world

காசா மீது இஸ்ரேல் போர் சில முக்கிய கள நிகழ்வுகள்

uஇஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 101ஆக உயர்ந்தது. இரண்டாம் உலகப்போரில் கூட இவ்வளவு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது இல்லை.

uஏமனின் ஹவுதி அமைப்பினரின் ராணுவ நடவடிக்கை களுக்கு பின்னால் ஈரான் உள்ளது என அமெரிக்கா கூறுகிறது. இதனை ஈரான் நிராகரித்து உள்ளது. ஹவுதி உட்பட பாலஸ்தீன ஆதரவு இயக்கங்கள் சுயேச்சையாக செயல்படுகின்றன எனவும் அவர்களிடம் தேவையான ஆயுதங்கள் உள்ளன எனவும் ஈரான் கூறியுள்ளது.

uசமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் நடத்திய கருத்து கணிப்பில் காசா பிரச்சனையில் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் செயல்பாடுகள் தவறு என 57சதவீதம் பேரும் சரி என 33சதவீதம் பேரும் கூறியுள்ளனர். எனினும் மக்களின் கருத்து அமெரிக்க நிர்வாகத்தின் செயல்பாடுகளில் பிரதிபலிக்கப் போவது இல்லை. இதே கருத்துக் கணிப்பில் ஜோ பைடனைவிட டிரம்ப் காசா பிரச்சனையை பொருத்தமாக கையாண்டிருப்பார் எனவும் பெரும்பான்மையோர் கூறியுள்ளனர். அமெரிக்க ஏகாதிபத்திய சாம்ராஜ்யத்தின் வெளியுறவு கொள்கைகளை பொறுத்தவரை பைடனுக்கும் டிரம்புக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என அமெரிக்க மக்கள் புரிந்து கொள்ளாதது துரதிர்ஷ்டவசமானது!

uஹமாசின் பூமிக்கடியில் உள்ள ராணுவ கட்டமைப்புகளை அழிக்க வேண்டுமெனில் உலக தேசங்களிடம் உள்ள அனைத்து கண்ணி வெடிகளும் தேவை எனவும் அது சாத்திய
மற்றது எனவும் இஸ்ரேலின் முன்னாள் ராணுவ அதிகாரி
சானல்-13 எனும் இஸ்ரேலிய ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.

uஜனவரி 13 அன்று “பாலஸ்தீன ஆதரவு சர்வதேச நடவடிக்கைகள் தினம்” கடைப்பிடிக்க போவதாக பிரிட்டனில் உள்ள பல மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த அமைப்புகள்தான் 2003இல் ஈராக் மீது அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய படையெடுப்புக்கு எதிராக பெரும் இயக்கம் நடத்தின என்பது நினைவு கூரத்தக்கது. பாலஸ்தீன ஆதரவு இயக்கங்கள் தொடர வேண்டும் என்பது மட்டுமல்ல; அவை வலுவாக்கப்பட வேண்டும்; ஆழமாக்கப்பட வேண்டும் என இந்த தினத்துக்கு அழைப்புவிடுத்த அமைப்புகளில் ஒன்றான “போர் நிறுத்த கூட்டியக்கத்தின்” தலைவர் கிரிஸ் நைனஹாம் கூறியுள்ளார். 

uகாசாவில் 12 லட்சம் மக்கள் “கொடிய பட்டினியை” எதிர்கொண்டுள்ளனர் எனவும் 5 வயதுக்கு கீழ் உள்ள 3,35,000 குழந்தைகள் கற்பனைக்கு அப்பாற்பட்ட பட்டினியில் சிக்கியுள்ளனர் எனவும் ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பு கூறியுள்ளது. பாலஸ்தீன குழந்தைகள் வான் வழியாக வன்முறைகளை சந்திக்கும் அதே வேளையில் அவர்களது பூமியிலேயே பசி/பட்டினியையும் எதிர்கொண்டுள்ளனர் எனவும் அந்த அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது. உலகில் மிக ஆழமான பட்டினியில் உள்ள 5 இல் 4 குழந்தைகள் காசாவில் உள்ளனர் என ஐ.நா.பொது செயலாளர் குட்டரெஸ் கூறியுள்ளார்.