காசா, ஜூலை 27 - காசாவில் டெயிர் அல்-பாலா பகுதி யில் அமைந்துள்ள மருந்துவமனை மீது இஸ்ரேல் படைகள் சனிக்கிழமை (ஜூலை 27) நிகழ்த்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டி ருப்பதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த கொடூர தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடை ந்துள்ளதாகவும், அவர்களில் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கான் யூனிஸ் சிட்டி அருகே யுள்ள அபாசன் நகரில் குடியிருப்புப் பகு திகள் மீதான இஸ்ரேல் படை களின் தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், பானி சுஹைலா நகரில் நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதல்களில் இருவர் கொல்லப் பட்டிருப்பதாகவும், போரால் இடம் பெயர்ந்து மத்திய கான் யூனிஸ் பகுதி யில் தங்கியுள்ள பாலஸ்தீன மக்க ளின் கூடாரங்களில் நிகழ்த்தப் பட்டுள்ள தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.