(1947 பிப்ரவரி 26 முதல் மார்ச் 3 வரை லண்டனில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாட்டில் இறுதி நாளன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம். இந்த தீர்மானத்தை ரஜனி பாமி தத் அவர்கள் முன் மொழிய பாலஸ்தீன கம்யூனிஸ்டுகள் எமிலி டவ்மா மற்றும் மிகுனிஸ் வழி மொழிந்தனர். அரேபிய-யூத தேசிய இனப்பிரச்சனையை எப்படி அணுக வேண்டும் என்பதையும் பாலஸ்தீனத்துக்கு தீர்வு என்ன என்பதையும் இந்த தீர்மானம் விளக்குகிறது. யூத மதவெறியான சியோனிசம் குறித்து 1947இல் இந்த தீர்மானம் தீர்க்கதரிசனத்துடன் முன்வைத்த எச்சரிக்கை இன்று உண்மையாகியுள்ளது. அன்று இஸ்ரேல் எனும் தேசம் உருவாக்கப்படவில்லை.)
தகவல்: ஏ.கே.பத்மநாபன்,
தலைவர், மத்திய கட்டுப்பாட்டுக் குழு, சிபிஐ(எம்)
ப ிரிட்டன் சாம்ராஜ்யத்தின் கீழ் உள்ள தேசங்களில் செயல்படும் கம்யூ னிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகளா கிய நாங்கள் கூடியுள்ள இந்த மாநாட்டில் பாலஸ்தீன மக்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் அவர்களின் போராட்டத் துக்கு முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கி றோம். பாலஸ்தீன மக்கள் பிரிட்டன் ஏகாதி பத்தியத்தின் ராணுவ/ அரசியல்/ பொருளாதார அடக்குமுறையை எதிர்த்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரத் திணிப்பு மற்றும் நீண்ட கால சூழ்ச்சி திட்டங்களை எதிர்த்தும் கடுமையாகப் போராடி வருகின்றனர்.
பாலஸ்தீன மக்களின் மீது திணிக்கப் பட்டுள்ள மூர்க்கத்தனமான காலனிய அடக்கு முறையை நாங்கள் வன்மையாக எதிர்க்கி றோம்; கண்டிக்கிறோம். காலனிய அடக்கு முறையால் துன்பப்படுகிற மக்களுக்கு எங்க ளது ஆதரவை உரித்தாக்குகிறோம்.
பாலஸ்தீனம் ஏகாதிபத்தியத்தின் கைப்பாவை அல்ல
தனது எண்ணெய்க் கொள்ளையை அரங் கேற்றுவதற்கும் சூயஸ் கால்வாயை கட்டுப்படுத் தவும் பாலஸ்தீனத்தை தனக்குக் கீழ் உள்ள ஒரு பிரதேசமாக பயன்படுத்தவும் மேலும் மத்தியக் கிழக்குப் பகுதி முழுவதிலும் தனது நலனை நிலைநாட்ட ஒரு பூகோள பகுதியாகவும் தொலைநோக்குப் பார்வையில் செயல்படும் ஏகாதிபத்திய சூழ்ச்சியை முடிவுக்கு கொண்டுவர நாங்கள் வலியுறுத்துகிறோம். அப்பகுதி மக்களின் நலன் மற்றும் உரிமைக ளுக்கு எதிராகச் செயல்படுவதன் விளைவாக உலக அமைதியையே அச்சுறுத்தும் ஏகாதி பத்தியச் செயலை நாங்கள் நிராகரிக்கிறோம்.
சுதந்திரத்தை விரும்பும் அனைவரும் பாலஸ்தீனம் மற்றும் உலகம் முழுவதிலும் சமாதானத்தை தேடும் அனைவரும் ஒன்றி ணைந்து கீழ்கண்டவற்றை வலியுறுத்த வேண் டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கி றோம்:
K பாலஸ்தீனத்திலிருந்து பிரிட்டன் ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும். பாலஸ்தீன மக்களின் நிலத்தில் யூதர்களு க்கு தேசம் உருவாக்க வேண்டும் எனும் ஐ.நா.சபைக்கு முன்பிருந்த “லீக் ஆஃப் நேஷன்” அமைப்பின் கட்டளை திரும்பப்பெற வேண்டும்.
Kசுதந்திரமான ஜனநாயக பாலஸ்தீன தேசம் உருவாக்கப்பட வேண்டும்.
அங்கு வாழும் அரேபியர்கள் மற்றும் யூதர் கள் அனைவருக்கும் முழு மத சுதந்திரமும் பண்பாட்டு உரிமைகளும் ஏனைய வாய்ப்புக ளும் உருவாக்கும் விதத்தில் இந்த தேசம் அமைய வேண்டும்.
ஆங்கிலோ- அமெரிக்க சூழ்ச்சி
இதன் மூலம்தான் பாலஸ்தீனம் சுதந்தி ரத்தையும் பாதுகாப்பையும் பெற இயலும். ஏகாதிபத்திய சக்திகளின் ராணுவத்திடமி ருந்து மட்டுமல்ல; ஏதாவது ஒரு வடிவத்தில் பாலஸ்தீன மக்களைச் சுரண்டவும் அவர்க ளது தேச விடுதலை இயக்கங்களை நசுக்கவும் முயலும் அந்நிய மூலதனத்தின் பிடியிலி ருந்தும் பாலஸ்தீனம் விடுதலை பெற மேற்கண்ட முடிவுகள் செயல்படுத்தப்பட வேண்டும்.
பாலஸ்தீனம் என்பது ஆங்கிலோ-அமெ ரிக்க அரசுகளின் சூழ்ச்சிக்குட்பட்ட பிரச்சனை அல்ல. மாறாக பாலஸ்தீன மக்கள் தமது போராட்டம் மூலம் தேச விடுதலை பெறுவதை ஐக்கிய நாடுகள் சபை இப்பொழுதே ஆதி க்கட்டும்.
எழுச்சி பெற்றுவரும் அரேபிய தேசிய இயக்கத்தை நாங்கள் வாழ்த்துகிறோம். மத்திய கிழக்கு ஆசியா முழுவதும் தினம்தோறும் இந்த விடுதலை இயக்கம் வலுப்பெற்று வருகிறது. அதே போல ஏகாதிபத்தியத்திடமிருந்து விடு தலை பெற அரேபிய மக்களுடன் ஒன்றி ணைந்து பொதுவான போராட்டத்தில் இணைய வேண்டும் என உணர்ந்துள்ள யூத மக்களி ையே அதிகரித்து வரும் போராட்ட சக்திகளை யும் நாங்கள் வாழ்த்துகிறோம்.
“சியோனிசம்” குறித்து எச்சரிக்கை
“சியோனிசம்” குறித்து நாம் அனைத்து யூத மக்களுக்கும் எச்சரிக்கை செய்கிறோம். “சியோனிசம்” பாலஸ்தீனத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ யூத அரசாக ஆக்கி அதனை மத்திய கிழக்கு ஆசியாவில் ஏகாதி பத்திய சக்திகளின் தளமாகவும் அந்த சக்திக ளின் கூட்டாளியாகவும் மாற்றிட முயல்கிறது. யூத மக்களின் கவனத்தை “யூத வெறுப்புக் கான” உண்மையான தீர்வு என்பதிலிருந்து திசைதிருப்ப முனைகிறது. யூத மக்கள் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் அங்கு முழு உரிமை யுடன் வாழ வழிவகை செய்வதுதான் ஜனநாய கத் தீர்வாக இருக்க முடியும். “சியோனிசம்” எனும் கருத்தாக்கத்தை எதிர்ப்பது தான் பாலஸ்தீன யூதர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்க இயலும். “சியோனிசம்” மூலம் மத்திய கிழக்குப் பகுதியில் யூதர்களை தமது கருவியாக உருவாக்க ஏகாதிபத்தியம் முயல்கிறது. “சியோ னிசம்” பாலஸ்தீன தேசிய விடுதலை போராட் டத்துக்கு எதிராகவும் ஐரோப்பாவின் ஜன நாயக முற்போக்கு இயக்கங்களுக்கு எதிராக வும் சோவியத் யூனியனுக்கு எதிராகவும் நிலைபாடு எடுக்கிறது என்பதை யூத மக்கள் உணர வேண்டும்.
