காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி உலகம் முழுவதும் பாலஸ்தீனர்களுக்கு ஆதர வாக வேலை நிறுத்தம் நடைபெற்றது.வேலை நிறுத்தத்திற்கான அழைப்பை பாலஸ்தீன தேசிய மற்றும் இஸ்லாமியக் குழுக்கள் , பாலஸ்தீன அமைப்புகளின் கூட்டணி ஆகியவை அறி வித்திருந்தன.
காசாவில் நடைபெறும் இனப்படுகொலை, இன அழிப்பு மற்றும் மேற்குக் கரையில் நடை பெறும் இஸ்ரேலின் காலனித்துவக் குடியேற் றத்தை அக்கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக் கையில் கண்டித்துள்ளது. “பாலஸ்தீன மக்களின் நியாயமான, நாட்டிற்கான கோரிக்கையை குறை மதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளையும் இந்த வேலைநிறுத்தம் எதிர்க்கிறது,” என்று அவ் வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் நடத்தி வரும் மனிதநேயமற்ற தாக்குதலில் கிட்டத்தட்ட 18,000 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.இதில் 60 சதவீதத்துக்கும் மேற் பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளாக உள்ளனர்.23 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீ னர்களை மிகச் சிறிய நிலப்பகுதிக்குள் இடம் பெயரக் கூறி மிரட்டி பொது மக்கள் இருக்கும் பகுதியில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்துவதால் பலி மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் காசாவில் உள்ள பாலஸ்தீனர்க ளுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தவும் இஸ்ரே லின் குண்டுவீச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் உலகெங்கிலும் உள்ள பாலஸ்தீன ஆதரவா ளர்களும், மக்களின் அன்றாட பொது வாழ்விற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய உலகளாவிய வேலை நிறுத்தத்தை திட்டமிட்டு நடத்தினர்.
பள்ளி,கல்லூரிகள் , வேலைகளை புறக்க ணித்து இந்த போராட்டம் உலகம் முழுவதும் நடை பெற்றது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் வீட்டி லேயே தங்கி உணவகங்கள், வங்கிகள் மற்றும் கடைகளுக்கு செல்வது மற்றும்ஆன்லைன் பரி வர்த்தனைகள் உட்பட அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் தவிர்த்தனர்.
பாலஸ்தீன திரைப்பட தயாரிப்பாளரான பிசான் ஓவ்டா “பொருளாதாரம் மற்றும் தினசரி வாழ்க்கை நடைமுறைகளை “ நிறுத்தும் வேலைநிறுத்தத்தி ற்கு அழைப்பு விடுத்தார். மேலும் உலகம் முழுவ தும் பல தன்னார்வலர்கள்,முற்போக்காளர்கள், பாலஸ்தீன ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இந்த போராட்டத்தில் தங்களை ஈடு படுத்திக்கொண்டு சமூக ஊடக தளங்களில் #StrikeForGaza என்ற ஹேஷ்டேக்கைப் பயன் படுத்தி தங்கள் போராட்டத்தை வெளிப்படுத்தினர்.
லெபனான் அரசு நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களை மூடுவதாக அறிவித்து இந்த போராட்டத்தில் இணைந்தது.மேலும் முஸ்லிம் இறையியலாளர்க ளின் உலகளாவிய அமைப்பான முஸ்லிம் அறி ஞர்களின் சர்வதேச ஒன்றியம்,சர்வதேச மக்கள் மன்றம் உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றன.