world

img

இஸ்ரேலின் பயங்கரவாதத்திற்கு எதிராக “உலக முன்னணி”: வெனிசுலா அழைப்பு

காரகஸ்,அக்.7-  இஸ்ரேலின் போர்க் குற்றங்கள் மற்றும் பயங் கரவாதச் செயல்களுக்கு எதிராக ஒரு “உலக முன்னணியை” உருவாக்க வேண்டும்; மேற்கு ஆசியாவில் ஈரான் மற்றும் அரபு நாடுகளுடன் கைகோர்க்க வேண்டியது  அவசியம் என வெனிசுலா அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஈரான், பாலஸ்தீனம், லெபனான், சிரியா, குவைத், அல்ஜீரியா, எகிப்து, சவூதி அரேபி யா, இராக், கத்தார், சூடான் ஆகிய நாடுகளின் தூதர்கள் மற்றும் தூதரகப் பிரதிநிதிகளுடன் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று வெனிசுலா தலைநகர் காரகஸில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய போது வெனிசுலா வெளியுறவுத்துறை  அமைச்சர் யுவான் கில் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

வெனிசுலாவின் இடதுசாரி ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற கூட்டத்தில், இஸ்ரேலின் படுகொ லைகளை கண்டிக்கும் வகையில் ஒரு  மாபெரும் உலக முன்னணி உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மையப்படுத்தி கில் பேசி யுள்ளார்.  

அவர் பேசியதாவது, ஆதிக்கத்திற்கு எதிரான நம்முடைய இந்த சக்தி, இஸ்ரேல் கூட் டத்தின் காட்டுமிராண்டித்தனத்தை நிறுத்தும் வகையில், சர்வதேச அரசியலில் ஒரு இராஜ தந்திர சக்தியாக மாற வேண்டும். அடுத்து வரக்கூடிய நாட்களில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் நாஜி ஆட்சியை கட்டுப்படுத்தும்  நடவடிக்கைகளில்  உறுதி யான முன்னேற்றத்தை இந்த சக்தி துவங்க வேண்டும் என குறிப்பிட்டார். 

நேதன்யாகுவின் பாசிச ஆட்சி ஒரு வரு டத்திற்கு முன்பே அனைத்து முஸ்லிம் மக்களை யும் அழித்தொழிக்கும் வேலையில் இறங்கி விட்டது. முழு பாலஸ்தீனத்தையும் அழிக்கும்  வகையில் கொடூரமான முறையில் குண்டுகளை  வீசுவது உள்ளிட்ட மிக மோசமான முறையில் இஸ்ரேல் அங்கு போரை அரங்கேற்றியுள்ளது.  

ஹிட்லருக்குப் பிந்தைய பேரழிவு நடவடிக்கை

காசா பகுதியில் நடப்பதைப் போலவே லெப னானிலும் இனப்படுகொலை நடத்தி வருகிறது. இந்த   இனப்படுகொலைகள்  அமெரிக்காவின் ஆதரவுடனும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச சமூகத்தின் மௌனத்துடனுமே நடத்தப்படுகிறது. பாலஸ்தீன குழந்தைகள், பெண்களின் தலையில் மேலும் ஒரு குண்டு விழுவதை மனிதகுலத்தால் பொறுத்துக் கொள்ள முடியாது.காசா மற்றும் லெபனான் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு ஹிட்லர் தலை மையிலான நாஜிக்களுக்கு பிறகு மனித குலத்தின் மீது நடத்தப்படும்  பேரழிவு என  விமர்சித்தார்.

மேலும் ஒரு அரசியல் ஆதிக்கத்தை உரு வாக்குவதற்காக  மேற்கத்திய சக்திகளால் ஆத ரிக்கப்படும் ஒரு புதிய ஹிட்லரை தற்போது பார்க்கிறோம் என மிக கடுமையான முறையில் இஸ்ரேலையும் அதன் இனப்படுகொலைக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளையும் விமர்சித்தார்.

மேலும் நேதன்யாகு ஐ.நா அவையில் பேசி யதை குறிப்பிட்ட அவர், போரின் மூலம் உலகை அச்சுறுத்துவது ஒரு சீர்குலைக்கும் நடவ டிக்கை எனவும் பைத்தியக்காரத்தனமான திட்டம் எனவும் எச்சரித்தார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு வெனிசுலா தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதியளித்தார். மத்திய கிழக்கில் உள்ள அரபு, முஸ்லிம் நாடுகளுக்கு  வெனிசுலாவின் ஒற்றுமையையும் தெரி வித்துள்ளார்.