world

உக்ரைன்-ரஷ்யா போர் கள நிலவரம்

  1. *ரஷ்ய எண்ணெய் தடைகள் காரணமாக இத்தா லியில் லுக் ஆயில் எனப்படும் நிறுவனத்தின் 10,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.அந்த தொழிலாளர்கள் போராட துவங்கியுள்ளனர். *
  2. போலந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருக்க வேண்டியது இல்லை என முன்னாள் போலந்து ஜனாதிபதி லேக் வலேசா கூறியுள்ளார். இவரை நினைவில் உள்ளதா?
  3. சோசலிசம் போலந்தில் பின் னடைவை சந்தித்த பொழுது சாதாரண தொழிற் சங்க தலைவரான இவரைதான் மேற்கத்திய உலகம் கொண்டாடி ஜனாதிபதியாக உதவியது.
  4. * உக்ரைனில் உள்ள உணவு தானியங்களை கப்ப லில் கொண்டு செல்ல உதவுவோம் என புடின் அறி வித்த பிறகு சர்வதேச சந்தையில் விலைகள் குறை யத் தொடங்கியுள்ளன.
  5. *தாம் பாதிக்கப்படாமல் ரஷ்யாவை எப்படி சிதைப்பது என தாங்கள் திட்டமிடுவதாகவும், எனவே ரஷ்ய எண்ணெய்க்கு மேலும் கூடுதலாக தடைவிதிக்கும் திட்டம் இல்லை எனவும் ஐரோப் பிய ஒன்றிய தலைவர் பவோலோ ஜென்டிலோனி கூறியுள்ளார். * ரஷ்யா கைப்பற்றியுள்ள டோன்பாஸ் பகுதியில் உக்ரைன் தினமும் பொது மக்கள் வாழும் இடங்க ளில் குண்டுகள் மூலம் தாக்கி வருகிறது.
  6. பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். *உக்ரைன் தாக்குதலில் இரண்டு ராய்ட்டர் பத்திரிகையாளர்கள் கடும் காயம் அடைந்துள்ள னர். அவர்களின் கார் ஓட்டுநர் கொல்லப்பட்டார். * உக்ரைனின் டொனட்ஸ்க் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தை உக்ரைன் ராணுவத்தினர் தீயிட்டு கொளுத்தியுள்ளனர் என ரஷ்ய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளனர்.
  7. * உக்ரைனின் முதுகுக்கு பின்னால் அமெரிக்கா/பிரிட்டன்/ஐரோப்பிய ஒன்றியம் போரை எப்படிமுடி வுக்கு கொண்டு வருவது என விவாதித்து வருவதாக சி.என்.என். ஊடகம் அம்பலப்படுத்தியுள்ளது.
  8. உக்ரைன் வெறும் பகடைக்காய் என்பது மேலும் நிரூபணம். * ரஷ்ய கொடியை வைத்திருந்த காரணத்தால் லத்தி வியாவின் குடிமகனுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை ஆபத்து! வாழ்க மேற்கத்திய ஜனநாயகம்! *
  9. ரஷ்யா மேற்கத்திய நாடுகளிலிருந்து தனிமைப் பட்டுள்ளது. ஆனால் மேற்கத்திய நாடுகள் ஏனைய உலக நாடுகளிலிருந்து தனிமைப்பட்டுள்ளன என முன் னாள் இத்தாலி பிரதமர் பெர்லுசோனி கூறியுள்ளார்.