world

உக்ரைனில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இயங்கும் அபாயகரமான உயிரி சோதனைச்சாலைகள் - க.ஆனந்தன்

உக்ரைன் மீது  ரஷ்யா இராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட் டில் உள்ள உயிரியல் சோதனைச் சாலைகள் செயல்படுவதை உலகிற்கு அறிவித்துள்ளது.  உக்ரைன் நாட்டில்  26 உயிரி சோத னைச் சாலைகள் வைத்துள்ளதை அமெ ரிக்கா தற்போது ஒத்துக்கொண்டுள்ளது. இந்த உயிரி சோதனைச் சாலைகளில் மிகவும் அபாயகரமான உயிரி ஆயு தங்களுக்கான சோதனைகள் நடை பெறுகிறதா என்ற சந்தேகம் தற்போது உலகெங்கும் எழுப்பப்படுகிறது. குறிப் பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இத்தகைய சந்தேகங்களை எழுப்புகிறது. இந்த உயிரி சோதனைச் சாலைக ளில் எத்தகைய ஆபத்தான வைரஸ்கள், பாக்டீரியாக்கள், உயிரி ஆயுதங்கள் சோதிக்கப்பட்டன என்பது குறித்து உக் ரைன் நாட்டிற்கே தெரிவிக்கப்பட வில்லை.

அந்த சோதனைச் சாலைக ளில் ஏதாவது அசம்பாவிதம் நடைபெற் றால்கூட அந்த பகுதி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுவதற்கு முன்பு, அமெ ரிக்கா ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே வெளியே சொல்ல முடியும் என்பதே நிலை.   இதுவரை நடைபெற்ற சோதனைகள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. ரஷ்யாவின் எல்லையில் அமெரிக்கா இத்தகைய ஆபத்தான உயிரி ஆயுத சோதனைச்சாலைகளை நிறுவியுள் ளது, உலகத்தை எந்தளவிற்கு அழிவின் விளிம்பிற்கு அமெரிக்கா கொண்டு சென்றுள்ளதை என்பதை காட்டுகிறது. இதற்குத்தான் உக்ரைன் நாட்டில் ஜனநாயகப்பூர்வமாக தேர்ந் தெடுக்கப்படாத தனது கைப்பாவை ஜெலினின்ஸ்கியை அமெரிக்கா நியமித்துள்ளது.  சீன வெளியுறவு அமைச்சகம், உக் ரைனில் அமெரிக்காவின் இராணுவ உயிரி நடவடிக்கைகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்  போன்றது என்கிறது.  

ஏனெனில், அமெரிக்கா இது போல 30 நாடுகளில் இராணுவ உயிரி ஆயுத சோதனைச் சாலைகளை நிறுவி யுள்ளது என்றும், உலகம் முழுவதும் மொத்தம் 336 உயிரி சோதனைச்சாலை கள் (பயோ வார்பேர் லேபாரட்டரி) உள்ளது என்றும் தெரிவிக்கிறது.  அமெரிக்கா இதுவரை இந்த 336 உயிரி ஆயுத சோதனைச்சாலைகளில் என்ன வகையான சோதனைகளை மேற்கொண்டு வந்துள்ளது. இவற்றின் மூலம் வெளியிடப்பட்ட வைரஸ்கள் என்ன போன்ற எந்த விவரத்தையும் உல கிற்கு  தெரிவித்தது கிடையாது, அவற்றை தெரிவிக்க வேண்டும் என சீனா கோரி யுள்ளது. ஆனால் அமெரிக்கா இன்று வரை இத்தகைய கேள்விகளுக்கு பதில ளிப்பதில்லை. ஆனால் சின்னஞ்சிறு நாடு களை, உயிரி ஆயுதம் கொண்டுள்ளன. அணு ஆயுதம் வைத்துள்ளனர். இரசாயன ஆயுதம் வைத்துள்ளனர் என்று கூறி அந்த நாடுகளை அமெரிக்கா ஆக்கிரமிக்கும். உக்ரைன் யுத்தம் உண்மையில் அமெரிக்கா, ரஷ்யாவிற்கு எதிராக நடத் திடும் நிழல் யுத்தமே! அமெரிக்காவின் கைப்பாவை அரசு தொடர்வதற்கான விலையை அந்த நாட்டு அப்பாவி மக்கள் தர வேண்டியுள்ளது. இரண்டு மில்லியன் உ்க்ரைன் மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.