஊழல் மற்றும் வலுவான வலைப் பின்னல்தான் திரிணாமுல் காங்கிரசின் அடாவடித்தனங்களை நிறைவேற்றுவதற்கு உதவி செய்து வருகின்றன. இத்தகைய பேர்வழிகளுக்கு பஞ்சாயத்து அமைப்பு களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது. இவ்வாறு கொள்ளையடிக்கும் பணத்தைப் பங்கு போட்டுக்கொள்வதில் இவர்களுக்குள் மோதல்களும் முரண்பாடு களும் வரும்தான். எனினும் அதே சமயத்தில் திரிணாமுல் காங்கிரசின் அடியாட்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது இவர்களுக்கு அவசியமாகிவிடுகிறது.
இத்தகைய ஊழல்-கிரிமினல் கள்ளப்பிணைப்பிற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரி சக்திகளும் போராடிக்கொண்டிருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிர சின் ஊழல்-கிரிமினல் கள்ளப்பிணைப்பிற்கு எதிராக இடதுசாரிகள் நடத்திவரும் போராட்டங் கள் நாளும் அதிகரித்தவண்ணம் அமைந் திருந்தன. அதனால்தான் பஞ்சாயத்துத் தேர்தல்களின்போது அவர்கள் இத்தகைய ரவுடிகளின் வன்முறை வெறியாட்டங்களைக் கடுமையாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தொடர்ந்து நடத்திவரும் போராட்டங் களின் மூலமாக உருக்கு போன்று மாறியி ருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து நின்று திரிணாமுல் காங்கிரசின் ஆட்சிக்கு எதிராக மக்களின் நலன்களுக்காகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது தொடரும். அவர்கள் மாற்று சக்தியாகக் காட்டப்பட்டுவரும் மிகவும் மோசமான பாஜக-விற்கு எதிராகவும் தீர்மானகரமான முறையில் போராடுவார்கள். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக, நாடு முழுதும் பாஜக-விற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணிதிரண்டு வரும் அதே சமயத்தில், வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தகைய ஜனநாயக விரோதத் தாக்குதல்கள் பாஜக-விற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு பெரும் கேடு விளைவிப்பதாகும்.
(ஜூலை 12, 2023)
- தமிழில்: ச.வீரமணி