இஸ்லாமாபாத், மே 19- பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீதான வழக்குகள் மற்றும் அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை ஒடுக்க ராணு வத்தைக் களத்தில் இறக்கி விட்டுள்ளார்கள். பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கானை வெளியேற்றியதில் இருந்து அவரைக் கைது செய்து சிறையில் அடைப்பதன் மூலம் அவரது அரசியல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி விடலாம் என்று தற்போதைய ஆட்சியாளர்கள் திட்டமிட்டனர். ஒரு வழக்கில் நீதிமன்றத்திற்கு வந்த அவரைக் கடத்திச் செல்வது போன்று காவல்துறையினர் தூக்கிச் சென்றார்கள். சிறை யிலும் அவரை அடைத்தனர். ஆனால் அவரது கைது நடவடிக்கையை சட்ட விரோதம் என்று பாகிஸ்தானின் உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. அவர் மீதான நடவடிக்கைகளை எதிர்த்து பாகிஸ்தான் முழுவதும் ஏராளமான போராட்டங் கள் நடந்து வருகின்றன. அந்தப் போராட்டங்களு க்கு மக்களின் ஆதரவும் இருப்பதால் ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்குகள் மற்றும் அவர்களை விசாரிக்கும் முறைகள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியாளர்களின் நட வடிக்கைகள் பெரும் கவலையளிப்பதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. தங்களை எப்படி ஆட்சியாளர்கள் நடத்து கிறார்கள் என்பது பற்றி இம்ரான்கானின் பாகிஸ் தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் நிர்வாகி களில் ஒருவரான அக்ரம் விளக்குகிறார். இம்ரான் கான் கைது செய்யப்பட்டார் என்று கேள்விப்பட்ட வுடன். வெளியில் வந்து காவல்துறையால் அவர் “கடத்தப்பட்டதற்கு” எதிராக வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். “கட்சி ஆதர வாளர்கள் வாட்ஸ் அப் குழுவில் செய்தி அனுப்பினேன். நாம் அனைவரும் குழுமி சட்டவிரோதமான இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். இம்ரான்கானின் விடுதலையைக் கோரி அவரும், மேலும் 80 பேரும் பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியின் வீதிகளில் போராடுகிறார்கள். அவர்களைத் துணை ராணுவம் குறி வைக்கிறது. வேறொரு வழக்கில் அக்ரமைக் கைது செய்கிறார்கள். இவரை மட்டு மில்லாமல், இம்ரான் கான் கைது நடவடிக்கை க்கு எதிராகப் போராடியவர்களில் 40 பேரையும் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். ஐந்து காவல் நிலையங்களுக்கு பாதுகாப்புப் படை யினரின் வாகனங்களில் இழுத்தடிக்கப்படு கிறார்கள். மே 11 ஆம் தேதியன்று வழக்கு எதுவும் பதியாமல் விட்டு விடுகின்றன. அந்நாளில்தான் இம்ரான்கானின் கைது நடவடிக்கையை சட்ட விரோதமானது என்று பாகிஸ்தான் உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்கிறது.
ராணுவச் சட்டம் பாய்கிறது
பஞ்சாப் மாகாணத்தில் போராடியதற்காக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இம்ரான்கான் கட்சி யான தெஹ்ரீக்-இ-இன்சாப்பின் ஆதரவாளர் களான இவர்கள் தங்கள் கட்சித்தலைவரின் சட்டவிரோத கைது நடவடிக்கைக்கு எதிராக வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். இவர்களைக் கைது செய்து ராணுவத் தளபதிகளில் ஒருவரின் வீட்டைத் தாக்க முயன்றதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இதனால் இவர்களை ராணுவச் சட்டங்களின் கீழ் விசாரிக்கப் போவதாகவும், அந்த விசார ணையை ராணுவ நீதிமன்றங்கள் செய்யும் என்றும் அறிவித்துள்ளனர். ராணுவத்தின் இந்தத் தலையீட்டுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. 1947 ஆம் ஆண்டில் விடுதலை கிடைத்ததில் இருந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நேரடியாகவே பாகிஸ்தானின் அதிகாரத்தைத் தன் வசம் வைத்திருந்த ராணுவம் தற்போது மறைமுக மாகத் தலையிடத் தொடங்கியுள்ளது என்று மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். தனது பதவி நீக்கத்தில் ராணுவத்தின் தலையீடு இருப்பதாக இம்ரான்கானும் கூறி வருகிறார்.