காசா, டிச.7 - குண்டுவீச்சு தாக்குதலில் படுகாயம் அடைந்தும், உடல் உறுப்புகளை இழந்தும் காசாவில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனக் குழந்தைகள் உயிருக்குப் போராடும் நிலை யில், அக்குழந்தைகள் மருத்துவச் சிகிச் சைக்காக காசாவை விட்டு வெளியேறு வதையும் இஸ்ரேல் தடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், சுமார் 2,500 குழந்தைகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு, யுனிசெப் நிறு வனங்கள் தெரிவித்துள்ளன.
ஓராண்டுக்கும் மேலாக, இஸ்ரேல் நடத்தி வரும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலை யுத்தத்தால் பாலஸ்தீனத்தின் காசா பகுதி மக்கள் கொடும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். கடந்த 2023 அக்டோபர் துவங்கி தற்போது வரை இஸ்ரேலின் குண்டு வீச்சு மூலம் காசாவில் 44 ஆயி ரத்து 500 பாலஸ்தீனர்களை கொன்று குவித்துள்ளது. 1 லட்சத்து 5 ஆயிரம் பேர்களை படுகாயத்திற்கும், ஊனத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.
இவர்களில் 14 ஆயிரம் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவ உத விக்காக காசாவிலிருந்து வெளியேற வேண்டிய நிலையில் உள்ளனர்.
இந்தப் புள்ளி விவரம் உலக சுகாதார அமைப்பு கூறும் கணக்கு. உண்மையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இதை விட அதிகம்.
கொடுங்காயம் அடைந்தவர்கள் 22 ஆயிரம் பேர் என்றும், இவர்களில் உயி ருக்கு ஆபத்தான நிலையில் உயர் சிகிச்சை தேவைப்படுவோர் 7 ஆயிரம் பேர் என்று காசா சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி முஹம்மது அபு சால்மெயா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இவ்வாறு அவசர மருத்துவச் சிகிச்சைக்காக உடனடியாக காசாவிலிருந்து வெளியேற வேண்டிய வர்களில் குழந்தைகள் மட்டும் 2 ஆயிரத்து 500 பேர் என்று கூறப்படுகிறது.
இஸ்ரேலின் அனுமதி கிடைக்காததால், இவர்கள் நாளும் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கின்றனர். உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால், நாளாக நாளாக குழந்தைகளின் உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தங்களது கண் முன் னேயே தங்களது குழந்தைகளின் மரணம் காணும் பெற்றோர் நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வளவுக்கும் குழந்தைகளுக்கான சிகிச்சை விண்ணப்பங்களை அனுப்பியது தனிநபர்களோ, காசா நிர்வாகமோ அல்ல, சர்வதேச நிறுவனங்களான உலக சுகா தார அமைப்பு மற்றும் யுனிசெப் ஆகியவை தான் விண்ணப்பங்களை அனுப்பியிருந்தன.
ஆனால், கொலைகார இஸ்ரேல் குழந்தைகள் என்றும் பாராமல், அவர்கள் மீது குண்டுமழை பொழிந்ததுடன், தற் போது அவர்களின் மருத்துவச் சிகிச்சைக் கும் காசாவை விட்டு வெளியேற அனுமதி வழங்காமல் சர்வதேச சட்டங்களை எல்லாம் மீறி இன அழிப்பில் இறங்கியுள்ளது. காசா வையே மயானக் காடாக்கும் வகையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலைத் துவங்குவ தற்கு முன்பு காசாவில் 36 மருத்துவமனை கள் செயல்பட்டு வந்தன. இந்த 36 மருத்துவ மனைகளில், இப்பொழுது வெறும் 17 மட்டுமே செயல்படுகின்றன. கடந்த 15 மாதங்களில் காசாவின் பெரும்பாலான மருத்துவமனைகளை குண்டுவீசி இஸ்ரேல் தரைமட்டமாக்கி விட்டது. காசாவில் செயல் பட்டுவந்த ஒரேயொரு புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையையும், இஸ்ரேல் தகர்த்து விட்டது. இதனால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரை காப்பாற்ற வாய்ப்பே இல்லை என்ற அவலம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இந்தத் தாக்குதல்களில் காயமடைந்து உடல் பாகங்களை இழந்த நிலையில் சிகிச்சைக்காக வருவோருக்கு மருத்துவம் அளிக்க போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல்- மருத்துவமனை களும் தவித்து வருகின்றன.
அதுமட்டுமன்றி, மருத்துவப் பணி யாளர்களையும் கூட விட்டுவைக்காமல் இஸ்ரேல் குண்டுகளை வீசி கொலை செய்து வருவதும், மருத்துவ சிகிச்சை வழங்குவதற் கும் போதிய மருத்துவர்கள் - செவிலி யர்கள் இல்லாத நிலை காசாவில் ஏற்பட்டுள் ளது. மருத்துவ அத்தியாவசியப் பொருட்க ளுக்கான தட்டுப்பாடும் அதிகமாக உள்ளது.
எனவே தான், பாலஸ்தீனர்கள் சிகிச் சைக்காக காசாவிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற செயலால் நாளுக்கு நாள் குழந்தைகள் செத்து மடி வதைப் பற்றி, காசாவில் பணியாற்றிய யுனிசெப் அதிகாரியான ரோசாலியா போல்லென் பேட்டி ஒன்றை அளித்துள் ளார். அதில், “லியுக்மியா நோயினால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவனான இஸ் லாம் அல்-ராய்ஹெனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டு 6 முறை விண்ணப்பித்தும், அந்த விண்ணப்பங்களை இஸ்ரேல் நிராக ரித்து விட்டது. இதனால், இஸ்லாம் அல்-ராய்ஹென் உயிரிழந்து விட்டான். மேலும், அவனைப் போல ஆயிரக்கணக்கான குழந்தைகள் மருத்துவ உதவிக்காக காத்தி ருக்கின்றனர். இதில் பலர் காத்திருக்கும் காலத்திலேயே உயிரிழந்து வருவது மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.
ஆனால், மருத்துவத் தேவையுள்ள குழந்தைகளையும் அவர்களது குடும்பத்தி னரையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், பாதுகாப்பு சோத னைகள் நடத்தப்பட்ட பின்னரே அவர்கள் வெளியே அனுப்பப்படுவார்கள் என்றும் பாலஸ்தீனர்களின் மனிதாபிமான விவகா ரங்களைக் கையாளும் இஸ்ரேலிய ராணு வத்தின் கோகாட் அமைப்பு சமாளித்துள் ளார். ஆனால், சிறுவன் இஸ்லாமிற்கு அனு மதி மறுக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு அந்த அமைப்பு எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை.
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து 5 ஆயிரத்து 230 நோயா ளிகள் மருத்துவத் தேவைக்காக வெளி யேற்றப்பட்டதை உறுதிசெய்யும் உலக சுகா தார அமைப்பு, அதேநேரம் இந்த ஆண்டு மே மாதம் ரபா எல்லை மூடப்பட்ட பின்னர் வெறும் 342 நோயாளிகள் மட்டுமே வெளி யேற்றப்பட்டனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது