கட்சி பாகுபாடின்றி திட்டங்கள் நிறைவேற்றம்
இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “உங்கள் தொகுதி’’ திட்டத்தின் கீழ் எங்கள் தொகுதி சார்ந்த 10 கோரிக்கைகள் கேட்கப்பட்டன; நாங்களும் வழங்கினோம். அதிமுக உறுப்பினர்களின் பெரும்பாலான கோரிக்கைகள், சாத்தியமில்லை என கூறி நிராகரித்து விட்டீர்கள். மக்கள் சார்ந்த திட்டங்களை அளிக்கும் போது அதனை நிதி அதிகம் எனக்கூறி நிராகரிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்த திட்டம் குறித்து இரண்டு மாதங் களுக்கு ஒருமுறை நானே ஆய்வு செய்கிறேன். ஆறு மாதத்திற்கு முன்பு அதிமுகவைச் சேர்ந்த விஜய பாஸ்கர் கோரிக்கை எதுவும் தராத நிலையில், மீண்டும் மீண்டும் கேட்ட பின்புதான் தந்தார். நிதி நிலைமைக்கு உட்பட்டு சாத்திய முள்ள திட்டங்கள் அனைத்தும் நிறை வேற்றப்படும். எந்த கட்சி பாகு பாடின்றி திட்டங்கள் நிறைவேற்றித் தரப்படுகிறது. எந்த திட்டத்தையும் கட்சி பாகுபாட்டுடன் நிறை வேற்றுவதில்லை” என்று கூறினார். திருச்சுழி நூலகத்திற்கு காமராஜர் பெயர் இதனைத் தொடர்ந்து பேசிய முத லமைச்சர், “திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைக்கப் படும் நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்றார். கோவை, திருச்சியில் நூலகம் கட்டும் பணிகள் வேக வேகமாக நடைபெறுகின்றன. மதுரை நூல கம் ஓராண்டில் கட்டி முடிக்கப்பட்டு இதுவரை 14 லட்சம் பேர் பய னடைந்துள்ளனர் என்றும் தெரிவித் தார்.
மீண்டும் பேரவை கூடியது
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 1 ஆம் தேதி தொடங்கியது. தற்போது, துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில், வார விடுமுறை மற்றும் ரம்ஜான் பண்டிகை விடுமுறை என 3 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு சட்டப்பேரவை செவ்வாய்க்கிழமை (ஏப்.1) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது.
நதிஇணைப்பு திட்டத்தை கைவிட மாட்டோம் அமைச்சர்
துரைமுருகன் சென்னை,ஏப்.1- திமுக ஆட்சியில், மறைந்த முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.1) கேள்வி நேரம் முடிந்ததும், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டப்பணிகள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர், “நதிநீர் இணைப்பு என்பது விவசாயிகளின் கனவு திட்டம். மேட்டூர் அணை நீர் திறக்கப்பட்டால் உபரி நீர் கடலில் கலக்கிறது. காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் அடுத்த தலைமுறைக்கானது, விரைந்து செயல்படுத்த வேண்டும்” என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “காவிரி-வைகை- குண்டாறு கால்வாய் இணைப்பு திட்டத்திற்கு முதலில் அடித்தளம் இட்டவர் கலைஞர்தான். இந்த திட்டத்தை மூன்று கட்டங்களாக நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளோம். ரூ.33.48 கோடி செலவில் 89 விழுக்காடு கால்வாய் வெட்டும் பணிகள் முடிக்கப்பட்டன. மீதமுள்ள பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது”என்றார். தற்போது, 2,038 ஏக்கர் நிலம் முதல்கட்டமாக கையகப் படுத்தப்பட்டுள்ளது. கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் 4,100 கி.மீ முதல் 54,695 கி.மீ வரை எட்டு சிப்பங்களாக பிரித்து ரூ.3,076.32 கோடிக்கு மதிப்பீடு தயாரித்து அரசிடம் ஒப்புதல் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்தை கைவிடமாட்டோம்”என்றும் கூறினார். பாஜகவுடன் நெருங்கும் அதிமுக! தமிழ்நாட்டில், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்ற பாஜக தேசியத் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படலாம் என்ற தகவல் பரவி வரும் நிலையில், சட்டப்பேரவை அரங்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர், நயினார் நாகேந்திரனின் இருக்கைக்கு சென்று சுமார் 10 நிமிடம் பேசினர்.
கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி தில்லியில் அமித்ஷாவை சந்தித்த பிறகு அதிமுக - பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில், இந்த பேச்சுவார்த்தை கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தலைநகரை மாற்ற வேண்டும்: ருசிகர விவாதம் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், “சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும்”என்றார். அப்போது,“நாட்டின் தலைநகர் புது தில்லியை சென்னைக்கு மாற்ற வேண்டும்”என்று பேரவைத் தலைவர் மு. அப்பாவு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன்,“வாய்ப்பு வரும்போது கொண்டு வரப்படும் என்றதும் சிரிப்பலையால் பேரவை அதிர்ந்தது. இந்த சுவாரஸ்ய பேச்சுக்கு இடையில், அன்போடு, அன்போடு, அன்போடு என பல கோரிக்கைகளை வைத்தார் நாகேந்திரன். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர்,“நயினார் நாகேந்திரன் அன்போடு, அன்போடு என கேட்கும் கோரிக்கைகளை நாங்களும் அன்போடு பரிசீலிப்போம்”என்றார். கல்லாற்றில் மேலும் ஒரு தடுப்பணை சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பெரம்பலூர் தொகுதி திமுக உறுப்பினர் ம.பிரபாகரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,“கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்டப்படும்.
ரூ. 6.50 கோடியில் திட்ட மதிப்பீடுகள் தயாராக உள்ளது. சின்னமுட்டலுவில் 12 மீ வரை பூமியில் கூழாங்கல் கலந்த மண் உள்ளது. சிதைவுற்ற மணலும் காணப்படு வதால் நீர்த்தேக்கம் அமையும் சாத்தியக்கூறுகள் இல்லை” என்றார். ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தின் நிலை ! ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “காவிரி, திருமணிமுத்தாறு, சரபங்கா, பவானி, அமராவதி, வைகை ஆகிய துணை ஆறுகள் மாசுபடுவதில் இருந்து பாதுகாத்தல், புத்துயிர் பெறச் செய்தல், நீர் ஆதாரங்களை மேம்படுத்துதல் என்பது இந்த திட்டத்தின் நோக்கம். இதன் மதிப்பீடு ரூ.934,30 கோடி. இதில் ஒன்றிய அரசின் பங்கு 60 விழுக்காடு, மாநில அரசின் பங்கு 40 விழுக்காடாகும். இந்த பணிகளுக்கான திட்ட மதிப்பீடுகள் முடிக்கப்பட்டுள்ளது”என்றார். ஏரிகள் தூர்வார ரூ.200 கோடி ஏரிகள் தூர்வார வேண்டியதன் அவசியம் குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கே.என். நேரு,“தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு சொந்தமான ஏரிகளை தூர்வாரவும் ஒழுங்குபடுத்தவும்‘நமக்கு நாமே’திட்டத்திற்காக ரூ.200 கோடி தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. எந்த பகுதியில் தூர்வார வேண்டும் என்பதை சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியலை கொடுத்தால் முன்னுரிமை அடிப்படையில் தூர்வாரி செப்பனிடப்படும்” என்றார். ‘
அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையம்’ விரிவாக்கம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் அதிநவீன முறையில் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தமிழ்நாடு முழுவதும் திறக்கப்படுமா? என்று திமுக உறுப்பினர் துரை.சந்திரசேகர் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, “தற்போது, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமைதூக்கும் தொழிலாளர்களை கொண்டு நாள் ஒன்றுக்கு 20 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் முதன் முறையாக ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி, பஞ்சநதிக்கோட்டை யில் ரூ.1 கோடியே 40 லட்சம் செலவில் அதிதிறன் முறையில் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இரு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 200 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. தானியங்கி முறையில் துல்லியமாக எடை மற்றும் தானியங்கி பேக்கிங் மூலம் மூட்டையாக தைய்க்கப்பட்டு கன்வேயர் மூலம் லாரிக்கு ஏற்றப்படுகிறது. இது அந்த பகுதி விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நெல் அதிகம் விளையும் பகுதிகளில் மெகா நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
புதிதாக 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள்! சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 19 இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், 6 இடங்களில் தலைமை மருத்துவமனைகளுக்கு இணையான மருத்துவமனைகளும் அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த பணிகள் ரூ.1,018 கோடி செலவில் நடந்து வருகிறது.மேலும் தமிழ்நாடு முழுவதும் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒரே ஆண்டில் 500 நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டன.மீதம் இருக்கிற மையங்கள் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது என்று கூறினார்.