காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இன்று ஒரே நாளில் 80 பேர் உயிரிழந்தனர்.
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல், தனது ஆக்கிரமிப்பை தொடரும் வகையில் காசா மீது கொடூரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
தற்போதுவரை பாலஸ்தீனத்தில் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 14,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் இல்லாமல் தவித்து வரும் நிலையில், காசாவுக்குள் உணவு பொருட்களை கொண்டு செல்லவிடாமல் இஸ்ரேல் ராணுவம் தடுத்து வருகிறது. இதனால் குழந்தைகள் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காசா மீது இஸ்ரேல் இன்று குண்டுமழை பொழிந்தததில் ஒரே நாளில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.