- உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிய சில ஆயுதங்கள் சிரியா தீவிரவாதிகளின் கைகளுக்கு சென்றுள்ளது. இது ஐரோப்பிய நாடுகளில் கடும் கவலையை தோற்றுவித்துள்ளது. ரஷ்யாவின் எல்லைகளை தாண்டி உள்பகுதி களை தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க போவது இல்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.
- துருக்கிக்கு நேட்டோ என்றுமே நேச சக்தியாக இருந்தது இல்லை என அரசியல் ஆய்வாளர் ஒனர் குசல்டான் கூறியுள்ளார். உக்ரைனுக்கு கொடுத்து வந்த இலவச எரிசக்தி யை போலந்து நிறுத்திவிட்டது.
- இனி பணம் கொடுத்தால்தான் தரமுடியும் என கூறியுள்ளது. டோன்பாஸ் பகுதியில் ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரிக்கும் வேகத்தில் உக்ரைனின் ஒற்றுமை யும் சிதறிக்கொண்டுள்ளது என விலாடிஸ்லாவ் உகால்னி எனும் ஊடகவியலாளர் தெரிவித்துள் ளார்.
- ரஷ்ய தடைகள் காரணமாக ஜெர்மனியில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ளது.
- கட்டாய ராணுவ கடமை காரணமாக உக்ரைன் குடிமக்கள் 18 முதல் 60 வயது உடையோர் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது என உக்ரைன் சட்டம் இயற்றியுள்ளது. இப்பொழுது 5000 டாலர் தந்தால் வெளியேறலாம் என ஆலோச னை முன்வைக்கப்படுகிறது.
- நிதி நெருக்கடியில் உக்ரைன் தள்ளாடுகிறது. புடினுக்கு புற்று வியாதி எனவும் அவர் இறந்துவிட்டார் எனவும் புடின் வடிவத்தில் நடமாடு வது டூப்ளிகேட் எனவும் மேற்கத்திய ஊடகங்கள் இழிவாக பிரச்சாரம் செய்வதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரவ் புகார் கூறியுள்ளார்.
- ரஷ்ய எண்ணெய்க்கு ரூபிள் தர இயலாது என நெதர்லாந்து திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எனவே எண்ணெய் நிறுத்தப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது.
- ஐ.நா. பங்கேற்புடன் ரஷ்யா-உக்ரைன் பேச்சு வார்த்தை நடத்த துருக்கி ஆலோசனை முன்வைத்துள்ளது. அந்த கூட்டத்தை நடத்தவும் தயார் என அறிவித்துள்ளது.