பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ரிஷி சுனாக், பொது மக்களுக்கு ஆற்றிய உரையில், தனது கட்சியின் முந்தைய அரசுகளில் சில தவறுகள் நடந்தன என்பதை ஒப்புக் கொண்டார். புதிய அமைச்சரவையும் அமைக்கப்பட்டுள்ளது. சில அரசு புள்ளி விபரங்கள் கசிந்ததையொட்டி பதவி விலகி சுவேலா பிரேவர்மன் மீண்டும் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.