பாரீஸ் ஜூலை 28 - 33-ஆவது ஒலிம்பிக் போட்டிகள், பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் நடைபெற்று வருகின்றன.
இதன் இரண்டாவது நாளான ஞாயிறன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 221.7 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்து பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை (வெண்கலம்) பெற்றுக் கொடுத் துள்ளார். இந்த பிரிவில் தென்கொரிய வீராங்கனை ஓ யே ஜின் 243.2 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை யும், மற்றொரு தென்கொரிய வீராங்கனை கிம் ஏஜி 241.3 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக் கத்தையும் வென்றனர்.