world

img

மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2 பேர் பலி

மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பலர் காயமடைந்த நிலையில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த பொது தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆட்சியை மியான்மர் ராணுவம் கவிழ்த்தது.  இதனால் மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகிறது.

இந்நிலையில் மியான்மர் மாண்டலேவில் ராணுவத்துவத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் போராட்டக்காரர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் பலர் படுகாயம் அடைந்த நிலையில் 2 பேர் பலியாகினர்

மியான்மரில் ராணுவத்தின் இத்தாக்குதலை ஐ. நா.,பிரான்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன.

முன்னதாக மியான்மரில் கடந்த வாரம் தலைநகர் நேபிடாவில் ராணுவத்துவத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் 20 வயதான ஆங் சான் சூ தலையில் குண்டு பாய்தலால் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
ராணுவத்துக்கு எதிராக மியான்மரில் நடந்து வரும் போராட்டத்தில் ஏற்பட்ட முதல் மரணம் இதுவாகும். இந்த நிலையில் தற்போது மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர்.
 

;