world

img

நேபாள பெருவெள்ளம்: தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

நேபாள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170-ஐ தாண்டியது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் கிழக்கு மற்றும் மத்திய நேபாளத்தின் பெரும் பகுதிகள் பலத்த மழையைத் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கின.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170-ஐ தாண்டியுள்ளது.

காத்மாண்டு பள்ளத்தாக்கில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அங்கு இதுபோன்ற வெள்ள பாதிப்பு கடந்த 40 முதல் 45 ஆண்டுகளில் ஏற்பட்டதில்லை என்று கூறப்படுகிறது.

வெள்ளத்தில் 322 வீடுகள், 16 பாலங்கள் சேதமடைந்துள்ளன. சுமார் 3,626 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் தகவல்கள் வெளியாகியுள்ளது.