இஸ்லாமாபாத்,ஆக.25- பாலிமர் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை 2024 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் வெளியிட திட்டமிடப் பட்டுள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி கவர்னர் ஜமீல் அகமது இந்த தகவலை தெரிவித் திருக்கிறார். “தற்போதுள்ள காகித ரூபாய் நோட்டுகளும் இந்த ஆண்டு டிசம்பர் மாதத் திற்குள் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் மறுவடிவமைப்பு செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் 10, 50, 100, 500, 1000 மற்றும் 5000 மதிப்பு கொண்ட புதிய வடிவமைப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
எனினும் பழைய ரூபாய் நோட்டுகள் இன்னும் ஐந்து ஆண்டுகள் வரை புழக்கத்தில் இருக்கும் எனவும் ந்த 5 ஆண்டு களில் படிப்படியாக பழைய நோட்டுகள் அகற்றப்படும் எனவும் உறுதி கொடுக்கப் பட்டுள்ளது.