ஆங்கிலோ – அமெரிக்க சக்திகள் “சியோ னிசத்தை” தமது பிரித்தாளும் சூழ்ச்சிக்காக பயன்படுத்துவது மட்டுமல்ல; அந்த சக்திகள் பிற்போக்கு அரேபிய சக்திகளின் ஆதரவை பெறவும் முயல்கிறது. அதன் மூலம் மத்திய கிழக்கு ஆசியாவில் சோவியத் யூனியனுக்கு எதிரான தளத்தை உருவாக்கவும் மத்திய கிழக்கில் விடுதலை போராட்டங்களுக்கு எதி ராகவும் கூட இந்த சக்திகள் செயல்படு கின்றன.
அரேபிய பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக வும் அரேபிய மக்களை நாங்கள் எச்சரிக்க வேண்டியுள்ளது. அவர்கள் தேசிய விடுத லைப் போராட்டங்களுக்கு துரோகம் செய்து மக்களின் நலனுக்கு எதிராக தமது சுயநல தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முனை கின்றனர்.
இந்த மாநாட்டின் பிரதிநிதிகளாகிய நாங்கள் பாலஸ்தீன அரேபியர்களுக்கும் யூத மக்களுக்கும் அவர்களின் பரஸ்பர நன்மைக் காக ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட் டத்தில் ஓரணியில் நிற்பது அவசியம் என வேண்டுகோள் வைக்கிறோம்.
யூதர்களுக்கு பாசிசம் செய்த கொடூரம்
அதே சமயத்தில் உலகின் மற்ற பகுதிகளில் யூதர்கள் சந்திக்கும் பிரச்சனை பாலஸ்தீன பிரச்சனை அல்ல! “யூத வெறுப்பு” என்பதை காட்டுமிராண்டித்தனமாக ஒரு எல்லைக்கு, அதனை ஆயுதமாக கொண்டு சென்றது பாசி சம் ஆகும். அதே சமயத்தில் அனைத்து ஆளும் வர்க்கங்களும் மக்களின் போராட்டத்தை பிளவுபடுத்த உண்மையான பிரச்சனைகளி லிருந்து மக்களை திசை திருப்ப “யூத வெறுப்பை” ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.
யூத மக்களின் இன்னல்களை இன்று சிந்திக் கும் எவர் ஒருவரும் மெய்தனக்/ பெல்சன் ஆகிய இடங்களில் யூதர்களுக்கு நடந்த விவ ரிக்க முடியாத கொடூரம் பற்றிய நினைவுகளை சிந்திக்காமல் இருக்க இயலாது. பல்லா யிரக்கணக்கான யூதர்கள் கொலைக் களத்தில் கொல்லப்பட்டதை சிந்திக்காமல் இருக்க இயலாது. ஐரோப்பிய யூதர்களுக்கு எதிராக பாசிச சக்திகள் நடத்திய கொலைபாதக கொடூ ரச் செயல்களை சிந்திக்காமல் இருக்க முடி யாது. அந்த கொடூரங்களிலிருந்து தப்பி உயிர் பிழைத்துள்ள யூத மக்களிடம் அனு தாபம் காட்டாமல் இருக்க இயலாது.\
பாசிசத்தால் பாதிக்கப்பட்ட யூதர்களுக்கு ஆதரவு தருவது என்பது சுதந்திர மக்களின் அனைவரது கடமை! அனைத்து வதை முகாம்க ளையும் மூட வேண்டும் என கோருவது அனை வரின் கடமை! பாதிக்கப்பட்ட யூதர்கள் அந் தந்த தேசங்களில் மறு வாழ்வு பெறுவது இன்றைய உடனடி தேவை. யூதர்களுக்கு மறு நிர்மாணமும் மறுவாழ்வும் சோவியத் யூனி யனிலும் ஐரோப்பாவின் புதிய ஜனநாயக (சோசலிச) தேசங்களிலும் செயல்படுத்தியி ருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். மற்ற தேசங்களில் உள்ள யூதர்களும் மறுநிர்மா ணத்தை கோருவதற்கு இது உத்வேகம் தரும். கொடூர அனுபவம் காரணமாக பழைய இடத்துக்கு திரும்ப மறுக்கும் யூதர்களுக்கு பிரிட்டன்/ஆஸ்திரேலியா/ அமெரிக்கா/ கனடா ஆகிய தேசங்கள் மறுவாழ்வுக்கு பொ ருத்தமான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகிறோம்.
அரேபியர்கள்-யூதர்கள்
ஒற்றுமை ஏன் தேவை?
எந்த ஒரு ஜனநாயகவாதியும் பாலஸ்தீன மக்களின் விருப்பத்துக்கு எதிராக அவர்களது நிலத்தில் யூதர்களின் குடியேற்றம் அமைவதை ஆதரிக்க விரும்பமாட்டார். அவ்வாறு செய்ய வேண்டுமா என்பதை சுதந்திர ஜனநாயக பாலஸ்தீனத்தின் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். வரலாறு நெடுகிலும் அரேபியர்க ளுக்கும் யூதர்களுக்கும் இடையே எவ்வித முரண்பாடும் விரோதமும் இருந்தது இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஏகாதி பத்தியம் “சியோனிசம்” சித்தாந்தம் மூலம் மத்திய கிழக்கில் மக்களை பிளவுபடுத்த முனைந்த பின்னர்தான் இந்த விரோதம் தோன்றியது. ஐரோப்பிய யூதர்கள் மீது பாசிசம் ஏவிய கொடூரத் தாக்குதலை உணர்ந்துள்ள பாலஸ்தீன மக்கள் ஏனைய உலக மக்களை போலவே பாசிசத்தால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு உதவிக் கரம் நீட்டுவர் எனவும் அவர்களுக்கு பாதுகாப்பு நல்குவர் எனவும் உறுதியாக நாங்கள் நம்புகிறோம்.
எனவே அரேபிய தேசிய இயக்கமும் பாலஸ்தீனத்துக்குள் இருக்கும் முற் போக்கு யூத சக்திகளும், தமது ஒன்றுபட்ட நலனை கருத்தில் கொண்டு, ஒன்றுபட்ட இலக்கை அடைய அரசியல் ஒருமித்த கருத்து மட்டுமல்ல; தமது தேசத்தின் விடு தலைக்காகவும் விரைந்து செயல்படுவதற்கான சூழலை உருவாக்குவார்கள் என எங்களது ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்து கிறோம்.
ஏனைய நாடுகளின் முற்போக்கு ஜனநாயக சக்திகள் பாலஸ்தீன மக்களின் போராட்டத்து க்கு ஆதரவு அளிப்பர் என நம்புகிறோம். அந்தந்த தேசங்களில் முற்போக்கு சக்திகள் “யூத வெறுப்புக்கு” எதிராகச் செயல்படுவார்கள் எனவும் தமது தேசங்களில் பரவியுள்ள “சியோ னிசத்தை” அம்பலப்படுத்த யூதர்களுக்கு உதவு வார்கள் எனவும் சுதந்திரத்துக்கும் ஜனநாய கத்துக்குமான பொதுவான போராட்டத்தில் யூதர்களை வென்றெடுப்பார்கள் எனவும் நாங்கள் நம்புகிறோம்.
பாலஸ்தீன விடுதலைக்கு இதுவே பாதை!
ஐரோப்பிய யூதர்களுக்கு உதவிட இதுவே பாதை!
உலகம் முழுவதும் சமாதானத்துக்காகவும் ஜனநாயகத்துக்காகவும் போராடும் சக்திகள் வலுவடைய இதுவே பாதை!
கையெழுத்து:
ஜி. அதிகாரி- இந்தியா
டிம் பக்- கனடா
டெஸ்மண்ட் பக்கில்- மேற்கு ஆப்பிரிக்கா
டேனியல் ஜே டு பிளசிஸ்- தென் ஆப்பிரிக்கா
ஜான் எல். ஹென்றி- ஆஸ்திரேலியா
எஸ். ஜோனனவ்- சைப்ரஸ்
எஸ். மிகுனிஸ்- பாலஸ்தீனம்
குமார்சிறீ- சிலோன்
எச்.ஏ. நாயுடு- தென் ஆப்பிரிக்கா
ரஜினி பாமி தத் (பிரிட்டன்)
ஜெரால்டு பீல்- ஆஸ்திரேலியா
எமிலி ஜி டோவ்மா- பாலஸ்தீனம்
வூ டீன் வாங்க்- மலேயா