இஸ்ரேலியர்களின் ஆக்கிரமிப்பை அம்பலப்படுத்திய ஆவணப் படத்தில் பணியாற்றிய பாலஸ்தீனர் படுகொலை
காசா,ஜூலை 29- பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதியை ஆக்கிர மித்து வரும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களால், பாலஸ்தீன ஆர்வலரும் ஆசிரியருமான அவ்தா ஹத்தலீன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேல் பகுதியைச் சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் இஸ்ரேல் ராணுவ வீரர்களின் வன்முறைகள், அவர்கள் எவ்வாறு பாலஸ்தீனர்களின் சொந்த நிலத்தை ஆக்கிரமித்து வருகிறார்கள் என்பது குறித்து “நோ அதர் லேண்ட்” என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. இந்த ஆவணப் படமானது கடந்த மார்ச் மாதம் சிறந்த ஆவ ணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றது. அவ்தா ஹத்தலீன் இந்த ஆவணப் படத்தை இயக்கிய இயக்குநர்களுக்கு பெருமளவில் தரவுகள் வழங்கி அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர் ஆவார். இவர் மசாஃபர் யட்டா பகுதியிலுள்ள உம் அல்-கெயிர் எனும் கிராமத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் நடத்திய தாக்கு தலின் போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதனை பாலஸ்தீன கல்வி அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு இஸ்ரேலியர் மற்றும் 4 பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேல் காவல் துறை இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.