world

காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்குமா உணவு உற்பத்தி?

துபாயில் நடைபெறும் காப்28 காலநிலை மாநாட்டை ஒட்டி ஐநா உணவு மற்றும் வேளாண் கழகம் (FAO) உலகில் பட்டினியைப் போக்க உதவும் வழிகாட்டு ஆவணத்தை வெளியிட்டுள்ளது. உலக உணவு முறைகளை மாற்றம் செய்வதன் மூலம் புவி வெப்ப உயர்வை  கட்டுப்படுத்தமுடியும். துபாய் காப்28 மாநாட்டில் நடைபெறும் உணவு மற்றும் விவசாயம் பற்றிய அமர்விற்காக 1.5  டிகிரிக்குள் உணவு உற்பத்தியை அதிகரிப்பது குறித்த ஆய்வறிக்கையின் முதல் தவணை மாநாட்டில் வெளியிடப்பட்டது.

இருபது முக்கிய இலக்குகள்
“உலக உணவு முறையை சமநிலைப்படுத்துவதன் மூலம் பட்டினியை போக்கமுடியும். உலகின் சில பகுதிகளில் மக்கள் அதிக புரதத்தை உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். வேறு சில இடங்களில் மக்களுக்கு இந்த சத்து போது மான அளவு கிடைக்கவில்லை. சில பகுதிகள் குறைவான  வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி பலனடைகின்றன. வேறு சில பகுதிகள் இவற்றைப் போதிய அளவு உபயோகிப்ப தில்லை. சில இடங்களில் கால்நடை மேய்ச்சலை ஒழுங்கு படுத்தவேண்டிய நிலை உள்ளது. வேறு சில இடங்களில் அழிக்கப்பட்ட இயற்கை வாழிடங்கள் மீட்கப்படவேண்டி யுள்ளன என்று குறிப்பிட்டுள்ள இந்த அறிக்கை 2025-2050 காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இருபது முக்கிய இலக்குகள் பற்றியும் கூறியுள்ளது. இதன் விரிவாக்கம் வரும் ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் காப் மாநாடுகளில் வெளியிடப்படும். 

2030ஆம் ஆண்டிற்குள் கால்நடை மேய்ச்சல் மூலம் வெளியிடப்படும் மீத்தேன் உமிழ்வை 25 விழுக்காடு குறைத்தல், உலக மீன் பிடித்தலை நீடித்த நிலையான வளர்ச்சியடையச்செய்தல், பாதுகாப்பான குடிநீர் வசதியை உலக மக்கள் அனைவருக்கும் வழங்குதல், உணவு  விரயத்தைப் பாதியாகக் குறைத்தல், விறகு உள்ளிட்ட எரிபொருட்களைப் பயன்படுத்தி சமைப்பதைத் தடுத்தல் போன்றவை இந்த இலக்குகளில் அடங்கும்.