ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை வலுப்படுத்துக!
உலக மக்களுக்கு கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் அறைகூவல்
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொழிலா ளர் கட்சிகளும் கண்டித்து கூட்டறிக்கை வெளி யிட்டுள்ளன. மேலும் அனைத்து நாடுகளிலும் உள்ள மக்கள் ஏகாதி பத்திய எதிர்ப்புப் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளன. அவ்வறிக்கையில், இஸ்ரேல் துவங்கிய தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ஈரான் மீது அமெ ரிக்கா தாக்குதல் நடத்தி இருப்பது கடுமையான கண்டனத்திற்கு ரியது. ஆப்கானிஸ்தான், இராக், லிபியா, சிரியா மற்றும் பாலஸ்தீனத்தில் இன்றும் நடைபெறும் இனப்படுகொலைக ளுக்குப் பிறகு, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் இப்போது மத்திய கிழக்கில் ஒரு நாட்டின் ரத்தத்தை குடிக்கின் றன. இந்த ஏகாதிபத்தியப் போர்கள், அனைத்து நாட்டு மக்க ளையும் ஒரு பரந்த பிராந்தியப் போருக்குள் தள்ளி, முழு மனித குலத்தையும் அழிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அமெரிக்கா, நேட்டோ, இஸ்ரேல் ஆகியவை ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் அழைப்பு விடுக்கின்றன. மேலும், போர்கள், வெளிநாட்டு ராணுவ தளங்கள், வெளிநாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ராணு வங்கள், ராணுவத் தளவாடங்கள் மற்றும் அணு ஆயுதங்க ளுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் தீவிரப்படுத்த வேண்டும். ஈரான், பாலஸ்தீனம், லெபனான், சிரியா, ஏமன் என மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாட்டு மக்களுடனான ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம் என அறைகூவல் விடுத்துள்ளன. இந்த கூட்டு அறிக்கையில் அல்பேனியா, ஆஸ்திரே லியா, ஸ்வீடன், சிரியா, துருக்கி, பராகுவே, கிரீஸ் ஆகிய நாடு களின் கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஆஸ்திரியா தொழிலாளர் கட்சி, ஸ்பெயினின் தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி, ருமே னிய சோசலிச கட்சி ஆகியவை கையெழுத்திட்டுள்ளன.