articles

img

குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.12ஆயிரம் ஆக நிர்ணயித்திடுக!

சென்னை, நவ. 8 - ஓய்வூதியர்களின் கோரிக்கை களை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் தில்லியில் மாபெரும் இயக்கத்தை நடத்த அகில இந்திய மாநில அரசு  ஓய்வூதியர் சம்மேளனம் அறைகூவல் விடுத்துள்ளது.

சம்மேளனத்தின் முதலாவது மாநாடு செவ்வாயன்று (நவ.7) சென்னையில் நடைபெற்றது. சம்மேளனத்தின் அகில இந்திய தலைவர் அசோக் தூல் தலைமை யில் நடைபெற்ற இந்த மாநாட்டை தொடங்கி வைத்து அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஏ.ஸ்ரீகுமார் பேசினார். ஓய்வூதியர் சம்மேளன பொதுச் செயலாளர் நெ.இல.சீதரன் வேலை அறிக்கையும், பொருளாளர் ஆர்.சீனிவாசன் நிதி அறிக்கையும் சமர்ப்பித்தனர்.
மூத்த தொழிற்சங்க தலைவர் டி.கே.ரங்கராஜன், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன துணைப்பொதுச் செயலாளர் மு.அன்பரசு, பொறியாளர் ஏ.வீரப்பன்  ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். வரவேற்புக்குழு பொருளா ளர் என்.ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.

நிர்வாகிகள்

சம்மேளனத்தின் தலைவராக அசோக்தூல், பொதுச் செயலாள ராக நெ.இல.சீதரன், பொருளாளராக  ஆர்.சீனிவாசன் ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டனர். தமிழ்நாட்டிலிருந்து துணைத் தலைவராக பி.கிருஷ்ண மூர்த்தியும், செயலாளராக என்.ஜெயச் சந்திரனும் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள்

இந்த மாநாட்டில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொது விநியோக முறையை பலப் படுத்த வேண்டும், பழைய ஓய்வூதிய  திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,  8வது ஊதியக் குழுவை அமைக்க  வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதி யத்தை 12ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், ரயில்வேயில், மூத்த குடி மக்களுக்கான பயணச்சீட்டு சலு கையை மீண்டும் வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,

தமிழ்நாடு அரசு முடக்கி வைத்துள்ள அகவிலைப்படி நிலுவை களை வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரியில் தில்லி யில் மாபெரும் இயக்கத்தை நடத்த வும் அறைகூவல் விடுக்கப்பட் டுள்ளது.