வங்கதேச முன் னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, 26 பத்திரி கையாளர்கள் உட்பட 52 பேர் மீது இனப்படுகொலை வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் வங்கதேச வழக்கறிஞர் ஒருவர் ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டார் எனவும் அதற்கு உதவிய சில பத்திரிகையாளர்கள் மீதும் வழக்கு தொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா மீது மட்டும் கிட்டத்தட்ட 75 புகார்கள் வங்கதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.