லண்டன், மே 20- நாட்டின் எரிபொருள் துறையை நாட்டுடைமை ஆக்கினால் லாபத்தைக் குறிவைத்து நடக்கும் மோசடிகளைத் தடுத்து விட முடியும் என்று பிரிட்ட னின் தொழிற்சங்கமான யுனைட் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுமார் 14 லட்சம் தொழிலாளர்களை உறுப்பி னர்களாகக் கொண்டுள்ள யுனைட் தொழிற்சங்கம் 2007 மே 1, அன்று தொடங்கப்பட்டதாகும். தொழி லாளர்களின் பிரச்சனைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இதன் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் பிரிட்டனின் தொழிலாளர் கட்சியின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். இன்னும் சரியான இடது பாதையில் அக்கட்சி செல்ல வேண்டும் என்று வலியுறுத்துபவர்களாக அவர்கள் உள்ளனர். தேர்தல்களில் இந்தத் தொழிற்சங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர் கள் தொழிலாளர்கள் கட்சிக்குத் தங்கள் ஆதர வைத் தெரிவிக்கிறார்கள். உக்ரைன் நெருக்கடியைக் காட்டிப் பல்வேறு நாடுகளில் எரிபொருட்களின் விலைகள் கடுமை யாக அதிகரித்துள்ளன. மக்கள் கடுமையான துயரத்தில் இருக்கிறார்கள். ஐரோப்பிய நாடு கள் அனைத்திலும் பல்வேறு துறைகளைச் சார்ந்த மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்ற னர். இந்நிலையில் எரிபொருள் துறை பற்றிய யுனைட் தொழிற்சங்கத்தின் ஆய்வு, மோசடிகளை அம்பலப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதித்திருக்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் பிரிட்டனின் எண்ணெய் நிறுவனங்களுக்கு 4 ஆயிரத்து 500 கோடி பவுண்டுகள் என்ற அளவில் லாபம் கிடைத்திருக்கிறது. இந்தக் கொள்ளை லாபம் மக்களிடமிருந்து சுரண்டப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டும் ஆய் வறிக்கை, இது மக்களின் கைகளில் இருந்தி ருந்தால் ஒவ்வொரு குடும்பமும் 1,800 பவுண்டு களை சேமித்திருக்கமுடியும். பாதுகாப்பான வேலைகள் என்பதை உத்தரவாதப்படுத்தியிருக்க முடியும். 2021 ஆம் ஆண்டின் மத்தியில் விலை கள் ஏறத் தொடங்கியபோது எரிபொருள் துறை யின் கொள்ளை லாபத்தைக் கொண்டு விலை களைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் தற்போதுள்ள பணவீக்கத்தை விட 4.1 விழுக்காடு குறைவாக இருந்திருக்கும் என்று சுட்டிக்காட்டுகிறது. நாட்டுடமை செய்வதன் மூலம் மக்களின் எரி பொருள் செலவு குறைந்திருக்கும், பணவீக் கத்தைக் கட்டுப்படுத்தியிருக்கலாம் மற்றும் சில ஆண்டுகளில் எரிபொருள் துறை சொந்தக்கால் களில் நிற்குமாறு செய்திருக்க முடியும் என்று யுனைட் ஆய்வு தெரிவிக்கிறது. “லாபத்தைக் குறி வைத்து இயங்குபவர்களை அனுமதித்து விட்டு தொழிலாளர்களையும், மக்களையும் நட்டாற்றில் விட்டது மிகப்பெரிய மோசடியாகும்” என்று யுனைட் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷரோன் கிரகாம் தெரிவித்துள்ளார்.
இதுவே தருணம்
எரிபொருள் துறையைக் கொள்ளை லாபம் சம்பாதிக்கப் பயன்படுத்துபவர்களைத் தடுத்து நிறுத்த இதுவே சரியான தருணமாகும் என்று கூறியுள்ள ஷரோன் கிரகாம், “நம்மால் தாக்குப் பிடிக்க முடியும் என்ற கேள்வியை யுனைட் எழுப்பிக் கொண்டிருக்கவில்லை. எவ்வளவு நாட்கள் நம்மால் தாக்குப் பிடிக்கமுடியாது என்ப தைப் பற்றி நாம் விவாதிக்க வேண்டும்” என்கிறார். அண்மையில், அரசின் தலையீடு காரணமாக பிபி மற்றும் ஷெல் நிறுவனங்களுக்கு பெரும் லாபம் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு நிறுவனங்களும் 5 ஆயிரத்து 500 கோடி பவுண்டுகள் லாபத்தை ஈட்டியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்களின் வங்கிக் கணக்கு களில் இருந்த சேமிப்புகள் தீர்ந்து போய்க் கொண்டிருக்கும் வேளையில், நிறுவன முத லாளிகள் மற்றும் பங்குதாரர்களின் லாபம் விண்ணை நோக்கிப் பறக்கின்றன என்பது பெரும் மோசடியானதாகும் என்று ஆய்வில் பங்கேற்ற வர்களில் ஒருவரும், தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி ஆய்வு செய்து வருபவரான கேட் ஹாப்ஸ் கூறியுள்ளார். ஆனால் இதைத் தடுக்க முடியாது என்றெல்லாம் இல்லை. முடியும் என்பதை யுனைட் மேற்கொண்டுள்ள ஆய்வு எடுத்துரைக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.